நிலமை அவ்வளவு மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது
வெளிநாட்டு வாசி ஊருக்கு வரும்பொழுது முன்பு காட்சிகள் இப்படித்தான் இருக்கும், பெரிய காரில் குடும்பமே ஏறி விமான நிலைய வாசல்களில் காத்திருப்பார்கள்
அவன் வந்தததும் தழுவுவார்கள் அழுவார்கள், காரிலே ஊட்டுவார்கள், கொஞ்சிகொண்டே இருப்பார்கள், வீட்டில் கிழவிகள் காத்திருந்து கட்டியணைத்து அழும் ஊரே கூடும். குடிமகன்களுக்கு பாட்டில் முதல் சென்ட் வாட்ச் சமீபத்தில் போன் என ஏக கடமைகள் உண்டு
அதுவும் போக தூரத்து உறவு முகத்தை தூக்கி அலைவான், குரல்கள் இப்படி எல்லாம் கூட ஒலிக்கும்
“இன்னைக்கு நாயி சம்பாதிச்சிட்டு, அன்னைக்கு டவுசர் இல்லாம அலைஞ்சான் நான் தான் டவுசர் எல்லாம் கொடுத்தேன் நன்றி கெட்ட பய..
எவ்வளவு நாள் சோறு போட்டேன்.. ஒரு தலவலி தைலம் கொடுக்கட்டாம்? கொடுக்கமாட்டான் பாசம் கெட்ட பய
எலேய் பாட்டில் இல்லாம வந்ததே தப்பு, ஒழுங்கா 5 ஆயிரம் எடுத்து வை இல்லண்ணா…
அய்யா நல்லாருக்கியா, அடுத்தவாட்டி என் பேத்திக்கு வாட்ச் கொண்டுவா, உங்க தாத்தா மாதிரியே உனக்கும் நல்ல மனசு
அப்பாவு அய்யா சிகரெட் இருக்கா.. வீட்ல ஏதும் வேலைன்னா சொல்லு..”
இன்னும் ஏக கலாட்டாக்கள், இதெல்லாம் கொரோனாவுக்கு முன்னால் இப்பொழுது காட்சிகள் மாறிவிட்டன
“நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன்
ஏ வந்தீக, சரி ஆஸ்பத்திரிக்கு போயிருங்க, ஊரே நேத்து கூடி சொல்லிட்டு போச்சி, ஊருக்குள்ள வந்தா எங்களையும் விலக்க்கி வச்சுருவாக,, நீங்க ஆஸ்பத்திரிக்கு போங்க இன்னும் வெளிநாட்டுல இருக்குறதா நினைச்சிக்குறோம்
ஏ பாட்டி உன் பேத்திக்கு வாட்ச்..
கிறுக்கு பயல, எதுக்கு வாட்ச பாத்துட்டே சாகவா? வீட்டு பக்கம் வந்தா கைய கால உடைச்சிருவேன்
அந்த தலைவலி தைலம்..
எனக்கு ஒரு குறை இல்ல ராசா… உன் பாசம் போதும் அப்படியே ஆஸ்பத்திரிக்கி போயிருய்யா
மாமா நல்லாயிருக்கியளா?
இதுவரை நல்லாருந்தோம் நீ வந்து பார்காமல் இருந்தா இன்னும் நல்லாருப்போம்
சித்தப்பா
சித்தப்பா கிழிச்சாரு ஓடிரு…
அந்த சொத்து விவகாரம்?
அது அப்படியே கிடக்கட்டும், நீ இந்தபக்கம் வந்த கொன்னுருவேன் அப்புறம் எனக்கு மட்டும்தான் சொத்து
லேய் மக்கா பாட்டில்..
நீ அந்த மரத்தடில வச்சிட்டு போ, 14 நாள் கழிச்சி எடுக்கலாம் ஒரு பயலும் எடுக்கமாட்டான் மக்கா
அண்ணே சிகரெட்
மண்வெட்டியால மண்டைய பொளந்திருவேன், நீரு சம்பாதிச்சிட்டியரு இங்க உசுராவது மிஞ்சணுமில்ல
இல்லண்ணே உங்க தம்பிக்கு விசா
ஆள விடுசாமி, உங்க சகவாசமே வேண்டாம்..
ஒரு பையன் அமெர்ரிக்காவுல இருக்கான் உங்க மகளுக்கு
இருக்கட்டும், உன்கிட்ட நாயா கேட்டுச்சி… போய்யா
இன்னார் மவன் வந்துட்டான் அந்த குடும்பத்த விலக்கி வைங்க, கோயில்ல விடாதீக, பால்காரன் காய்கறிகாரன்கிட்ட சொல்லுங்க. ஊரை அழிக்க வந்துட்டான்….”
அரசு உடனே செய்யவேண்டியது இனி வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கு விமான நிலையம் அகதி முகாம் அமைப்பது, நிலமை அவ்வளவு மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது