கொரோனா கருப்பு பணப்பறிமாற்றத்தை நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
கொரோனா இந்தியாவில் ஊரடங்கை கொண்டுவந்தாலும் பொருளாதார பின்னடைவினை கொண்டு வந்தாலும் ஓசைபடாமல் ஒரு நல்ல விஷயத்தை செய்துகொண்டிருக்கின்றது
இதை எல்லாம் ஆதாரத்தோடு விளக்கமுடியாது, அது நம் வேலையும் அல்ல எனினும் சொல்வதை சொல்லிவிடலாம்
கருப்புபண நடமாட்டம் , கடத்தல் பொருளால் வரும் முறையற்ற பணத்தை 0% எனும் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது கொரோனா
ஆம் வர்த்தகம் மட்டுபடுத்தபட்டிருப்பதால் கருப்பு பணத்தை வைத்திருக்கும் கூட்டம் திகைக்கின்றது, இதே காலகட்டத்தின் முடிவில் பணமதிப்பினை இல்லாமல் செய்வதாக அரசு அறிவித்தால் என்னாகும் என கலங்கி நிற்கின்றது
கடல் தாண்டிய போக்குவரத்து நிறுத்தபட்டதால் கடத்தல் தங்க பணம், போதை பணம் எல்லாம் தடுக்கபட்டாயிற்று
முன்பெல்லாம் வங்கி வழி பரிமாற்றத்தை விட கடத்தல் தங்கமும் போதையுமே பணம் வரும் பெரும் வழிகள் இதனால் அரசு அடைந்த சிக்கல் கொஞ்சமல்ல
அரசுக்கு வரவேண்டிய அந்நிய செலாவணியெல்லாம் யாருக்கோ சென்றது
இப்பொழுது மிக சரியாக வரவேண்டிய வகையில் வருகின்றது, கடத்தல் கோஷ்டி எல்லாம் முக்காடு போட்டு அழுது கொண்டிருக்கின்றது
இன்னும் ஏகபட்ட உதவிகளை செய்கின்றது கொரோனா, பலவற்றை வெளிப்படையாக சொல்லமுடியாது சொல்ல முடியும் விஷயங்களை மட்டும் அவ்வப்பொழுது சொல்கின்றோம்
சுருக்கமாக சொன்னால் மோடியின் பல திட்டங்களுக்கு மவுனமாக உதவி , கண்ணுக்கு தெரியா சக்தியாக அவருக்கு பக்க பலமாக நின்றுகொண்டிருக்கின்றது