தி.மு.க. வில் விஜயபாஸ்கர் இருந்திருந்தால்!
கருணாநிதி, ஸ்டாலின் என இரு பெயர்களை மட்டுமே அடிக்கடி உச்சரிக்கும் அறை நண்பன் புதிதாக ஒரு பெயரை உச்சரிப்பது மகா அதிர்ச்சி
“அண்ணாச்சி விஜயபாஸ்கர் ஒரு கெட்டிக்கார அமைச்சர் அண்ணாச்சி, என்ன இருந்தாலும் நம்ம ஏரியா, மருது பாண்டி வம்சம்ணா சும்மாவா, நாட்டு மக்களுக்கு ஒண்ணுண்ணா எப்படி நிக்குறார் பாத்தியரா? நம்ம ரத்தம்லா..
டேய் நீ திமுக தானே?
அண்ணாச்சி, மாற்றான் தோட்டத்து கொய்யாபழம் இனிக்கும்னு கலைஞர் சொல்லியிருக்கார்
அப்படி என்னடா விஜயபாஸ்கர் மேல அபிமானம்
நல்ல மனுஷன் அண்ணாச்சி, ஜல்லிகட்டு மீட்டதுல இருந்து இப்பவர என்ன பிரச்சினைனாலும் முன்னால நிப்பாரு அண்ணாச்சி, ரொம்ப சிம்பிளான மனுஷம்லா, இப்பவும் ஊருக்கு வந்தா சைக்கிள்ளதான சுத்துவாரு
டேய் அவர்மேலதான குட்கா ஊழல்னு உங்க தளபதி சொன்னாரு?
அண்ணாச்சி, தளபதி விசாரிக்க சொன்னாரு , உங்க மோடி விசாரிக்கல , அதெல்லாம் இப்ப பேசகூடாது
உங்க ஏரியாதான விஜயபாஸ்கர சந்திக்கிறது..?
அண்ணாச்சி அவரு கொரோனாவுக்கு விழுந்து விழுந்து மக்களை பாதுகாக்குறது பத்தி நம்ம ஊருக்கு பேசிட்டு இருந்தது அவர் காதுக்கு போயிட்டாம், மலேசியாவுல இருந்து வாழ்த்துறாங்கண்ணு சந்தோஷபட்டாராம்
டேய் இது கட்சி துரோகம் இல்லையா?
இல்ல அண்ணாச்சி அவர பார்க்க போகணும்
பார்த்து?
இவ்வளவு நல்ல மனுஷணா இருக்கியள, நல்லவுக எல்லாம் திமுகவுலதான இருக்கணும் அதுதான மக்களுக்கான கட்சின்னு சொல்லி கூட்டிட்டு வரணும்
கூட்டிட்டு வந்து அவர ஸ்டாலின் குடும்பத்துக்கு சுகர் டெஸ்ட் பண்ற டாக்டரா வீட்டு வாசல்ல நிறுத்தணும் அதுதானடா உன் கெட்ட எண்ணம்?
போய்யா சங்கி
இல்லடா, திமுகவுல இருந்தா அவர் அமைச்சர் ஆகியிருப்பாரா இல்லை இந்தமாதிரி வாய்ப்பு கிடைக்குமா?
இதுக்குத்தான் சங்கி பயலுககிட்ட பேசவே கூடாது அண்ணாச்சி..”