கொரொனாவுக்கும் மய்யத்துக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும்?
கமலஹாசன் வீட்டில் கொரோனா பாதிக்கபட்ட வீட்டுக்கான முத்திரை ஒட்டபட்டு பின் நீக்கபட்டது கொரோனா கால காமெடிகளில் ஒன்று
கமலஹாசன் 6 வயதிலே கார் வாங்கியவர், ஆம் அந்த “களத்தூர் கண்ணம்மா” படத்தின் வெற்றியில் என்ன வேண்டும் என செட்டி கேட்டபொழுது கார்தான் வேண்டும் என பிடிவாதமாய் வாங்கியவர்
அந்த கமலுக்கு பின் ஏகபட்ட சொத்துக்கள் சேர்ந்தன, இப்பொழுதும் கவனியுங்கள் அரசியலுக்கு சல்லி காசு தன் சொந்த காசு என அவர் செலவழித்திருக்கமாட்டார்
அப்படிபட்ட கலமஹாசனுக்கு வீடுகளும் சொத்தும் ஏராளம், அதில் ஆழ்வார்பேட்டை வீட்டில் இந்த நோட்டீஸ் ஓட்டபட்டு கமலஹாசனுக்கு கொரோனா என்ற சலசலப்பு வந்தது
கமல் எப்பொழுது எந்த பெண்ணோடு வாழ்கின்றார் என்பதை போல , எப்பொழுது எந்த வீட்டில் இருக்கின்றார் என்பதும் மர்மமே
தன் ஆழ்வார்பேட்டை வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டபட்டதை அறிந்து அதிர்ந்தார் கமல், காரணம் அங்கு அவர் வசிக்கவில்லை ஆனால் மக்கள் நீதி மையத்துக்கு அது ஒதுக்கபட்டது
மையத்து ஆட்கள் சும்மாவே ஒருமாதிரி பாதிக்கபட்டவர்கள் ஆயிற்றே இதில் கொரொனா வேறா என அலறிய கமல் மாநகராட்சியினை தொடர்பு கொள்ள அவர்கள் முகவரி மாறிவிட்டதாக சொல்லிவிட்டு நோட்டீஸை அகற்றிவிட்டார்கள்
இப்படி எவ்வளவு கொரோனா நோயாளிகளை முகவரி மாற்றி தப்பவிட்டார்களோ சென்னை மாநகராட்சியினர்
அதெல்லாம் இருகட்டும், இந்த கொரொனாவுக்கும் மய்யத்துக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும்? இரண்டுமே அதிக ஆபத்தில்லா ஆனால் மிகபெரும் குழப்பம் ஏற்படுத்தும் விஷயமல்லவா?
அவ்வகையில் சென்னை மாநகராட்சி மிக சரியாகத்தான் செய்திருக்கின்றது, தர்மப்படி இது சரி ஆனால் சட்டப்படி தவறு.