பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது.
பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது, கிணற்றின் ஆழத்தில் மெல்ல நீர் சுரப்பது போல நன்றியுணர்வும் பெருமிதமும் மெல்ல சுரக்கின்றது.

ஆம் நாம் சொன்னபடியே பாரதம் முழுக்க விளக்கேற்ற சொல்கின்றார் மோடி.
நிச்சயம் நாம் சொல்லி ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை, நாம் கூவித்தான் சூரியன் வருகின்றது இல்லையென்றால் வராது என சேவல் நினைத்தால் அது மடத்தனம்
இந்த மண்ணின் தர்மம் அது, இறந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது இந்த மண்ணின் தாத்பரியம். நாம் அதைத்தான் சொன்னோம்
இந்த மண்ணின் பாரம்பரியத்தை அட்சரம் பிறழாமல் பின்பற்றுபவர் என்ற முறையில் பாரத பிரதமரும் அதையே சொல்கின்றார்
நாம் வலியுறுத்தும் பொழுது சொன்னோம் . “அதிகாரம் யாரிடம் இருக்கின்றதோ அவர்கள் இதை சொல்லட்டும்” என சொல்லியிருந்தோம்
மிக சரியான நபரை தர்மம் காட்டியிருக்கின்றது, சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவரை தர்மத்தின் கரம் தொட்டிருக்கின்றது
இது நிச்சயம் பாரத மக்களின் விருப்பம், அவர்கள் ஆன்மாவின் குரல்
அதைத்தான் நாமும் சொன்னோம், பாரதத்தின் தலைமகனும் சொல்லியிருக்கின்றார். நாம் சொல்லியிராவிட்டாலும் தலைமகன் இதை சரியாக சொல்லியிருப்பார்
பிரதமரின் கோரிக்கைக்கு செவிமடுத்து தேசம் முழுக்க அஞ்சலி விளக்குகள் எரியட்டும், அந்த ஆத்துமாக்கள் சாந்தியடையட்டும்
விளக்கின் ஒளியில் ஓம்.ஷாந்தி என்ற குரல் ஒற்றுமையாய் ஒலிக்கட்டும். அந்த ஓங்காரத்தில் அந்த ஆன்மாக்கள் சாந்தியடைந்து மானிட குலத்துக்கு நன்மை விளைவிக்கட்டும்
பாரத பிரதமரை நன்றியோடு வணங்கிகொண்டிருக்கின்றோம், இந்த மண்ணின் பாரம்பரியங்களெல்லாம் ஒரு உருவாய் வந்த அந்த பெருமகனுக்கு கோடி நன்றிகள்.
பாரத தர்மங்கள் அவரால் அரங்கேறுகின்றன, அந்த தர்மத்திலும் சத்தியத்திலும் இத்தேசம் ஒளிகொடுத்து வாழும்