சுந்தரம் பிள்ளை!

அவர் பெயர் சுந்தரம் பிள்ளை, 1855ல் பிறந்தார்.

கேரளாவில் பிறந்த தமிழர், தமிழை கசடற கற்றவர், பல பட்டங்களை பெற்றவர், பின் நெல்லை கல்லூரி ஒன்றில் பேராசிரியரானார்

அக்கல்லூரி பின் இந்து கல்லூரி ஆயிற்று, இன்றும் அக்கல்லூரி நெல்லையில் உண்டு.

அதன் பின் திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவயியல் ஆசிரியரானார், திறமையானவர் என்பதால் பிரிட்டிஷ் அரசின் பல பட்டங்கள், ராவ் பகதூர் பட்டம் வரை வாங்கினார், திருவிதாங்கூர் அரண்மனை திவானாகவும் இருந்தார்

பல படிப்புகள் படித்திருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல ஆராய்ச்சிகளை செய்தார்

அவருடைய தமிழ் அவரை உந்தி தள்ளியது, மனோன்மணியம் எனும் ஒப்பற்ற நாடக நூலை எழுதினார், இன்றுவரை மிகசிறந்த நாடக நூல் அது

அந்த நூலில் வரும் பாடல்தான், நீராருங் கடலுடுத்த நிலமடந்தை எனும் அற்புதமான பாடல்

அந்த பாடல்தான் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்து என தமிழக அரசால் அங்கீகரிக்கபட்டது

பத்துபாட்டு உட்பட பல தமிழ்பாடல்களை கொத்து போட்டு ஆய்வு செய்து விளக்கம் அளித்தவர் சுந்தரம் பிள்ளை

தமிழுக்கு அவர் செய்திருக்கும் தொண்டு பெரியது, அந்த்தொண்டின் மகுடம்தான் அந்த தமிழ்தாய் வாழ்த்து

அவர் பணி தொடங்கிய நெல்லையிலே பல்கலைகழகம் வந்தபொழுது கொஞ்சமும் தயங்காமல் அவர் பெயரினை சூட்டினார்கள், நெல்லை பல்கலைகழகத்திற்குத்தான் பாரதியார் பெயர் சூட்டபட்டிருக்க வேண்டும்

ஆனால் அது கோவை பக்கம் அமைந்துவிட்டதால், சுந்தரனார் அவரின் மனோன்மணியம் எனும் அடையாளத்துடன் நெல்லை பல்கலைகழகத்தில் அமர்ந்துவிட்டார்

எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இவரைப்போல, உ.வே சாமிநாதரை போல தமிழுகு தங்களால் ஆன தொண்டு செய்து அதனை வளர்த்து காத்திருக்கின்றார்கள்

அவர்கள் எல்லாம் தார் சட்டி தூக்கவில்லை, திணிப்பு என கொதிக்கவில்லை, காரணம் அவர்கள் அரசியல்வாதிகள் இல்லை

வெள்ளையன் திருநெல்வேலியினை தின்னவேலி என்றபொழுதும், தஞ்சாவூரை தஞ்சூர் என்றபொழுதும், திருச்சிராப்பளியினை டிரிச்சி எனும்பொழுதும் அவர்கள் “ஆங்கில திணிப்பு” என‌ தார்சட்டி தூக்கவில்லை

மாறாக எது தமிழுணர்வு, எது அதனை காக்கும் வழி என அவர்களுக்கு தெரிந்த்திருக்கின்றது, ஆனால் அரசியல் தெரியவில்லை

மாறாக தமிழுக்கு செய்ய வேண்டியதை செய்திருக்கின்றார்கள்.

இன்றுள்ளவர்களுக்கோ எது அரசியல் என தெரிந்திருக்கின்றது, தார் சட்டி அது இது என அழிச்சாட்டியம் செய்கின்றார்கள், துப்பாக்கி தூக்கிய கொலைகாரன் தமிழனாய் இருந்தாலும் தமிழை காத்தவன் என கொடூர சிந்தனையில் சிரிக்கின்றார்கள்.

ஆனால் தமிழுக்கு என்ன செய்யவேண்டும் என தெரியவே இல்லை, அந்த பேச்சோ செயலோ இல்லை

இவரைபோல நிறைகுடங்கள் அன்று இருந்திருக்கின்றன, நமது விதி பின்னாளில் சிக்கிகொண்டோம், தமிழும் தமிழகமும் சிக்கிவிட்டது

இன்று அந்த சுந்தரம்பிள்ளையின் பிறந்தநாள்

மனோன்மணியத்தில் அவர் தமிழ் அவ்வளவு அழகு, ஆங்கிலம் கற்ற பேராசிரியரின் தமிழ் அவ்வளவு அழகாக இருந்திருக்கின்றது

தமிழை அதன் சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே, என வாழ்த்திய அவரை அவர் பிறந்த நாளில் நினைத்து கொள்ளலாம்..