ரமணர் ஏன் கொண்டாடபடுகின்றார்?

அது இரண்டாம் உலகபோர் காலம் ஹிட்லர் உலகையே கொரோனா போல அச்சுறுத்திய காலம், அந்நேரம் அவனுக்கு இருந்த படைபலமும் திறமையும் எவனுக்குமில்லை

உலகத்தை அவன் ஆட்டி வைத்தான் அலற வைத்தான், போதா குறைக்கு ஜப்பானும் இத்தாலியும் சேர்ந்து கொண்டது

அவனின் அகோர ஆட்டத்தில் அலறிய கிறிஸ்தவ உலகம் அவனே அந்தி கிறிஸ்து என்றது, இஸ்லாமிய உலகம் முதலில் அவனை ஆதரித்தது ஆம் அவன் யூத எதிரி என்பதால் கைதட்டியது ஆயினும் அவனின் மிக கடுமையான அணுகுமுறையினை கண்டபின் அவனே உலக முடிவில் வரும் தஜ்வால் என்றது

இன்றைய சாவு போல அன்றும் அனுதினமும் ஐயாயிரத்துக்கு குறைவில்லாமல் சாவுகள் இருந்தன சில நாட்கள் லட்சத்தை தொட்டன, மொத்தம் 5 கோடி மக்களை காவு வாங்கிய யுத்தம் அது

ஒரு வழியாக ஹிட்லர் அடங்கி கொல்லபட்டபின் ஜப்பானின் ஆட்டம் அகோரமாயிருந்தது அதன் பின் அணுகுண்டு வெடித்தது

வெடித்தது ஒரு குண்டு, ஆனால் பல்லாயிரம் அணுகுண்டுகள் வெடிக்கும் பனிப்போர் அப்பொழுது தொடங்கிற்று

எந்நேரமும் உலகம் அழியும் சூழல்

அப்பொழுதுதான் ரமண மகரிஷியிடம் கேட்டார்கள், கிறிஸ்தவ உலகம் எல்லாம் அழியபோகின்றது அல்லேலூயா என கிளம்பிய பொழுது, இஸ்ரேல் உருவாக்கதால் அரேபியர்கள் உலக அழிக்க போகின்றோம் என சீறிய பொழுது அவரிடம் கேட்டார்கள்.

“ரமணரே இந்த உலகம் அழிந்துவிடுமா? தடுக்க வழி உண்டா?

ஞானத்தின் உருவான ரமணர் அமைதியாக சொன்னார்

“இந்த உலகத்தை படைத்தவன் எவனோ அவனே அதை அழிக்கவும் காக்கவும் கடமைபட்டவன்,

உனக்கும் எனக்கும் என்ன? நம்மால் உலகை உருவாக்க முடியுமா? இல்லை காக்கத்தான் முடியுமா?”

அந்த பதிலில் எல்லோருக்கும் ஞானம் விளங்கிற்று

ரமணர் ஏன் கொண்டாடபடுகின்றார் என்றால் இதற்காகத்தான், ஆம் கொரோனா காலத்திலும் இதே பதில்தான் மனதில் ஒலிக்கின்றது