சோ. ராமசாமி
மிக மிக சுவாரஸ்மான, அதே நேரம் பெரும் அறிவாளியும், சிந்தனையாளருமான சோ ராமசாமியின் பிறந்தநாள் இன்று
அவரது நாட்டுபற்று சந்தேகமில்லாதது. அவரின் சில தொலைநோக்குகள் அற்புதமானவை, மிக அபாரமானது அவரின் துணிச்சல்
அண்ணா காலம், மிசா காலம், புலிகள் ஆதரவு காலத்தில் எல்லாம் அவரின் துணிச்சல் அபாரமானது. அதுவும் 1985களிலே புலிகளை அவர் கண்டித்தவிதமும், பத்மநாபா படுகொலையினையொட்டி அவர் எழுதிய எழுத்துக்களும் மகா தீர்க்கமானவை.
ஒரு பத்திரிகையாளன் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு அவரும் இலக்கணம்.
பிராமண ஆதிக்கம், பிராமண ஆட்சி என பலர் கிளம்பும் போது, பிராமண அரசன் என ஒருவனை காட்டுங்கள், எங்கே ஆண்டது பிராமண இனம்? என்ற அவரின் கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.
போலி திராவிட அரசியல்வாதிகளை அவர் கிழித்து தொங்கவிட்ட அளவிற்கு இன்னும் யாரும் தொடவில்லை.
அற்புதமான நடிகர், அதுவும் அரசியல் வசனங்களை எம்.ஆர் ராதா போலவே தொடர்ந்தவர், பின்னாளைய மணிவண்ணன் இவரின் தொடர்ச்சி. மிக அசால்ட்டடாக அரசியல் வசனம் பேசும் சோ ராமசாமி போல இன்னொருவர் சாத்தியமே இல்லை
சிரிக்க சிரிக்க விமர்சனம் செய்வதில் சோவிற்கு நிகர் அவரே, அவரால் கலாயாக்கபடாத தலைவர்கள் என யாருமே இருக்கமுடியாது
ஒன்றா, இரண்டா? ஒவ்வொன்றும் மறக்கமுடியாதது
ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தார், கம்யூனிஸ்டுகள் எல்லாம் போராட்டம் நடத்தினர், புஷ் திரும்பி போ என கடும் ஆர்ப்பாட்டம்
அமைதியாக சொன்னார் சோ, “புஷ் இங்கே இருக்கவா போகிறார், திரும்பி போகத்தான் போகிறார், அவர் வாழும் நிலையிலா இருக்கின்றது இந்தியா?, இதற்கு ஏன் போ என இவ்வளவு ஆர்ப்பாட்டம்”
அவர் எழுத்துகளில் மிக நறுக்கானது இப்படிபட்டவை
“தமிழுணர்வினை வெளிபடுத்த இன்றுள்ள மிக எளிதான வழி விடுதலைபுலிகளை ஆதரிப்பது….”
கலைஞரை அவர் காய்ச்சி எடுக்கும் நக்கல்கள் ஏராளம், ஆனால் அதனை தாண்டிய நட்பு இருவருக்கும் உண்டு.
எல்லாவற்றிற்கும் மேல் பாராட்டபடவேண்டியது சோவின் நாட்டுபற்று
சமீபத்தில் சொல்லியிருந்தார், “காங்கிரஸ் இந்நாட்டில் பின்னடைவது நல்லது அல்ல, அந்த இடத்தினை மாநில கட்சிகள் பறித்துகொள்ளலாம், பாஜ போன்ற தேசிய கட்சிக்கு இன்னொரு தேசிய கட்சி போட்டியாக இருப்பது வரை இத்தேசத்திற்கு நல்லது”
இதுதான் சோ, இது தீர்க்கதரிசனமான உண்மையும் கூட
ரசிக்க கூடிய எழுத்துகளிலும், பேச்சுக்களிலும் கலைஞர் போலவே சோ ராமசாமிக்கு தனி இடம் உண்டு
மிக மிக அபூர்வ சுவாரஸ்யமான மனிதர் சோ, அவர் காலம் வரை அரசியல் விமர்சன சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லை
அந்த ஞானமகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், பல்லாண்டு அவர் வாழட்டும், அரசியல் விமர்சனங்களை இச்சமூகம் அவரிடமே கற்ககட்டும், வாழும் அரசியல் நூலகம் அவர்.
பல்லாண்டு வாழட்டும்,