தமிழகத்தில் கவர்னர் ஆட்சியினை அமல்படுத்தவேண்டும் : சு.சாமி

ஜெயலலிதாவிற்கு உடல்நலமில்லாததால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சியினை அமல்படுத்தவேண்டும் : சு.சாமி

மனிதர் ஒருவழியாக வாய்திறந்துவிட்டார், அதவாது அவர் இன்னும் திருந்தவில்லை, திருந்தவும் மாட்டார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மெஜாரிட்டி எம் எல் ஏ பிரச்சினை என்றால் கவர்னர் ஆட்சி சரி, இங்கு என்ன நடந்தது?

கட்சி அப்படியே இருக்கின்றது, 20 எம் எல் ஏக்கள் கிடைத்தாலும் அள்ளிகொண்டு கவர்னர் மாளிகை நோக்கி நடக்க எதிர்கட்சியும் வலுவாக இருக்கின்றது

மாநில சட்ட ஒழுங்கும் அமைதியாகவே இருக்கின்றது,

துணை முதல்வரை அறிவியுங்கள் அல்லது இடைக்கால முதல்வரை அறிவியுங்கள் என்றால் அது ஒரு நியாமான கோரிக்கை

அதனை விட்டு கவர்னர் ஆட்சி என்றே கத்தினால் இம்மனிதரை என்ன சொல்வது?

ஆனாலும் மனிதர் வித்தியாசமானவர், ஐ எஸ் தீவிரவாதிகள் கைது எனும் நேரத்தில் முதல் ஆளாக ஆட்சி டிஸ்மிஸ் என ஆரம்பிக்கின்றார் என்றால் சந்தேகத்திற்குரியதே

சரி அப்படி டிஸ்மிஸ் செய்து, ஒரு களபேரத்தினை தமிழகத்தில் நிகழ்த்தினாலும் பாஜக என்ன ஆளும் கட்சியாக மாறிவிடுமா?

நடக்குமா?

தமிழிசை, பொன்னர் , ஹெச். ராஜா, ராமகோபாலன் போன்றவர்களை நினைத்துகொள்ளுங்கள் போதும்.


ஆளுநர் – தலைமைச் செயலாளர் திடீர் சந்திப்பு

அப்படி என்ன பேசிகொள்வார்கள்?

நீங்களாவது முதல்வரை பார்த்தீர்களா? சொல்லுங்கள் என பேசிகொள்வார்களோ?

இருக்கலாம்

சந்தடி சாக்கில் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருப்பவர் சசிகலா புஷ்பா, மறுபடியும் முதல்வர் என்னை அறைந்தது உண்மை என்கின்றார்.

அன்றே பதிலளிக்காத முதல்வர், இனி தற்போதைக்கு அளிக்கமாட்டார் என்ற தைரியம் தவிர என்ன இருக்கமுடியும்?