ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 01
மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு.
இக்குறள் “மண்டலங்கள் மூன்றும் அருவ உட நிறுத்தி அண்ட அரனை அர்ச்சிக்குமாறு” என பிரியும்
அரன் என்றால் சிவன்
இங்கு மண்டலம் என்பது சூரிய கலை, சந்திர கலை, சுழிமுனை என மூன்று நாடிகளின் சங்கமாகும், ஒளைவாய்ர் தன் விநாயகர் அகவலில் கூட “மூன்று மண்டலத்து முற்றிய தூணில்” என சொல்வது கவனிக்கதக்கது
“அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதி மலராள் சொன்ன மண்டலம் மூன்றே” எனும் திருமூலரின் பாடலும் இதனைத்தான் குறிக்கின்றது
அர்ச்சனை என்றால் தெய்வதின் சிலையினை முழு மனதோடு பூஜிக்கும் முறையாகும், அதற்கு அபிஷேகம் செய்து தீபமும் தூபமுமிட்டு மலர்களிட்டு வணங்கி சரணடைவதைத்தான் அர்ச்சனை என்பார்கள்
ஆக இந்த குறளின் பொருள் இதுதான்
சந்திர நாடி பிங்கலை, சூரிய நாடி இடகலை, சுழியநாடி ஆகிய நாடிகள் மூன்றும் உச்சியில்(அருவ என்றால் உச்சி என்றும் பொருள் உண்டு, அருவி என்பது அப்படி உருவான பெயர்) கலக்குமாறு செய்து அந்த யோகத்தின் உச்சியில் சிவனை உணர்ந்து பூஜிக்க வேண்டும்
யோகம் என்பதும் தவம் என்பதும் மனதால் வழிபடும் வழிபாடு, அந்த யோகம் சிவனை நோக்கி இருத்தல் வேண்டும் அதுவும் மூன்று நாடிகள் கலக்கும் யோக நிலையில் சிவனை அர்ச்சித்து மனதால் வணங்குதல் வேண்டும் என்பது பொருளாகும்
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 01
மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு.
இக்குறள் “மண்டலங்கள் மூன்றும் அருவ உட நிறுத்தி அண்ட அரனை அர்ச்சிக்குமாறு” என பிரியும்
அரன் என்றால் சிவன்
இங்கு மண்டலம் என்பது சூரிய கலை, சந்திர கலை, சுழிமுனை என மூன்று நாடிகளின் சங்கமாகும், ஒளைவாய்ர் தன் விநாயகர் அகவலில் கூட “மூன்று மண்டலத்து முற்றிய தூணில்” என சொல்வது கவனிக்கதக்கது
“அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதி மலராள் சொன்ன மண்டலம் மூன்றே” எனும் திருமூலரின் பாடலும் இதனைத்தான் குறிக்கின்றது
அர்ச்சனை என்றால் தெய்வதின் சிலையினை முழு மனதோடு பூஜிக்கும் முறையாகும், அதற்கு அபிஷேகம் செய்து தீபமும் தூபமுமிட்டு மலர்களிட்டு வணங்கி சரணடைவதைத்தான் அர்ச்சனை என்பார்கள்
ஆக இந்த குறளின் பொருள் இதுதான்
சந்திர நாடி பிங்கலை, சூரிய நாடி இடகலை, சுழியநாடி ஆகிய நாடிகள் மூன்றும் உச்சியில்(அருவ என்றால் உச்சி என்றும் பொருள் உண்டு, அருவி என்பது அப்படி உருவான பெயர்) கலக்குமாறு செய்து அந்த யோகத்தின் உச்சியில் சிவனை உணர்ந்து பூஜிக்க வேண்டும்
யோகம் என்பதும் தவம் என்பதும் மனதால் வழிபடும் வழிபாடு, அந்த யோகம் சிவனை நோக்கி இருத்தல் வேண்டும் அதுவும் மூன்று நாடிகள் கலக்கும் யோக நிலையில் சிவனை அர்ச்சித்து மனதால் வணங்குதல் வேண்டும் என்பது பொருளாகும்