சாணக்கியன் தன் நூலில் சொல்கின்றான்
கல்வியின் அருமையினையும் மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பாரத கலாச்சாரமும் இந்து ஞானமும் பெரும் அளவில் சொன்னது
மகாபாரத அர்ஜூனன் துரோணனுக்கு எப்படி மாணவனான் எனும் காட்சியிலே மாணவனுக்கான இயல்பு அடையாளமிடபடுகின்றது
அரச குமாரர்கள் விளையாடும் பொழுது கிணற்றில் விழுந்த பந்தை அந்த வழிபோக்கன் அம்புகளால் எடுத்து கொடுத்துவிட்டு நகர பீமன் அவரை வியப்போடு பார்க்க, துரியோதனன் ஏதும் தானம் வேண்டுமா என கேட்க தர்மன் அவருக்கு வாழ்த்து சொல்ல அர்ஜூனன் ஒருவனே அவர் காலில் விழுந்து குருவாக ஏற்றான்
அந்த குருதான் துரோணராக வந்தார், அந்த பணிவுதான் அர்ஜூனனை கண்ணனிடமும் குருவாக பணிய சொன்னது
இதே பக்குவத்தை ராமனிடமும் காணமுடியும்
இன்றைய மாணவர்கள் சிலர் கல்விசாலையில் செய்யும் அராஜகங்களையும், குருவுக்கு நிகரான ஆசிரியர்களை ஏதோ தெருவோர ஜந்துக்களாக கருதி ஆடுவதை கண்டால் மனம் வேதனைபடுகின்றது
நல்ல குழந்தைகளை பெறாத பெற்றோருக்கு சிறப்பில்லை, நற்பண்பும் கல்வியும் இல்லாதவன் அன்ன கூட்டம் இடையே காகம் போல் கருதபடுவான் என்பது இந்து ஞானியின் வாக்கு
சாணக்கியன் தன் நூலில் சொல்கின்றான், மாணாக்கர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்கின்றான்
அந்த சுலோகம் இதோ
“சுகதி செட் தேஜவிடயம்
வித்யார்த்தி செட் தியாஜெட்சுகம்
சுகர்த்தினாகா குடோ
விட்யா குடோ வித்தியார்தினாத் சுகம்”
ஒரு மாணாக்கன் சுகவாசியாக இருக்க விரும்பினால் கற்பதை கைவிட வேண்டும் , கற்க விருப்பம் இருந்தால் சுக வாழ்க்கைக்கு ஏங்க கூடாது, ஒரே நேரத்தில் கல்வியும் சுகவாழ்வும் கிடைக்காது
மேலும் தொடர்கின்றான் அந்த இந்து ஞானி
“காமம் குரோதம் ததா லோபம்
சுவாட் ஷிங்கார்கார்க்காதுகம்
அட்னிட்ராஸ்டிசேவா சா வித்யார்த்தி
ஹயாஸ்த வர்ஜயெட்”
அதாவது கல்வியில் விருப்பம் இருந்தால் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என சொல்கின்றான் சாணக்கியன்
புணர்ச்சி எனும் காமம், வெட்டி பேச்சு, கோபம், பேராசை, சுய ஒப்பனை, பொருட் காட்சி எனும் கேளிக்கை, அதிகமான தூக்கம், கொண்டாட்ட மனம், ஆட்டம் பாட்டம் இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்கின்றான் ஞானி
அதாவது கல்வியினை ஒரு தவம்போல் செய்ய வேண்டும் என்கின்றான்
இன்னும் அடுத்த சுலோகத்தில் போதிக்கின்றான் ஞானி சாணக்கியன்
“யத கானிட்வா கானிட்ரன்
பூத்தாலே வாரி வின்டாதி
தத்தா குருகாட்டம் வித்யம்
சுஷ்சுருஷூராதிச்சாட்டி”
அதாவது மண்வெட்டியாலும் கடப்பாரையாலும் மண்ணை தோண்டி நீரை எடுக்க முயல்வதுபோல ஒரு மாணவன் குருவிற்கு தொண்டு செய்து அவரிடம் இருந்து எல்லாவற்றையும் கற்க முயல வேண்டும் என்பது பொருள்
அவ்வளவு சிரமபட்டு கற்க வேண்டும் என்கின்றான் சாணக்கியன்
ஞானியின் அடுத்த ஸ்லோகம் இன்னும் வலிமையானது
“புஸ்தகம் பிரட்டாயதீட்டம்
நாதீட்டம் குருசன்னிதானு
சபாமாட்ய ந ஷோபனேட்
ஜார்கர்பாய்வ் இஸ்தியா”
அதாவது குரு இல்லாமல் வெறும் கல்வி மூலம் அறிவை வளர்க்க நினைத்து வளர்ப்பவன் நிலை, கணவனை அறியாமல் பிள்ளை பெறும் பெண்ணின் இழி நிலைக்கு ஒப்பானதாகும் அவனை யாரும் மதிக்கபோவதில்லை
கடைசியாக குருவின் அருமையினை சொல்லும் ஸ்லோகத்தை சொல்கின்றார்
“ஏகமேவக்சரம் யாட்சு குரு
சிஷ்டம் பிரபோதயாட்
பிரிட்யம் நாஸ்தி தாத்ரயம்
யாத் தாத்வ தாரின் பவத்”
அதாவது தன் போதனையால் ஒளியூட்டும் குருவுக்கான கடனை மாணவனால் ஒருபோதும் அடைக்க இயலாது
எப்படிபட்ட அழகான பொருத்தமான ஸ்லோகங்கள்? எவ்வளவு ஆழ்ந்த தத்துவங்கள்
ஒவ்வொரு பள்ளியின் வாசல்சுவரிலும் வகுப்பறையில் இந்த சுலோகங்களும் அதன் பொருளும் இருந்தால் மாணவர்கள் சிந்தனை எவ்வளவு நலம்பெறும்? அந்த வகுப்பில் எப்படிபட்ட நல்ல மாணவர்களெல்லாம் உருவாகி வருவார்கள்
சமஸ்கிருதத்தை தமிழன் ஏன் படிக்க கூடாது என விரட்டினார்கள் என்றால் இதற்காகத்தான்
இந்த ஞான போதனை துண்டிக்கபட்டுத்தான் திராவிட திரிபுகள் புகுத்தபட்டன
சாணக்கியனும் இன்னும் ஏராளமான ஞானியரின் போதனைகளெல்லாம் இந்துஸ்தான ஞான பாரம்பரியங்கள், சமஸ்கிருதம் ஏன் ஞானமொழி என கொண்டாடபட்டது என்றால் இதனால்தான்
அதனை வெட்டிவிட்டு திராவிட கும்பல் புது குழப்பமான கல்விமுறையினை புகுத்தியதன் விளைவுதான் இன்று காணும் அலங்கோலங்களும் அட்டகாசங்களும், இதன் பின்னணியில் அன்று மிஷனரிகள் இருந்தார்கள் இன்று தனியார் பள்ளி கல்விவியாபாரிகள் இருக்கின்றார்கள்
அரச மருத்துவமனை நாசமானால் தனியார் மருத்துவமனைக்கு வாழ்வு, அரச பள்ளசாலைகள் நாசமானால் தனியார் பள்ளிக்கு வாழ்வு எனும் அளவில் மாகாணம் நாசமாகிவிட்டது
தனியார் பள்ளிகளில்தான் மதமாற்றம் முதல் இதர துர்போதனைகளெல்லாம் பெருமளவில் நடக்கின்றன
இங்கு நல்ல சமுதாயம் மீட்டெடுக்கபட பாரத பண்டைய ஞானமொழிகளெல்லாம் துலங்குதல் அவசியம் அதற்கு சமஸ்கிருதமும் இதர ஞான அடையாளங்களும் கற்றலும் அவசியம்
அவைகளெல்லாம் இளம்பிராயத்திலே சொல்லிகொடுக்கபட்டால் அருமையான இந்து தலைமுறையினை உருவாக்கலாம்
இந்துக்கள் முதலில் செய்யவேண்டியது தேவாரம் திருவாசகம் என தமிழ் பக்தியினை ஒருபக்கம் குழந்தைகளிடம் வளர்க்கும் நேரம் அப்படியே சமஸ்கிருதம் எனும் ஞானமொழியினையும் போதித்தல் வேண்டும்
ஊருக்கொரு இந்துபாடசாலை வார இறுதியில் இயங்குதல் அவசியம், சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் ஒருமணி நேரமாவது பண்டைய இந்து பாரம்பரியத்தை குழந்தைகள் பெறுதல் மகா அவசியம்
சாணக்கியனின் ஸ்லோகத்தை மற்றொரு முறை படித்து பாருங்கள் பெற்றோரும் ஆசிரியரும் மாணவரும் நெஞ்சில் நிறுத்தவேண்டிய வரி அதுதான்
இந்து பாரம்பரியத்தை மீட்காமல் இங்கு நல்ல மாணவ தலைமுறையினை உருவாக்க முடியாது, பாரத இந்து ஞானம் ஒன்றே அதிசிறந்த மாணவர் சமூகத்தை உருவாக்கும்
அருமை… நல்ல பதிவு… உங்களிடம் குருவாக இருக்க கொடுத்து வைக்க வேண்டும்…மாணவர்கள் தங்களுக்கான கடமைகளை சரிவர செய்யாமல் மறுத்தல், ஓரு ஆசிரியர் கண்டிக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு மற்றும் சகிப்புத் தன்மை இல்லாமை ,இன்றைய நிலையில் மாணவர்களுள் பெரும்பாலானோர் தீய பழக்கவழக்கங்களுக்கு உட்படுகின்றனர் எனவே அதனை ஆசிரியர்கள் தட்டிக் கேட்கும் போது ஆசிரியர்கள் மீது தவறான புரிதலை ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கு அவதூறாக பேசுதல் ,அவர்களுக்கு எதிர்மாறாக செயற்படுதல், சமூகத்தில் ஆசிரியர்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு காரணங்கள் மூலம் ஆசிரிய மாணவர் உறவு பாதிப்படைகின்றது.