ஆச்சார கோவை : 02
“பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு,
நிலக் கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மை
இலக்கணத்தால் இவ் வெட்டும் எய்துப – என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்”
நற்குடிபிறப்பு, நீண்ட ஆயுள், நல்ல செல்வம், பொலிவான தோற்றம் , சொந்தமாக நிலம், சொல் வாக்கு அதாவது வாக்கு தவறாமை அந்த வாக்குக்கு மதிப்பு, நல்ல கல்வி, நோயற்ற வாழ்வு இந்த எட்டும் ஒழுக்கம் உடையோருக்கு தேடிவரும் என்பது பொருள்
நல்ல செயல்களை செய்பவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் எனும் கவுரவத்தை தன் குலத்துக்கு பெற்று கொடுப்பர், தீய பழக்கம் இல்லாததால் நீண்ட ஆயுள் எளிதாக வரும், தீய வழக்கமும் மயக்கமும் இல்லாததால் செல்வம் மிஞ்சும், சொந்தமாக நிலம் இருப்பதால் பயிர்தொழிலால் அவருக்கு தேவையானதை அவரே பெறுவர் யாரிடமும் கையேந்தும் அவசியமில்லை அல்லது நிலம் இருப்பது ஒரு அங்கீகாரம்
கவுவரமான அவரின் சொல்லுக்கு சமூகம் மதிப்பு கொடுக்கும், அறிவில் சிறந்த கல்வியினை அவர் தேடி அடைவர், சுத்தமான வாழ்க்கை முறை மனதாலும் உடலாலும் நோயினை கொடாது
ஒரு மனிதன் ஆச்சாரம் தப்பாமல் ஒழுகினால், நல்ல ஒழுக்கத்தை கடைபிடித்தால் இந்த எட்டுவகை நலமும் பூரணமாக கிடைக்கும் என்பது பொருள்