குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 09
“எனைத்துணைய வேனு மிலம்பாட்டார் கல்வி
தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம் – மனைத்தக்காள்
பாண்பில ளாயின் மணமக னல்லறம்
பூண்ட புலப்படா போல்”
இப்பாடல் இப்படி பிரிந்து பொருள் தரும்
எனைத்துணைய வேணும் இலம் பாட்டார் கல்வி
தினைதுணையும் சீர்பாடு இலவாம் மனைக்காள்
மாணிலள் ஆயின் மணமகன் இல்லறம்
பூண்ட புலப்பாடா போல்”
எவ்வளவு கல்வியினை ஒருவன் பெற்றிருந்தாலும் அவன் வறுமையில் வாடினால் அந்த கல்வி தினை அளவு கூட சிறப்பு பெறாது, ஒருவன் எவ்வளவு அறசெயலை செய்தாலும் மனைவி சரியில்லை என்றால் அவன் செயலெல்லாம் சிறப்பில்லாத போல அந்த வறுமையுற்றவன் கல்விக்கும் சிறப்பில்லை என்பது பொருள்
மனைவி சரியில்லையெனில் வாழ்வு சிறக்காது என்பது போல கல்வி சரியில்லை எனில் வறுமை நீங்காது.
கல்வியுடைவன் அதை கொண்டு கொஞ்சமாவது பொருள் ஈட்ட வேண்டும், ஒருவனின் வறுமையினை தீர்க்காத கல்வி சிறப்பை கொடுக்காது என்கின்றார் குமரகுருபரர்
வறுமை நேர்மையாளனின் நண்பன். வாழ்ந்து காட்டியவர்களின் கைத்தடி. வீரம் மிக்கவர்களின் விளை நிலம். சோம்பேறிகளின் ஊக்க மாத்திரை… அந்த வறுமையை போக்க கல்வி ஒன்றே சிறந்தது. வறுமையை போக்காதவன் கல்வி பயணற்றது கற்றும் பாலைவனத்து நீர் போன்றது… அருமையான விளக்க உரை… அதை எவ்வளவு தீர்க்கமாக ஆராயாந்து குமர குருபரின் செய்யுளுக்கு விளக்கம் அளித்த உங்களை வணங்குகிறேன்.