நேஷனல் ஹெரால்ட் ஊழல் என்றால் என்ன என்பது இதுதான்
நேஷனல் ஹெரால்ட் என்பது 1938ல் ஒன்றுபட்ட இந்தியாவின் சுதந்திரத்துக்காக தொடங்கபட்ட பத்திரிகை என சொல்லபட்டது, அதனை பாரதம் முழுக்க 5000க்கு மேற்பட்டோர் பங்குதாரர்களாக இருந்து உருவாக்கினார்கள் இதன் மொத்த பொறுப்பும் காந்தியிடம் உண்டு என சொல்லபட்டாலும் நேருதான் அதன் இயக்குநரும் தலைவருமாய் இருந்தார்
அசோஸியேட்டட் ஜெர்னல்ஸ் எனும் கம்பெனியின் கட்டுபாட்டில் இந்த பத்திரிகை இருந்தது
ஏகபட்ட சொத்துக்களை கொண்டவர், சொத்துக்களை எல்லாம் நாட்டுக்கே கொடுத்தவர் என கொண்டாடபடும் நேரு ஏன் சொந்தமாக தானே பத்திரிகை தொடங்க காசு கொடுக்காமல் 5000 பேரை திரட்டினார் என்பதற்கெல்லாம் வரலாற்றில் விடை இல்லை, அதுதான் இந்திய வரலாறு
1938ல் தொடங்கபட்ட இந்த பத்திரிகை அஹிம்சை, மத நல்லிணக்கம் என சுதந்திர போராட்டம் நடத்தியது, இரண்டாம் உலகப்போர் காலங்களில் காகிதம் தட்டுபாட்டால் அச்சு உற்பத்தி நிறுத்தபட உத்தரவிடபட்டது, வெள்ளையன் அந்த உத்தரவை பிறப்பித்தபொழுது காந்தியோ நேருவோ எதிர்க்கவுமில்லை, காந்தி உண்ணாவிரதம் தொடங்கவுமில்லை, அஹிம்சை என கதறவுமில்லை
அப்படி நாட்டின் விடுதலைக்காக தொடங்கபட்ட அதுவும் பொதுமக்களால் தொடங்கபட்ட பத்திரிகை பின்பு முழுக்க காங்கிரஸ் மற்றும் நேருவின் கட்டுபாட்டில் வந்தது, நேருவும் காலமானார்
பின் இந்த பத்திரிகை காங்கிரஸ் போல தேய்ந்துவந்து 2008ல்மூடபட்டது
அதன் பின்புதான் பல நுணுக்கமான வியூகம் வகுக்கபட்டது, பொதுவாக காங்கிரசுக்கு இந்த சிந்தனை வராது, தமிழக கழகங்களுடன் கூட்டணி வைத்த சகவாச தோஷத்தில் அந்த புத்தி வந்திருக்கலாம்
2010ல் சோனியாவும் ராகுலும் கொண்ட யங் இந்தியா கம்பெனி உருவாக்கபடுகின்றது
2008ல் மூடபட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சில காரணங்களுக்காக கடன் வாங்கியது, பல ஆயிரம் கோடி மதிப்புகொண்ட அந்த பத்திரிகை 90.25 கோடிக்கு அலைந்தது
அந்தோ பரிதாபம் அவர்களுக்கு கடன் கொடுக்க யாருமில்லை, மல்லையாவுக்கும் இன்னும் பலருக்கும் பல ஆயிரங்களை கொடுத்த மன்மோகன்சிங் அரசு இந்த தேசிய பத்திரிகைக்கு பத்து பைசா கொடுக்கவில்லை
இதனால் பத்திரிகையின் நிறுவணமான அசோஸியேட்டட் ஜெர்னல்ஸ் எனும் ஏ ஜே எல் நிறுவணம் காங்கிரஸிடமே சரணடைந்தது, காங்கிரஸ் கட்சியின் சோனியா ராகுல் அனுமதியுடன் 90.25 கோடி கடன் அந்நிறுவனத்துக்கு கொடுக்கபட்டது
2011ல் இந்த கடன் வழங்கபட்டது
என்ன மாயமோ தெரியவில்லை 90.25 கோடி கடனை பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நேஷனல் ஹெரால்டு நிறுவணம் கட்டமுடியாமல் தவித்தது, நேரு உருவாக்கிய அந்த பத்திரிகைக்கான கடனை தள்ளுபடி செய்ய நேருவின் வாரிசுக்கும் கட்சிக்கும் மனம் வரவில்லை
அத்தோடு விட்டால் ஊழலே இல்லை பின் என்ன காங்கிரஸ்?
காங்கிரஸின் கட்சி யங் இந்தியா கம்பெனியிடம் சென்று உங்களுக்கு 50 லட்சம் தருவோம் கடனைவசூலித்து தாருங்கள் என முறையிட்டது
அதாவது காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும் ராகுலும், யங் இந்தியா கம்பெனியின் முதலாளிகளான ராகுலிடம் சோனியாவிடமும் கோரிக்கை வைத்தனர்
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா ராகுலின் கோரிக்கையினை ஏற்ற யங் இந்தியா தலைவர்களான ராகுலும் சோனியாவும் ஏ ஜெ எல் நிறுவனத்தை கைபற்ற உத்தரவிட்டனர்
யங் இந்தியா நிறுவணம் அந்த ஏ ஜெ எல் நிறுவனத்தை கைபற்றியது, அப்படியே தன் கமிஷனை எடுத்துவிட்டு 90 கோடி ரூபாயை காங்கிரசுக்கு கொடுத்தது
அதாவது யங் இந்தியாவின் தலைவர்களான சோனியாவும் ராகுலும் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவுக்கும் ராகுலுக்கும் அந்த தொகையினை நேர்மையாக திருப்பி கொடுத்தனர்
2016ல் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் இணைய பதிப்பு தொடங்கபடும் என அறிவித்தது யங் இந்தியாவின் ராகுல்காந்தி கோஷ்டி
அதை காங்கிரஸ் தலைவரான ராகுல் வரவேற்றார்
இந்த காமெடி கூத்துக்களை கண்ட சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் கட்சியின் 90 கோடியினை கொண்டு பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஹெரால்ட் பத்திரிகை சொத்துக்களை யங் இந்தியா எனும் கம்பெனி மூலம் சோனியா கைபற்றியதை ஆதாரத்துடன் சமர்பித்து வழக்கு தொடர்ந்தார்
அந்த வழக்கில்தான் இப்பொழுது பரபரப்பு விசாரணை நடக்கின்றது
போபர்ஸ் வழக்குக்கு பின் சோனியா குடும்பம் சந்திக்கும் மிகபெரிய மோசடி இதுதான், இங்கேதான் பெரும் எச்சரிக்கை எழுகின்றது
முன்பு போபர்ஸ் ஊழல் அணலாய் அடிக்கும்பொழுதுதான் ராஜிவ் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க முயலும் பொழுது கொல்லபட்டார், கொன்றது யாராயினும் ராஜிவ் அப்பொழுது நடத்திய போராட்டம் போபர்ஸ் வழக்கே , அவரின் அரசியல் வாழ்வே அதில்தான் இருந்தது
அவ்வகையில் இப்பொழுது ராகுல்காந்தி கண்ணும் கருத்துமாக காக்கபட வேண்டியவர் அதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது எனபதால் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கபட வேண்டும்