நெல்லை மண் என்பது உணர்ச்சியும், மானமும், அறிவும் நிரம்பியது. இந்திய விடுதலையின் அடுத்தகட்ட போர் அங்குதான் தொடங்கிற்றுபாண்டியன் காலம் தொட்டு அது வித்தியாசமான பூமி, ஏன் நாயக்கன் வரும்பொழுது கூட அவன் ஆட்சி நெல்லையில் பெரும் தாக்கமாக இல்லை

நெல்லை அவர்களுக்கு சவால் கொடுத்திருக்கின்றதுநாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு.ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என சீறிய கட்டபொம்மன் என ஒரு வரிசை உண்டு.

அந்த வரிசையில் வந்தவர் வாஞ்சிநாதன்.

மொகலாயர் ஓய்ந்து இத்தேசம் வெள்ளையனிடம் சிக்கியபின் பாரதகண்டம் சிக்கியபின் வஞ்சகமாக எதிர்ப்புகளை அடக்கி பிரித்தாண்டு கொண்டிருந்தனர் வெள்ளையர்கள், அந்த சூழ்ச்சியில் தேசம் சிக்கி போராட்டமெல்லாம் தோற்றுகொண்டிருந்த காலம் அது

ஆஷ் அயர்லாந்து பிரபுகுடும்பதுக்காரர், கலெக்டராக நெல்லைக்கு வந்தவன், அவன் காலம் கிழக்கிந்திய காலம் அல்ல, அது பிரிட்டன் அரசு இந்தியாவினை கையில் எடுத்து ஆண்ட காலம், அப்பொழுது இந்தியாவினை தங்கள் காலணியாக அறிவித்த அக்காலத்தில் கலெக்டர்களுக்க்கு பெரும் அதிகாரம் இருந்தது

கலெக்டர்களுக்கு ஒரே வேலை இந்தியர் யாரும் ஆங்கிலேயர் வருமானத்திலோ இல்லை அதிகாரத்திலோ குறுக்கிட்டால் அவர்களை தங்கள் கைகூலிகள் மூலம் முடக்குவது அப்படியே வருமானத்தை பெருக்குவது

அமெரிக்கா தங்கள் கையினைவிட்டு வெளியேறிய நஷ்டத்தை இந்தியாவின் மூலம் பிரிட்டிஷ் அரசு வேகமாக ஈடு செய்து கொண்டிருந்தது, இந்தியர் கசக்கி பிழியபட்டு கொண்டிருந்தனர்ஆட்சி தன் கையில் இருந்தாலும் இந்திய சிக்கலுக்கெல்லாம் காரணம் பிராமணன் எனும் கோஷம் அப்பொழுதுதான் தொடங்கபட்டிருந்தது, இதில் சமூக சிக்கலும் மோதலும் மதமாற்றமும் நோக்கமாய் இருந்தது

எல்லா சாதியும் வெள்ளையனுக்கு இந்தியன் என அடிமைபட்டு வறுமைபட்டு கிடக்க என்னென்ன புரட்சி குரலெல்லாமோ கேட்டது ஆனால் வெள்ளையனுக்கு எதிராக எதுவுமில்லை என்பதுதான் ஆச்சரியம்

அன்று தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து மிக முக்கியமான துறைமுகமாக அன்று அறியபட்டது தூத்துகுடி. அங்கு கப்பல்விட்டு வெள்ளையனை நஷ்டபடுத்தினார் வ.உ.சி.

உப்பையே விடாத வெள்ளையன் இந்திய கப்பலை விடுவானா?பல சர்ச்சைகளுக்கு இடையே சிதம்பரம்பிள்ளை கைதுசெய்யபட்டார், போராட்டம் வெடித்தது

அப்பொழுது நெல்லையின் கலெக்டர் ஆஷ் (ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷி சுருக்கமாக ஆஷ்,) வெள்ளையர் என்றால் நம்மவருக்கு துரை, அப்படி தங்கள் கைகூலி மூலம் தனக்கே பட்டம் கொடுத்த்தான் வெள்ளையன்அவர்களை மிலேச்சர்கள் அதாவது தர்மத்துக்கு கட்டுபடாதவர்கள், வஞ்சகர்கள் என தேசாபிமானிகள் சொல்லிகொண்டிருக்க, அவர்களை துரை என கொண்டாடவும் ஒரு கூட்டம் இருந்தது

தேசத்தின் சாபம்அவர் போராட்டத்தை கட்டுபடுத்த சுட சொன்னார், 4 பேர் பலி, நெல்லை அரண்டது. வ.உ.சி மேல் மரியாதை கொண்டவர்கள் எல்லாம் கொதித்தனர்

அதில் ஒருவர்தான் வாஞ்சிநாதன்.அவர் ஒரு குழுவில் இருந்தார், அது சுதந்திர இந்தியாவினை ஆதரித்தகுழுதான் ஆனால் கூடவே இந்துதர்மம், இது இந்து பூமி என்பதே கொள்கையாக இருந்தது

சந்தேகமில்லை இந்த இந்துதேசம் மொகலாயரிடம் இருந்து இந்துஸ்தானுக்கு போராடிய போராட்டத்தின் தொடர்ச்சி அது, அதில் தவறேதும் இருக்க முடியாது

வ.வே.சு அய்யர் என்பவர்தான் அந்தகுழுவின் பிராதானம். அந்தகாலத்திலே லண்டனில் பாரிஸ்டர் படித்தவர், பிரிட்டன் அரசுக்கு விசுவாசமாக இருப்பேன் எனும் பிரமாணத்தை சொல்ல மறுத்து பாரிஸ்டர் பட்டத்தை இழந்தவர், ஆனால் சகலவித்தைகளும் அறிந்தவர், அதில் சண்டைபயிற்சிகளும் உண்டு, துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர்.

வாஞ்சிநாதன் இவரிடம் கற்றது ஏராளம் உண்டு.இந்நிலையில் பிரிட்டனின் அரசர், அந்நாளைய உலக அரசர் ஜார்ஜ் இந்தியா வந்தார், அந்நேரம் பெரும் பஞ்ச காலம், பலநூறு நதிகள் ஓடும் இந்த பாரதகண்டம் வெள்ளையர் ஆட்சியில் கடுமையாக சுரண்டபட்டு தானியமெல்லாம் வரி என பிரிக்கபட்டு ஏற்றுமதி செய்யபட்டதில் கடும் பஞ்சத்தில் தவித்தது

அப்பொழுது பெரும் செலவில் பிரிட்டனின் மிலேச்சன் மன்னன் வருகையும் பம்பாயில் அவனுக்கு பெரும் செலவில் கட்டடம் கட்டி நாடெங்கும் விழா நடத்துவது இந்தியரை கொதிக்க வைத்ததுபிரிட்டிஷ் அரசனை எதிர்க்கும் விதமாகவும் ஆங்கில ஆட்சிக்கு பெரும் எதிர்ப்பு கொடுக்கும் விதமாகவும் அதிரடியான காரியம் செய்ய திட்டமிட்டார்கள்

அந்நேரம் நெல்லை கலெக்டரின் அடாவடி உச்சத்தில் இருந்தது, தொழிலாளர்களை தூண்டிவிடுவது சாதிய மோதல்களை கீறிவிடுவது, வ.உ.சி பிள்ளையினை நடுதெருவுக்கு கொண்டுவருவது என அவனின் அட்டகாசம் எல்லை மீறி இருந்ததுஅவனை கொல்ல முடிவெடுத்தார்கள்,

அதுவரை இந்தியாவில் ஒரு கலெக்டெர் கொல்லபட்டதில்லைதேசபோராளிகள் திருவுளசீட்டு குலுக்கிபோட்டு வாஞ்சிநாதனை தேர்ந்தெடுத்தார்கள். அன்று கொடைக்கானல் செல்வதற்காக ரயிலில் மனைவியோடு சென்றான் ஆஷ்முதலில் குற்றாலத்தில் வைக்கபட்ட குறி, அப்பொழுது சாரல்மழை பிந்தியதால் கொடைக்கானலுக்கு பயணத்தை மாற்றிய ஆஷினால் மணியாச்சிக்கு மாறியது

மணியாச்சி அன்றே ஒரு சந்திப்பு ஆனால் காட்டுபகுதி, அங்கு நின்றிருந்த ரயிலில் ஏறி ஆஷினை சுட்டுகொன்றார் வாஞ்சிநாதன். நடந்தது 17.06.1911அதுவரை இந்தியாவில் ஒரு கலெக்டர் கொல்லபட்டதில்லை, அதுவே முதன் முதலானது , அக்கொலைக்கு பின்னாலும் இல்லை.

முதன்முதலாக ஆடிப்போனது வெள்ளை நிர்வாகம், அந்த அடியை கொடுத்தது நெல்லை மண், உலகமே அன்று திரும்பிபார்த்தது.

(வாஞ்சிநாதன் அந்த இடத்திலே தற்கொலை செய்ய,அவரை சோதித்தபொழுது ஒரு கடிதம் சிக்கியது. அது பல பக்கங்களை கொண்ட கடிதம்அதில் பல வரிகள் மறைக்கபட்டு வாஞ்சிநாதன் இந்து பார்ப்பன வெறியில் ஆஷ் துரையினை சுட்டு கொன்றதாக வெளியிடபட்டு அக்கதை இன்றுவரை நீடிக்கின்றது

இந்திய எதிர்ப்பினை காட்டவேண்டிய வாஞ்சிநாதனின் வரலாறு, வருணாசிரம தர்மத்தை காக்க நடந்தபோராட்டமாக அவரின் கடிதம் மூலமே வெள்ளையனால் காட்டபட்டது.)

ஆஷ் கொலைக்கு அடுத்து ஆங்கிலேயர் பதிலடி பயங்கராமானதாய் இருந்தது, அந்த குழுவின் பெரும்பாலான அய்யர்கள் தற்கொலை செய்யுமளவு, கடும் மூர்க்கத்தை ஆங்கிலேயர் காட்டினார்கள்.

வெள்ளையன் பொய்களை மீறி முதன்முதலாக ஒரு ஆங்கில கலெக்டரை கொன்று பிரிட்டனை அலறவைத்த நிகழ்வில் வாஞ்சிநாதன் வரலாற்றில் நிலைத்துவிட்டார்.அந்த மணியாச்சி ஜங்ஷனுக்கு வாஞ்சிபெயரே சூட்டபட்டது, இன்னும் அந்த ரயில்நிலையத்தை கடக்கும் பொழுதெல்லாம் அவர் நினைவுக்கு வந்துதான் செல்வார்.

ஆஷ்துரை உடல் பாளையங்கோட்டை ஜாண்ஸ் கல்லூரி எதிரே உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யபட்டுள்ளது, சுருக்கமாக சொன்னால் ஒரு பெரும் வரலாற்று சம்பவம் அங்கு அமைதியாக தூங்கிகொண்டிருக்கின்றது.

இப்படியாக அன்னிய ஆதிக்க ஆபத்து எவ்வழி வந்தாலும் முடிந்தவரை போராடி பார்ப்பதுதான் இந்திய தமிழக நெல்லை குணம், அதன் மண்ணின் குணம் அப்படியானது.குற்றாலத்தில் தன்னை கலெக்டர் அவமானபடுத்தினான் என கட்டபொம்மன் மனதில் அது விஸ்வரூபமெடுத்தது, செங்கோட்டைகாரனான வாஞ்சிநாதனுக்கு அது மனியாச்சியில் வெறியாய் முடிந்தது.

ஆனால் கட்டபொம்மனும்,வாஞ்சியும்,சிதம்பரனாரும் வீழ்ந்திருகலாம் ஆனால் அவர்கள் எதிர்த்த அந்த நோக்கம் பின்னாளில் நிறைவேறி வெள்ளையன் வெளியேறியது சரித்திரம்.எல்லா ஆட்சியாளருக்கும் ஆட ஒரு காலம் உண்டு, அடங்கவும் ஒரு காலம் உண்டு.அது உண்மையான நோக்கத்துகாய் போராடும் எல்லா போராளிகளும் ஆட்சியாளர்களால் வீழ்த்தபட்டாலும் காலத்தால் வீழ்த்தபடுவதே இல்லை

.இன்று வாஞ்சிநாதன் நினைவுநாள், அதாவது ஆஷ் கொல்லபட்டநாள். ஆங்கில அடக்குமுறையின் ஒரு வடிவமாகத்தான் ஆஷ் அந்நேரத்தில் அறியபட்டார்.இந்தியாவில் கலெக்டர் கூட நிம்மதியாக இருக்கமுடியாது எனும் ஒரு பயம் இந்நாளில்தான் வெள்ளையனுக்கு உண்டாயிற்று.

கலெக்டர் இல்லை என்றால் நிர்வாகம் ஏது? ஆட்சி ஏது?

மணியாச்சி ஜங்ஷனும், பாளையங்கோட்டை ஆஷ்துரை கல்லறையும் வெள்ளையனுக்கு மரணபயத்தை காட்டிய நெல்லையின் வரலாற்று அடையாளங்கள்.

இந்த தேசத்தின் சரித்திர சுவடுகள், அந்த பெருமையுடன் அவை கம்பீரமாக நிற்கின்றன.வ.உ.சிக்கும் நெல்லை மக்களுக்கும் செய்த கொடுமைக்காக, ஆங்கில ஆட்சிக்கு சாவுமணி அடித்த அடையாளமாக இந்திய எதிர்ப்பின் வடிவமாக நெல்லையில் அமைந்திருக்கின்றது ஆஷ் துரையின் கல்லறை.