திராவிட மாடல்

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவருக்கான வேட்பாளராக ஆளும் பாஜக தரப்பின் சார்பாக நிறுத்தபட்டுள்ளார் திரவுபதி மர்மு எனும் பெண்மணி

இவர் ஒடிசாவின் பழங்குடி வகுப்பினர், அவரை இந்த அளவு கைபிடித்து வளர்த்திருக்கின்றது பாஜக.

ஆம், 1997ல் ஓடிசாவின் கிராம பஞ்சாயத்தின் உறுப்பினராக இருந்த அவரை பின்னாளில் இருமுறை எம்.எல்.ஏ ஆக்கியது பாஜக, அப்பொழுது அவரை அமைச்சராகவும் ஆக்கியிருந்தது

பின் ஒடிசாவில் கூட்டணி அல்லாத பட்நாயக்கின் ஆட்சி அமைந்தபொழுது கொஞ்சமும் யோசிக்காமல் ஜார்கண்டின் முதல் பெண் கவர்னராக்கியது அக்கட்சி

இப்பொழுது இந்திய குடியரசு தலைவராகவும் அவரை பாஜக முன்மொழிந்துள்ளது, அவரின் வெற்றி உறுதிசெய்யபட்ட ஒன்றாக கருதபடுகின்றது

இந்த அறிவிப்பின் மூலம் பாஜக நேரடியாக சொல்லவரும் விஷயம் இரண்டு, மறைமுகமாக சொல்லும் விஷயம் ஒன்று

முதலாவது பாஜக பெண்ணுரிமையினை காக்கும் கட்சி என்பதும், பழங்குடியினர் எனும் தாழகிடக்கும் குடியின் பெண்ணை உயர்த்தி “சமூக நீதி” காத்த இயக்கம் என்பதும் உறுதி செய்யபடுகின்றது

“தாழ கிடப்பதை காப்பதே தர்மம்” எனும் அய்யா வைகுண்டரின் சமூகநீதியினை பின்பற்றுகின்றது அக்கட்சி என்பதை உலகுக்கு சொல்கின்றது

இரண்டாவது தமிழிசை அக்காவுக்கும் எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவி கிடைக்கலாம், முதல் நாடார் ஜனாதிபதியாக அக்கா வரலாம் என்பதும் கோடிகாட்டபடுகின்றது

ஆக தாழ்த்தபட்ட குலங்களுக்கும் பெண்களுக்கும் பாஜகதான் பெரும் பதவி கொடுத்து முன்னேற்றும் ஒரே கட்சி என்பது உறுதிசெய்யபட்டிருக்கின்றது

இளையராஜா சொன்ன “மோடியின் வடிவில் அம்பேத்கரை” பார்க்கின்றேன் எனும் வரி உண்மையாயிற்று, இளையராஜா இன்னொருமுறை உற்சாகமாக அதை சொல்லலாம் ஒருவரும் எதிர்க்க முடியாது

இப்பொழுது கருணாநிதி மட்டும் இருந்திருந்தால் “மோடி வடிவில் பெரியாரை காண்கின்றேன், பெரியாரின் கன்னத்தில் குத்தியிருந்த முள் அகற்றபட்டுவிட்டது” என பெரும் அறிக்கைவிட்டு அப்படியே அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிக்கு வெள்ளோட்டமும் பார்த்திருப்பார்.

எனினும் ஒரு தாழ்த்தபட்ட பெண்ணை மோடியும் பாஜகவும் மிகபெரிய இடத்தில் வைக்கும்பொழுதும் தமிழக சாதி ஒழிப்பு போராளிகள், ராம்சாமி கோஷ்டிகள், சமூக நீதி போராளிகள், தாழ்த்தட்டோருக்கான பிரநிதியாக தங்களை தாங்களே சொல்பவர்கள் என எவரிடம் இருந்தும் ஒரு வார்த்தை வரவேற்று வரவில்லை அல்லவா?

அதுதான் “திராவிட மாடல்”