ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 07

“பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின்”

முழு தியானத்தில் தீர ஆராய்ந்து ஞான உணர்வு பெற்றால் இடைவிடாத தவத்தின் பயன் மறுபிறப்பின்மை என்பது புரியும் என்கின்றது இக்குறள்

பேரா தவம் என்றால் இடையில் விடாத , நிறுத்தபடாத கடும் தவம் என பொருள். அந்த கடும் தவத்தின் பயன் அடுத்த பிறவி இல்லாது போக வழிசெய்யும், பிறவி இல்லா நிலை என்றால் பேரின்ப முக்தி நிலையினை அடைவது என்றாகும்

எப்பொழுது பிறவி அற்ற நிலை வரும் என்றால் நல்வினை தீவினை எனும் இரு வினைகளும் முழுக்க தீர்ந்த நிலையில், கர்மா முழுக்க அழிந்த நிலையிலே மறுபிறவி வராது

இடைவிடா கடும் தவம் கர்மாவினை அழிக்கும், அந்த ஞான உன்னத நிலையில் முக்தி கிடைக்கும் அப்பொழுது மறுபிறவிக்கு வாய்ப்பில்லை, பிறவி சங்கிலி அறுபடும் என்கின்றார் ஓளவையார்