குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 16
“கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனபப்டும் -இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்”
“கல்வியுடமை பொருளுடமை என்று இரண்டு செல்வமும் செல்வம் எனப்படும் இல்லார் குறை இரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும் தலைவணங்கி தாழபெறின்”
அதாவது கல்வியும் பொருளும் இரு தனிபெரும் செல்வங்கள், இந்த செல்வங்கள் வாய்க்கபெற்றவர்கள் முன் நிச்சயம் அது இல்லாதோர் இரந்து குனிந்து நின்று யாசிக்க வருவார்கள்
கல்வி செல்வமில்லாதோர் அதை பெற கல்விசெல்வம் உடையோர் முன் பணிந்து நிற்பார்கள், பொருட்செல்வம் இல்லாதோர் அச்செல்வம் இல்லாதோர் முன் யாசித்து இரந்து நிற்பார்கள் இது இயல்பு
இந்நிலையில் கல்வி செல்வம் கொண்டோரும், பொருள் செல்வம் கொண்டோரும் அகந்தையும் செருக்கும் இன்றி தங்களை பணிந்து இரப்போரிடம் பணிந்து கல்விகொடையும் பொருட்கொடையும் வழங்கினால் அச்செல்வம் சிறப்படையும்
ஆம், கல்விசெல்வமும் பொருட்செல்வமும் கொண்டவரின் பணிவால் பெருமை அடையும், பணிவற்ற கல்வியோ பொருளோ உண்மை செல்வம் ஆகாது என்கின்றார் குமரகுருபரர்.