இந்து பெண்களின் தனி அடையாளம் அவர், இன்றும் அவரே தமிழக பெண்களுக்கு மாபெரும் உத்வேகமும் வழிகாட்டியுமானவர்
அந்த முத்துலெட்சுமி பிராமண பிறப்பு, அக்காலத்திலே அதாவது பெண்கள் பெரிதளவில் கல்வி பெறாத காலங்களிலே படிக்க விரும்பி போராடியவர்
1900களில் பெண்களுக்கு கல்வி பிரதானமாக இல்லை, அன்றைய காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் குறைவு , அதுவும் அக்காலத்தில் இன்றுள்ள வகை வகையான கல்விகள் என எதுவுமில்லை
எனினும் சட்டம், மருத்துவம், பொறியியல் என ஒரு சில துறைகள் வளர்ந்து கொண்டிருந்தன
அன்றைய மருத்துவ கல்வி வித்தியாசமானது சம்ஸ்கிருதமும் லத்தீனும் படிக்க வேண்டும் இன்னும் என்னவெல்லாமொ உண்டு, சிரமபட்டு கற்கவேண்டி இருந்ததால் அக்கால பெண்களுக்கு அது சாத்தியமில்லை
ஆனால் முத்துலெட்சுமி போராடினார், தனியாக போராடினார் அவரின் உறுதியினை கண்ட புதுக்கோட்டை இந்து மன்னரே அவர் படிக்க வழிசெய்தார்
ஆம், இந்து பெண்ணை படிக்க வைத்தவர் இந்து மன்னர்தான், அது அல்லாது அவள் படிக்க விரும்பியிருந்தால் மதமாற்றமே வழி, ஆனால் முத்துலட்சுமி அதை செய்யவில்லை
ஒரு இந்துவாகவே நின்றாள், கற்றாள், மருத்துவரனார்
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமியே, தனி ஒருத்தியாக ஆண்களுக்கு நிகராக நின்று அவர் மருத்துவம் படித்ததெல்லாம் மன உறுதியின் உச்சம்
மருத்துவர் ஆயினாலும் மணவாழ்வில் விருப்பமில்லை ஒரு மெழுகின் வாழ்வுபலன் ஆயிரம் மெழுகினை ஏற்றிவைப்பதே என பெண்களுக்காக போராடினார்
பாரீசில் நடந்த மாநாட்டில் உலக பெண்களின் அடிமை நிலையினை 1926ல் முழங்கிய முதல் பெண் அவரே, உலக பெண்களுக்கான உரிமைகளை அவர்தான் பேசினார்
1925 வாக்கில் வெள்ளை அரசுகுட்பட்ட உள்ளாட்சி அமைப்பு சென்னை ராஜ்தானியின் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருமானார்
சென்னை கோட்டையில் மக்கள் பிரதிநிதியாய் கால்வைத்த முதல் பெண் அவரே, அவரின் கல்வி அவரை அங்கு அமர்த்தியது
அப்பொழுதுதான் திசைமாறி திரிந்த தேவதாசி ஒழிப்பு சட்டம் அவரால் கொண்டுவரபட்டது, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் அவராலே கொண்டுவரபட்டது.
தனக்கேற்ற துணையாக தன்னை புரிந்து கொண்ட சுந்தர ரெட்டி என்பவரை மணந்து முத்துலெட்சுமி ரெட்டியானார்
அவர்களின் முயற்சியில் தொடங்கியத்தான் அடையாறு மருத்துவமனை, இன்று புற்றுநோய் சிகிச்சைக்கு தனி அடையாளமாக திகழும் அந்த மருத்துவாலயம்
அனாதை பெண் குழந்தைகளை அரவணைக்கும் அவ்வையார் இல்லமும் அவர் ஏற்படுத்தியதே
ஒரு வகையில் சொன்னால் பாரத பெண்களின் வழிகாட்டி முத்துலட்சுமி
அந்த மருத்துவ மாமணிக்கு, தமிழக பெண்களின் விடுதலைக்கு முன்னோடிக்கு, என்றுமே தமிழக மகளிரின் தனிபெரும் அடையாளமாக திகழும் அந்த காரிகைக்கு இன்று நினைவுநாள்
காலமுள்ள காலம் அவரின் பெயரும் சாதனையும் இங்கு நிலைக்கும்
ராம்சாமி பெண்ணுரிமை பேசும் முன்பே பெண் உரிமையினை பெற்று பெற்றுகொண்டவர் அவர்
யார் சொல்லியும் பெண் விடுதலை நடக்காது, பெண்களே தானாக விலங்கை உடைத்தால்தான் உண்டு என கிளம்பி தன்னை நிருபித்த அந்த சமுக போராளிக்கு இன்று பிறந்தநாள்
இன்னொரு வகையில் அந்த பெண்ணுக்கு கல்வி கிடைக்க முழு பலமுமாய் நின்ற புதுகோட்டை மன்னரும் நினைவுக்கு வருவார்
இந்தியாவின் முதல் பெண்மருத்துவரை கொடுத்தது இந்து சமூகம் , இந்தியாவிலே முதல் முறையாக பெண்களுக்கு கல்வியும், சொத்துரிமையும் கொடுத்த இடம் தமிழ= இந்து சமூகம்
அனாதை பெண் குழந்தைகளை ஆதரிக்கும் அவ்வையார் மையங்களை திறந்தது தமிழக இந்து சமூகம்
இப்படி இந்தியாவுக்கே பெண்விடுதலைக்கு வழிகாட்டிய தமிழச்சி முத்துலெட்சுமி ரெட்டி ஓர் இந்து.
இந்நாலில் அவருக்கு அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு இந்தியரின் குறிப்பாக தமழரின் கடமையுமாகும்
குறிப்பாக தமிழக மங்கையருக்கு பெரும் நன்றிகடன் உண்டு
அவர் பாதை காட்டினார் நீங்கள் நடக்கின்றீர்கள், அவர் விளக்கேற்றினார் நீங்கள் பார்க்கின்றீர்கள்
அவர் கைகாட்டியாய் நின்றார் நீவீர் சரியான பாதை கண்டீர்கள்
அவர் அஸ்திவாரமாய் நின்றார் நீவீர் கோபுரமாய் உயர்ந்தீர்கள்
ஒவ்வொரு தமிழக பெண்களின் நன்றிக்குரிய அந்த முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அவ்வையார், வேலுநாச்சியார் போன்ற வீர தமிழச்சிகள் வரிசையில் வந்த அறிவு தமிழச்சி அவர், அடிமை விலங்கை உடைக்க வந்த போராளி தமிழச்சி அவர்
அவர் ஏற்றி வைத்த தீபமே இப்பொழுது பிரகாசமாய் எரிகின்றது
ஆம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவின் முதல் நவீன பெண் மருத்துவர் ஒரு இந்து பிராமண பெண், தடைகளிடையே போராடி முதல் பெண் மருத்துவராக வந்தது பிராமண பெண்
அவளும் பெரும் வசதியானவள் அல்ல , வறுமைதான் அதனால் புதுகோட்டை மன்னரால் படிக்கவைக்கபட்டவர் அவர்
ஆக ஈரோட்டு ராம்சாமி திராவிட கும்பலுக்கு முன்பே இங்கு பெண்கள் படிக்க கிளம்பியிருந்தார்கள் மிக பெரும் சாதனையெல்லாம் செய்வதார்கள் என்பது தெரிகின்றது
திராவிடம் பெண் விடுதலையினை கொடுத்தது என்பதெல்லாம் ராம்சாமிக்கு முன்பே முத்துலட்சுமி மருத்துவரானதும், திராவிட கும்பலில் மணியம்மையோ இல்லை வேறு போராளிகளோ படிக்க அனுப்படவில்லை என்பதும் திராவிடம் சொன்னதெல்லாம் சொல்வதெல்லாம் பொய் என்பதை காலம் காலமாக சொல்லிகொண்டிருக்கின்றது
தனியாக போராடி மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் மாபெரும் சாதனை ராம்சாமி கோஷ்டியின் பிரச்சாரத்தை எக்காலமும் பொய் என நிரூபித்து கொண்டே இருக்கின்றது
இங்கு பெண்களும் எல்லா துறையிலும் சாதிக்கலாம் என நிரூபித்தவள் ஒரு இந்து பெண், அதுவும் வறுமையான இந்து பிரமண பெண், பெண்களுக்கு இந்தியா முழுக்க பெரும் எடுத்துகாட்டாக இருந்தவள் இந்து பெண் என்பதில் சுக்கு நூறாக உடைகின்றது திராவிட கோஷ்டிகளின் பொய் பிம்பம்