குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 42

“புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும்
கழிமுடை நாற்றத்த வேனும் – விழலர்
விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்
சுளியார் சுமைபோடு தற்கு”

அறியா மானிடர் இந்த உடல் பெரும் உடலெல்லாம் புண்ணாகி புழுநெளிந்து நீண்ட தூரத்துக்கு துர்நாற்றமெடுத்தாலும் அந்த உடலை கைவிட விரும்பமாட்டார்கள் அவர்கள் சாதிக்கபோவது எதுவுமில்லை

ஆனால் ஞானியரும் வீரர்களும் மாண்பாளர்கள் உடலை துச்சமாக கருதி அதனை பயன்படுத்திய பின் தூக்கி தூர எறிய தயாராய் இருப்பார்கள்

உடலை அளவுக்கு மீறி நேசித்து அதனை சரியாக பயன்படுத்தாதவர்களால் மகத்தான காரியங்களை செய்யமுடியாது என்பது பாடலின் பொருள், இன்றளவும் பொருந்தி வரும் மிக அழகான வாழ்வியல் தத்துவம்