இந்திய சுதந்திர வரலாறு : 05

இந்திய சுதந்திர வரலாறு : 05

டில்லி ஆஜ்மீர் (அஜாய மேரு) பகுதியினை ஆண்டு கொண்டிருந்தான் அந்த பிருத்வி ராஜ சவுஹான், 20 வயதிலே பெரும் வீரமும் பெரும் படையும் கொண்ட இந்து மன்னனாய் நிலைபெற்றிருந்தான்

ப்ப்பொழுது கன்னோசி நாடு அதாவது இன்றைய உத்திர பிரதேச‌ பகுதியில் ஜெயசந்திரன் என்றொரு அரசன் இருந்தான், அவன் ஒரு யாகம் நடத்தினான் , தன்னை தலைவராக ஏற்கும் படி பலருக்கு ஓலை அனுப்பினான் எல்லோரும் வந்து வணங்கி யாகத்தில் கலந்து கொண்டனர்

இது அவனை ஒரு பெரிய மன்னனாக அங்கீகரிக்கும் கவுரவம், அக்காலத்தில் நடந்த அசுவமேத யாகங்களின் சாயல் இது

ஆனால் பிரித்விராஜன் வரவில்லை, தன்னை அவன் அவமதித்ததாக மனதில் புழுங்கிகொண்டிருந்தான் ஜெய்சந்திரன் என்றாலும் மோதிபார்க்கும் ஆசை எல்லாம் இல்லை

எனினும் அரண்மனையில் பிரித்விராஜன் பற்றி அவன் விவாதிப்பதும் அதை நாலுபேர் மறுத்து பிரித்வியின் பெருமைகளையும் அவனின் மாவீரத்தையும் பற்றி பேசுவதும் வழக்கமானது

அதை அவ்வப்போது கேட்டுகொண்டிருந்த ஜெயசந்திரன் மகள் சம்யுத்தாவிற்கு பிரித்வி மேல் காதலே வந்தது

நேரில் கண்டுவரும் காதலுக்கும் , ஒருவரை பற்றி கேட்டு கற்பனையினை பெருக்கி வரும் பிரமாண்ட காதலுக்கும் வித்தியாசம் உண்டு, இரண்டாவது காதல் கூடுதல் மயக்கமானது

ஆம் பார்க்காமலே வந்த காதல் அது, பிரித்விராஜன் பற்றிய செய்திகளை கேட்டே அவள் காதலில் விழுந்தாள்

என்ன இருந்தாலும் அரச குடும்பம் அல்லவா? உரிய முறையில் யாரையோ பிடித்து அனுப்பி தன் காதலை பிரித்விராஜனிடம் சொல்ல சொல்லிவிட்டாள்

அவனுக்கும் ஆச்சரியம், சம்யுக்தா பற்றி கேள்விபட்ட அவனும் அவள் காதலை ஏற்றுகொண்டான், ஆனால் சந்தித்ததே இல்லை எல்லாமே தூதுவர்கள் மூலம் நடந்தது

காதலிக்கும் பெண்களுக்கு தனி தைரியம் வரும், அதுவும் வீரனை காதலிக்கும் பெண்களுக்கு அந்த தைரியம் பன்மடங்காகும்

வீரனை காதலித்த பின் சம்யுக்தா சும்மா இருப்பாளா? அவளுக்கும் தைரியம் வந்தது, மிக தைரியமாக ஜெயசந்திரனிடமே தன் காதலை சொன்னாள், “மணந்தால் பிரித்வியினை மணப்பேன் இல்லை என்றால் கண்ணனே வந்தாலும் மணக்க மாட்டேன்”

ஆத்திரத்தில் பொங்கினான் ஜெயசந்திரன், பிரித்வி என் அரண்மனைக்கு வரவே தகுதியற்றவன், அவன் என் அரண்மனை காவலாளி வேலைக்கே சரி என சொல்லி பிரித்வி போலவே ஒரு சிலை செய்து அரண்மனை வாசலில் வைத்தான்

அதை அடிக்கடி மிதித்தானா, காரி உமிழ்ந்தானா, செருப்பு மாலை இட்டானா? யானை கொண்டு சாணமிட செய்தானா என்ற தகவல் இல்லை, ஆனால் பிரித்விராஜன் தகுதி இதுதான் என சொல்லிகொண்டிருந்தான்

சம்யுக்தையோ அச்சிலைக்கு மாலையிடுவதும் திலகமிடுவதும் அதை சுற்றி ஆடுவதுமாக இருந்தாள்

பொறுத்து பார்த்த மன்னன் ஒரு நாள் சுயம்வரம் நடத்தினான், மகளிடம் சொன்னான் ” பிரித்விராஜனை தவிர எல்லா ராஜகுமாரரும் சுயம்வரத்திற்கு வருவார்கள், ஒருவனுக்கு மாலையிடு, என்னை மீறி அவனும் வரமுடியாது, நீனும் செல்லமுடியாது”

சம்யுக்தாவிற்கு வேறுவழியில்லை, ஆனாலும் பிரித்வி ராஜனை நம்பினாள்

சுயம்வர நாளும் வந்தது, ராஜகுமாரர் எல்லாம் கூடி இருந்தனர், சம்யுக்தா கையில் மாலை கொடுக்கபட்டது, விரும்பியவன் கழுத்தில் மாலையிட உரிமையும் கொடுக்கபட்டது

சம்யுக்தா நல்ல அழகி என்பதால் ராஜகுமாரர் எல்லாம் பல்லை மட்டுமல்ல‌ கழுத்தையும் காட்டியபடி நின்றனர்

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள் சம்யுக்தா தேசமே, ஏன் தேசங்களே திரண்டிருந்தது, தன் காதலை காட்ட மிக சரியான சந்தர்ப்பம் இது என எண்ணிய சம்யுக்தா சட்டென ஓடி சென்று பிரித்வி சிலைக்கு மாலையிட்டாள்

சபை அதிர்ந்தது, சிலையினை இடித்துவிட்டு அவளை இழுத்துவர ஜெயசந்திரன் அடியெடுத்து வைத்தபொழுது அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது

சட்டனெ சிலைக்கு உயிர்வந்து சம்யுக்தாவினை அள்ளி குதிரையில் வைத்து பறந்தது

ஆம் நடக்கும் விஷயங்களை மிக துல்லியமாக கண்காணித்த பிரித்விராஜன் சுயம்வரம் அன்று சிலைக்கு பதிலாக அவனே நின்றிருந்தான், சிலை போலவே நின்றிருந்தான்

யாருக்கும் சந்தேகம் வராதாடி நின்றிருந்தது அவனின் சாமார்த்தியம்

துள்ளியோடிய குதிரை இருவரையும் சுமந்து ஓடியது, பெரும் படையுடன் பின் தொடர்ந்தான் ஜெயசந்திரன், தொலைவில் தன் படையினை நிறுத்தி வைத்திருந்தான் பிருத்வி, அந்த இடத்தை அடைந்ததும் யுத்தம் தொடங்கிற்று

யுத்தம் நடக்கும் சாக்கில் சம்யுக்தாவோடு டெல்லிக்கு வந்தான் பிரித்வி,ஜெயசந்திரனால் அவன் படைகளை தாண்டி வரமுடியவில்லை

காதலர்கள் சந்தித்ததும், காந்தர்வ மணம் புரிந்ததும் ஒரே நாளிலே

அவர்கள் வாழ்வு ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது, இருமுறை தன்னை அவமானபடுத்திய பிரித்வி ராஜனை ஒழிக்க தூக்கமின்றி வழிதேடினான் ஜெய்சந்திரன், வாய்ப்பு அந்த கோரியின் படையெடுப்பில் வந்தது

அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான்

இம்முறை வலுவான குதிரைபடையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைபடை வலுவாக இருந்தது என்பதால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி

இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களை திரட்டினான், அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான்

ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவ சென்றவர்களையும் தடுத்தான் ஆயினும் களம் கண்டான் பிரித்வி

உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களை செய்தான் ஜெயசந்திரன்

தன் இருபெரும் எதிரிகளை தனியாக சந்தித்தான் பிரித்வி

இடையில் பலமுறை கோரியினை பிரித்வி விரட்டி அடித்திருந்தான், கஜினி மட்டுமல்ல கோரியும் ஒரு கொள்ளையனாக வந்து பலமுறை அடிபட்டு திரும்பினான், அந்த 17 முறை என்பது கோரிக்கும் பொருந்தும்

ஆனால் இம்முறை கன்னோசி மன்னன் ஜெய்சந்திரனின் சதி இருந்ததால் பிருத்விராஜனுக்கு சில நெருக்கடிகள் இருந்தன‌

போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்கு பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது

யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி, ஆனாலும் அவனால் ஒரு அடி முன்னேறமுடியவில்லை, கோரி விரைவில் கொல்லபடும் அளவு போர் பிருத்விக்கு சாதகமாக இருந்தது

கோரி பேச்சுவார்த்தை நாடகமாடி நாளை கடத்தினான், அதில்தான் சிக்கினான் பிருத்வி

“இந்துஸ்தானத்தின் உனக்கு ஒரு அடி நிலம் கூட தரமுடியாது, ஆனால் உயிர்பிச்சை வழங்குவேன் திரும்பிவிடு” என உறுதியாய் சொன்னான் பிரித்வி

இதுதான் பிருத்வியின் தவறு, தோற்றவனை கொல்ல கூடாது எனும் இந்து தர்மத்தில் அவன் நிலைத்திருந்ததுதான் அவன் தவறு

பின்வாங்குவது போல் நாடகமாடிய கோரி யாரும் எதிர்பாரா வேளை நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினை பிடித்தான், இதற்கு ஜெயசந்திரனின் கொடூரமான திட்டமும் இருந்தது

துரோகத்தால் வீழ்த்தபட்டான் பிரித்வி

கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களை குருடாக்கினான் கோரி

எதிரி வென்றதும் ராஜபுத்திர பெண்கள் என்ன செய்வார்களோ அதை சம்யுக்தாவும் செய்தாள், ஆம் தீக்குளித்து இறந்தாள் அவளோடு பல பெண்கள் செத்தனர்

அத்தோடு மிக முக்கியமான காரியத்தை செய்தான், ஆம் தனக்கு உதவிய ஜெயசந்திரனை கொன்றான் அவன் நன்றிகடன் அப்படி

கோரி ஒரு கொள்ளையன் இங்கு ஆளமாட்டான் அது முடியாது நிச்சயம் பிருத்வி நாடு தனக்குத்தான் என திட்டமிட்டான் கன்னோசி மன்னன், ஆனால் கோரிக்கு நன்றி என்பதோ அன்பு என்பதோ எதுவுமில்லை அவனை பொறுத்தவரை இந்துஸ்தான் தங்கம் கொழிக்கும் தேசம் அது கிடைக்க என்னவேண்டுமானாலும் செய்வான்

இப்படி பிருத்வி ராஜன்,ஜெய்சந்திரனை ஒழித்தாலும் கோரிக்கு இந்துஸ்தானத்தில் ஆளமுடியுமா எனும் சந்தேகம் இருந்தது, அதற்கு காரணம் இரண்டு

முதலாவது வலுவான இந்து எதிர்ப்பு, இங்கு இந்துக்கள் தன்னை நிச்சயம் நிம்மதியாக ஆளவிடமாட்டார்கள் ஒவ்வொரு நிமிடமும் திருப்பி அடிப்பார்கள் என அஞ்சினான், இரண்டாவது ஆப்கன் எனும் முரட்டு பூமியினை விட்டு இந்தியா வந்தால் அங்கிருந்து யாராவது உருவாகி தன்னை தாக்கவருவார்கள் எனவும் அஞ்சினான்

இதனால் தன் அடிமைகளில் ஒருவனான குத்புதீன் ஐபெக்கை டெல்லி வைஸ்ராயாக‌ நியமித்தான்

அதாவது அந்த அடிமை வாழ்ந்தால் தனக்கு கட்டுபட்டவன் செத்தால் தன் அடிமைகளில் ஒருவன் அவ்வளவுதான் எனும் திட்டம் அது

அந்த நொடியில் இருந்துதான் அதாவது கோரி வஞ்சகத்தால் இந்துஸ்தானின் வாசலில் இருந்த அரசர்களை கொன்ற அந்த பொதுயுகத்துக்கு பின்னரான 1190க்கும் 1200க்கும் இடையில்தான் இந்தியாவில் முதன் முதலில் அன்னியர் அரியணை ஏறினர்

குத்புதீன் ஐபெக் எனும் கோரியின் அடிமைதான் இந்தியாவின் முதல் அன்னியனாக ஆட்சியில் அமர்ந்தான்

முதல் சுதந்திர போராட்டம் எங்கு தொடங்கிற்று என்றால் அதையும் தொடங்கி வைத்தவன் பிரித்வி ராஜனே

ஆம், குருடானான பிரித்விராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது அவனுக்கு வழக்கமாயிருந்தது

பலசாலி அகபட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனை தடுமாற வைத்து ரசித்து பழிவாங்கும் கொடூர பழக்கம் அன்று இருந்திருக்கின்றது

“ஒரு நாள் நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே? இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?” என நகையாடினான் கோரி

தன்னால் ஒலிவரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும் என்றான் பிரித்வி

அரை போதையில் இருந்த கோரி, அவன் கையில் வில்லை கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அதுதான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டதுதான் தாமதம்

மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினான் பிரித்வி

ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றான் பிரித்வி

(இதுகட்டுகதை என சொல்வோர்கள் உண்டு ஆனால் கோரி லாகூரை தாண்டுமுன்பே கொல்லபட்டிருக்கின்றான் என்கின்றது அவனது வரலாறு

உண்மையில் பிரித்விராஜனால் அவன் கொல்லபட்டிருக்க வாய்ப்பு அதிகம்..)

அதன் பின்பு பிரித்வி கொல்லபடுகின்றான், அவனுக்கு வயது 24

24 வயதிற்குள் மங்கா புகழ்பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே

இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் கடைசி முறையும் அவனால் வென்றிருக்க முடியும், கோரியிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தாலே அவனால் வென்றிருக்க முடியும்

கோரியின் வஞ்சகமும், ஜெயசந்திரனின் துரோகமும் பிரித்வியினை சாய்த்தது

துரோகத்தால் வீழ்த்தபட்டான் மாவீரன் பிரித்வி, அவனின் வாழ்வும் காதலும் வீரமும் கடைசியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவிய பாடல்களாயின

இன்றும் வட இந்தியாவின் கிராமிய பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு

ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகனைக்கு சூட்டியது

ஆம் இந்தியா தன் ஏவுகனைக்கு “பிரித்வி ” என‌ அவன் பெயரையே சூட்டியது

இதை கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகனை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு “கோரி” என பெயரிட்டு வைத்திருக்கின்றது

900 ஆண்டுகளை கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகனைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள்

நிச்சயம் பிரித்வி இனி தோற்கமாட்டான், காரணம் அன்று அவனுக்கு துரோகம் செய்ய‌ ஜெயசந்திரன் இருந்தான் இன்று மொத்த இந்தியாவும் அவனுக்கு ஆதரவாய் இருகின்றது

பிரித்த்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது

அதில் பிரித்விராஜன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்

பிரித்வி ராஜனுக்கு பின் போராட்டத்தை தொடங்கியது யார்? அவள் ஒரு பெண் குர்மா தேவி

பிரித்திவி ராஜன் கோரியினை கொன்றதும் குத்புதீன் ஐபெக் எனும் அடிமைக்கு கொண்டாட்டமாயிற்று

ஒருவகையில் தமிழக அரசியல்வாதிகள் சிலரின் யோகம் அவனுக்கு இருந்தது

எங்கோ அடிமையாக இருந்த அவன் கோரிக்கு விற்கபட்டதும் கோரி அவனை டெல்லி அஜயமேரு (ஆஜ்மீர்) பகுதியின் வைஸ்ராய் ஆக்கியதும் அவன் விதிபலன் அல்லது இந்துஸ்தானின் மோசமான நேரம்

இனி கோரி இல்லை தனக்கு தலமை யாருமில்லை என முடிவு செய்த குத்புதீன் தன்னை டெல்லி சுல்தானாக பிரகடனபடுத்தி இந்துஸ்தானின் அரசனாக அறிவித்து கொண்டான்

இந்துஸ்தானம் தன் எதிர்ப்பை காட்ட தொடங்கிற்று அதை செய்தவர் குர்மா அல்லது குமார தேவி எனும் பெண்

அவள் சமர்சிங்கின் இரண்டாம் மனைவியாய் இருந்தாள், சமர்சிங் பிருத்த்விராஜனின் சகோதரியினை திருமணாம் செய்திருந்ததால் கோரியுடன் யுத்தம் செய்ய சென்றான் அங்கே கோரியால் கொல்லபட்டான்

அதற்கு பழிவாங்கத்தான் படையெடுத்து வந்து குத்புதீனை தாக்கினாள் குர்மா தேவி, குத்புதீனை சூழ்ந்து வெட்டி தள்ளினாள், பெரும் போரிட்டு பழக்கமில்லா குத்புதின் குதிரையில் இருந்து சரிந்தான்

அவன் செத்துவிட்டதாக கருதினாள் குர்மா தேவி, ஆனால் அவன் ஆட்கள் அவனை எடுத்து சென்று பிழைக்க வைத்தனர்

பெரும் யுத்தம் இருபக்கமும் நடந்த நிலையில் டெல்லியினைகைவிட்டு மேற்கு பக்கம் ஓடியிருந்தது குத்புதீன் படை

ஆனால் சாவின் விளிம்பில் இருந்து மீண்ட குத்புதீன் அடிமையான தனக்கு கிடைத்த அரசபதவியினை விட விரும்பவில்லை ஆப்கனில் இருந்து ஆள்திரட்டி பெரும் படையோடு வந்து மறுபடியும் டெல்லியினை கைபற்றினான்

அவனை மறுபடி விரட்ட இந்துக்கள் தயாராகும் முன் டெல்லியின் அடையாளங்களை மாற்றினான்

அதுவரை துருவ் ஸ்தம்பம் அல்லது விஷ்ணு த்வஜ் இருந்த விஷ்ணுவின் கோவிலையும் அவன் அழித்தான், அந்த கோவிலும் தூணும் குப்தர்களால் உருவாக்கபட்டவை

குத்புதீன் தான் டெல்லியினை பிடித்த அடையாளமாக அதற்கு குதுப்மினார் என தன் பெயரை இட்டான், அது இன்றுவரை நிலைத்துவிட்டது

தனக்கு ஒரு முரட்டு தளபதியினை கில்ஜி என வைத்த அவன் வட இந்தியாவினை கட்டுபடுத்தினான், முன்புதனக்கு பெரும் சவால் விடுத்த இந்துராணி குர்மா தேவியினை அவன் குறிவைத்து பாய்ந்தான் ஆனால் ராணி சிக்கவில்லை அவன் மகள் கர்னா என்பவன் அவன் பட்டத்து குதிரை சுப்ராக் என்பதோடு சிக்கினான்

அந்த குதிரை உயர்ஜாதியுமாய் தனி வனப்பு கொண்டதாய் இருந்ததால் அதை கைபற்றினான் குத்புதீன்

மமதையில் பெரும் கொடுமை ஒன்றை செய்தான் குத்புதீன்

கர்னாவின் தலையினை வெட்டி போலோ ஆட முடிவெடுத்தவன், அந்த சுப்ராக் குதிரை மேல் ஏறி களத்துக்கு வந்தான், அங்கு அக்குதிரை முன்னால் அதன் முன்னாள் எஜமானன் தலையினை வெட்டினான், அந்த தலையினை கொண்டு போலோ ஆடவேண்டும்

ஆனால் தன் எஜமான் தன் கண்முன் கொல்லபட்டதும் கண்ணீர் விட்ட குதிரை குத்புதீனை கீழே தள்ளி 11 முறை நெஞ்சிலே மிதித்து கொன்றது

ஆம், இந்துஸ்தானத்தின் குதிரைகள் கூட அந்நியரை அனுமதிக்காமல் சுதந்திரபோர் நடத்திய தேசமிது

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் அக்குதிரைக்கும் இடம் உண்டு, இந்துஸ்தானின் முதல் அன்னிய ஆட்சியாளனை இந்துதேசத்து குதிரையே கொன்று இம்மண்ணின் போர்குணத்தை உலகுக்கு சொன்னது

(தொடரும்..)