அந்த குழந்தைக்கு இயல்பிலே

அந்த குழந்தைக்கு இயல்பிலே எல்லாமும் மெதுவாக புரியும் ஒரு வினோத நோய் இருந்தது, எல்லாமே தாமதமாகத்தான் புரியும், அதன் மூளை செயல்பாடு அப்படி

மெல்ல வளர்ந்து பிராய வயதில் செல்வந்தராக சுற்றியபொழுது காங்கிரசை நம்பிற்று, காந்தி தலைவன் என்றது வெள்ளை ஆடைஅணிந்தது இன்னும் பலவும் பேசிற்று

அப்படியே காங்கிரஸ் தலைவராகவும் அமர்ந்தது, கோவிலில் தர்மகர்த்தாகாவும் இருந்தது

அதன் இயல்பான அறிவில் எல்லாம் புரிய நாளாயிற்று, அய்யய்யோ காங்கிரஸ் ஒரு பைத்தியகார இயக்கம் என தலைதெறிக்க ஓடி நீதிகட்சியில் சேர்ந்தது

நீதிகட்சி ஒரு வெள்ளையன் அடிமை என அதற்கு புரிய நெடுங்காலம் ஆனது, இந்த பயல்களும் சரியில்ல என அது சுயமரியாதை இயக்கம் கண்டது

தன்னை எல்லோரும் வணங்கி பணிவதே சுயமரியாதை என கருதி இயக்கம் கட்டியது, பலரை சேர்த்தும் கொண்டது, தன் சுயமரியாதையினை நிரூபிக்க ஒரே வழி பார்ப்பனரையும் இந்துமதத்தையும் கண்மூடிதனமாக எதிர்ப்பது என கனவு கண்டது

அதற்கு அடிக்கடி வரும் கனவில் தென்னிந்தியா முழுக்க திராவிடமாக தன் கையில் விழும் என அது நம்பியது

ஆனால் பாகிஸ்தான் போல திராவிட நாடு சாத்தியமில்லை என அது தெரிந்து கொள்ள சுமார் 20 ஆண்டுகள் ஆனது

தான் 20 வருடமாக கத்திய திராவிடநாடு கிடைக்காமல் வெறும் 3 மாதத்தில் ஜின்னா பாகிஸ்தான் வாங்கிபொழுதுதான் வெள்ளையன் உரித்த வெங்காயம் அதற்கு விளங்கிற்று

தன்னோடு இருந்தவர்களெல்லாம் கொள்கை வீரன், சமூக போராளி என நினைதவருக்கு அவனவன் எப்படிபட்ட சுருட்டல் கோஷ்டி என்பது 70 வயதில்தான் தெரிந்தது

எல்லாமே தாமதமாக தெரிந்த அவருக்கு தன் வாரிசின் அவசியமும் 70 வயதில்தான் தெரிந்தது, அதுவும் கைகூடவில்லை

தான் வளர்த்த கூட்டம் எப்படிபட்ட அயோக்கியகூட்டம் என்பதை 80ம் வயதில்தான் அவரால் உணரமுடிந்தது

தன் இறுதிகாலங்களில்தான் தான் எவ்வளவு பெரும் மந்த புத்தி உள்ளவனாக எல்லாவற்றையும் தாமதமாக உணர்ந்தவன் எனும் தெளிவு அவருக்கு வந்தது

காங்கிரசுக்கு தான் எடுத்த கோடாரி காமராஜரை சரித்தபொழுது அழுதார்

இந்தியினை எதிர்த்து தான் பேசியது இப்பொழுது பெரும் குழப்பமாக வந்தபொழுது அழுதார்

திராவிடம் என்பதே மாயசொல் என்பதை உணராமல் அதை பேசி அது மரமாய் வளர்ந்ததை நினைத்துஅழுதார்

வசனகர்த்தா நடிகன் என கூத்தாடிகளை வளர்த்துவிட்ட பாவத்துக்காக அழுதார்

சாதி ஒழிப்பு என தான் கேட்டது இன்று சாதி அரசியலாக வந்திருப்பதை நினைந்து அழுதார்

பிராமணரை தாமதமாக புரிந்து கொண்டதை உணர்ந்து பிராமணர்களிடமே அழுதார்

எதையும் சரியாக புரிந்து கொள்ளாத தன் மந்த புத்தியால் இந்துமதத்துக்கும் தமிழ் மக்களுக்கும் தான் செய்த துரோகம் நினைத்து வருந்தினார்

தன் மந்த புத்தியால் மதமாற்ற கும்பலுக்கும் தேசவிரோத கும்பலுக்கும் செய்த உதவிகளை நினைந்து மிக வருந்தினார்

வெள்ளைக்காரன் இந்தியாவிட்டு போனால் இந்தியா குண்டூசி செய்யாது என முதலில் சொன்ன அவர் 1970களில் இந்தியா ராக்கெட்டும் அணுகுண்டும் செய்வதை கண்டு தன் நம்பியதெல்லாம் பொய் என உணர்தார்

பிராமணர் ஒழிந்தால் இந்துமதம் ஒழியும் என முதலில் சொன்ன அவர் பிராமணர் இல்லாவிட்டாலும் எல்லா சாதியுள்ளும் இந்து உணர்வு உண்டு அது ஒருகாலமும் ஒழியாது என்பதை மெல்ல உணர்ந்தார்

இந்துமதம் சாதிமதம் என சொன்ன அவர் தமிழன் எல்லா மதத்திலும் சாதிபார்க்கின்றான் என்றால் பிரச்சினை இந்துமதத்தில் அல்ல என்பதை மெல்ல உணர்ந்தார்

பாகிஸ்தான் இந்தியாமோதலை கண்ட அவர் தான் திராவிட நாடு கேட்டது எவ்வளவு விபரீதம் , ஒருவேளை அந்நாடு அமைந்திருந்தால் யாரிடமெல்லாம் மோதியிருக்கும் என உணர்ந்து நல்ல வேளையாக திராவிட நாடு அமையவில்லை என அமைதி கொண்டார்

இப்படி எல்லாமே தாமதமாக புரிந்த அவர் தெய்வத்தையும் தாமதமாக புரிந்து தன் காலத்துக்கு பின் தன் குழும்பத்துக்கு வளமும் வாழ்வும் தந்த திருப்பதி ஆலயம் முன் தனக்கு சிலைவைக்கும் ஆசையினை ஒரு குறிப்பில் எழுதிமடியில் வைத்து கொண்டார்

ஆனால் அவர் காலம் முடியும் முன் திருப்பதி ஆந்திராவோடு போயிற்று அதன் அடுத்த நிலையில் இருக்கும் திருவரங்கமே அவர் அடிபொடிகள் கண்ணில் பட்டன‌

அவரின் நன்றியுள்ள விசுவாசிகள் அந்த நன்றிகடனை செய்தனர், என்ன இருந்தாலும் அரசியலில் குழப்பி பிழைப்பது எப்படி என கற்றுகொடுத்தவருக்கு அந்நன்றிகடன் கூட செய்யாவிட்டால் எப்படி?

“எல்லாவற்றையும் தாமதமாகவே புரிந்து கொள்ளும் அம்மனிதன், தெய்வத்தையும் தாமதமாக புரிந்துகொண்டான்” என்றபடி அங்கு சிலையாக அமர்ந்திருக்கின்றான் அம்மனிதன்