புதிய மின்சார திட்ட அறிவிப்பு
மத்திய அரசின் புதிய மின்சார திட்ட அறிவிப்பு என்ன என்றால் இதுதான்
அதாவது இது “மின் உற்பத்தி” கொள்கை அல்ல மாறாக “மின் விநியோக துறை”யில் சில மாற்றங்களை அறிமுகபடுத்துகின்றார்கள், இந்த விநியோகத்தில் தனியார்களும் வரலாம் என அறிவிக்கின்றது அரசு
அதாவது தனியார்கள் இப்பொழுது மின்சாரம் தயாரிக்கலாம் ஆனால் மக்களுக்கு விநியோகிப்பதில் அரசுதான் முழு பொறுப்பையும் வகிக்கின்றது, இதனில் மாநில அரசின் அமைப்புக்களும் உண்டு
தமிழகத்தில் Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) எனும் அமைப்பு இதை செய்கின்றது, இது மத்திய அரசின் தொகுப்பு மின்சாரம் மற்றும் தனியாரிடம் இருந்து வாங்கி மக்களுக்கு விநியோகம் செய்கின்றது, அதில்தான் அணிலும் இதர பறவை விலங்குகளும் குதித்து தடையினை ஏற்படுத்துகின்றன
சரி, மத்திய அரசின் புதிய மின்சார விநியோக திட்டம் என்ன சொல்கின்றது?
அது நேரடியாக தனியாரே மின்சாரத்தை விநியோகிக்கலாம் என சொல்கின்றது, அதற்கு அனுமதி அளிக்கின்றது
இன்னும் புரியும்படி சொன்னால் முன்பு பேருந்து, விமான போக்குவரத்து அரசிடம் இருந்தது, ரயில் அரசிடம் இருந்தது
இப்பொழுது தனியார் சேவைகள் அனுமதிக்கபடுகின்றன, மக்கள் விமானம் ரயில் பேருந்து என எல்லா சேவைகளையும் பெறுகின்றார்கள், அரசை விட தனியார் சேவைகள் மக்களுக்கு விலைகுறைவும் நல்ல சேவையும் வழங்குகின்றன
தொலைதொடர்பும் முன்பு முழு அரச கட்டுபாட்டில் இருந்தது, தனியார் நிறுவணங்கள் வந்தபின் இப்பொழுது மக்களுக்கு குறைந்த விலையில் தொலைதொடர்பு விஷயங்கள் கிடைக்கின்றன
பெட்ரோல் டீசல் எரிபொருளெல்லாம் முன்பு அரச விநியோகத்தில் இருந்தன, பின் தனியாரிடம் விநியோக உரிமை கொடுத்து எல்லா மக்களும் நினைத்த இடத்தில் பெறமுடிகின்றது
டிவி நிகழ்ச்சிகளே முன்பு அரசகட்டுபாட்டில் இருந்தன தூதர்ஷன் ஒன்றுதான் இருந்தது வானொலியும் அப்படியே, இன்று தனியார் டிவிக்களும் வானொலிகளும் மக்களுக்கு எல்லா சேவைகளையும் வழங்குகின்றன
தமிழக மாகாணத்தில் கல்வி, மருத்துவம் என எல்லாம் அரசகட்டுபாட்டில் இருந்தது இப்பொழுது தனியார் அவற்றை நடத்தி மக்களுக்கு சேவை செய்கின்றார்கள் அல்லது மக்கள் நல்ல பலனை விரைவில் பெறுகின்றார்கள்
இதையேதான் மின்சாரதுறையிலும் மத்திய அரசு அனுமதிக்கின்றது, இப்பொழுது அரசிடம் மின்சார துறை இருப்பதால் சிக்கல்கள் அதிகம், அவர்களுக்கு போட்டியுமில்லை எதிரியுமில்லை இதனால் ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் சுணக்கமே மிஞ்சுகின்றது
இதையே தனியாருக்கு அளித்தால் அங்கு போட்டி வரும், தனியார் தொழில்கள் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாய் நடப்பவை, அங்கு ஊழியர் சிக்கல், யூனியன் இன்னும் இதர சிக்கல் ஏதுமில்லை, வேலை சரியாக நடக்கும், போட்டியினை சமாளிக்க கடுமையாக அவர்கள் உழைக்க வேண்டும்
மின்சார விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கபட்டால் தொலை தொடர்பு, போக்குவரத்து போன்றவற்றில் மக்கள் பயன்பெறுவது போல மின்சார விநியோகத்திலும் பெரும் புரட்சி நடக்கும்
24 மணிநேர தடையில்லா மின்சாரம் மக்களுக்கு வழங்கபடும், விலையும் பெரிதும் உயராது, பல கம்பெனிகள் களத்தில் இருக்கும்போது அதெல்லாம் வாய்ப்பே இல்லை
இதனால் மாநிலங்களின் இலவச மின்சாரம் தடைபடும் என்பதெல்லாம் வெற்று கூச்சல், இப்பொழுதும் தனியாரிடமோ இல்லை மத்திய அரசிடமோ வாங்கித்தான் மாகாண அரசு இலவச மின்சாரத்தை வழங்குகின்றது, இது போக சொந்த உற்பத்தியும் உண்டு அதனால் அதற்கு சிக்கல் ஏதும் வர வாய்ப்பே இல்லை
ஒரு நாடு வளர மின்சாரம் மகா அவசியம், உடலின் இதய ஓட்டம் போல மின்சாரம் எல்லாவற்றுக்கும் அடிப்படையான காலமிது, துரதிருஷ்டவசமாக அதை சேகரித்து வைக்கும் நுட்பம் இன்னும் வரவில்லை
அதனால் நாட்டு மக்களும் தொழிற்சாலைகளும் முழுவதும் இயங்க உற்பத்தியும் தொழிலும் பெருக, வாழ்வு தடையின்றி தொடர மின்சாரம் அவசியம், அதனை வழங்கும் முறையும் முறையாக மேம்படுத்தபட வேண்டும்
120 கோடி மக்கள் வாழும் நாட்டில் அவர்கள் மின்சார வழங்கலை உறுதிபடுத்த வேண்டும் அதற்கு இந்த மின்சார விநியோக திட்டம் சரியான ஒன்று
திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது மக்களுக்கு பலனளிக்கும் விஷயம் என்பது 70 வருட அரசியலில் பல இடங்களில் மெய்பிக்கபட்ட விஷயம்
இந்த திட்டத்தினையும் வழக்கம் போல் திமுக குழப்புகின்றது, மக்கள் மேல் அவ்வளவு பாசமும் மக்கள் விலைகுறைவில் எல்லாம் பெற்றுகொள்ள வேண்டும் எனும் அன்பும் இருந்தால் மாகாணத்தில் கல்வி, மருத்துவம்,போக்குவரத்து என எல்லாவற்றையும் தமிழக அரசே ஏற்று நடத்தட்டும் பார்க்கலாம்
அவ்வளவு ஏன் கட்சிக்காரன் நடத்தும் மது ஆலைகளை அரசுடமையாக்கி மக்களுக்கு குறைந்த விலையில் சேவை செய்யட்டும் பார்க்கலாம்…
தேசம் இப்பொழுது சர்வதேச நாடுகளின் முதலீட்டு களமாக விளங்குகின்றது, “மேக் இன் இன்டியா” எனவும் இன்னும் பல வகைகளிலும் வெளிநாட்டு தொழில்களும் ஆலைகளும் பெருகுகின்றன
அவற்றுக்கான அடிப்படையே மின்சார திட்டத்தில்தான் உள்ளது எனும்பொழுது மகா வேகமான தடையில்லாத மின்வழங்கல் அவசியம், தேசம் அதனில்தான் எழுந்து வரமுடியும்
அதற்கான அடிப்படைகாரியங்களைத்தான் மோடி அரசு செய்கின்றது, தேசம் வேகமாக வளரும் இந்நேரம் இந்த சீர்திருத்தம் முதலாவதான மற்றும் அவசியமான திட்டம்