ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 08
“எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவார்கள்
நல்லுலக நாத னடி”
இக்குறள் “எல்லா உலகத்து இருந்தாலும் ஏத்துவார்கள் நல்லுலக நாதன் அடி” என பிரிந்து பொருள் தரும்
மூவுலகு மட்டுமல்ல, 14 உலகங்களில் இருப்போர்களில் உண்மையினை உணர்ந்தவர்கள் எப்பொழுதும் பரம்பொருளை அடிபணிந்து போற்றி கொண்டே இருப்பார்கள் என்பது பொருள்
(வாழ்வில் தொழில் , அந்தஸ்து, என பல விஷயங்கள் பல மாந்தருக்கு உலகமாக தெரிந்தாலும் அங்கும் உண்மை ஞானம் கொண்டோர் எந்நிலையிலும் பரமனை போற்றுவார்கள் என்பதும் இன்னொரு பொருள்)
எங்கு எந்நிலையில் இருந்தாலும் பரம்பொருளை ஞானமுள்ளோர் தேடி பணிந்து நிற்பர் என்பது குறளின் பொருளாகும்