குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 56
“நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் – திட்பமா
நாளுலந்த தன்றே நடுவ னடுவின்மை
வாளா கிடப்பன் மறந்து”
நண்பனுக்கு வஞ்சகமாய் , அவனை வீழ்த்தும் சகல வழிகளையும் ஆராய்ந்து , பகைவன் பக்கம் சேர்ந்து நண்பனை ஒழித்துகட்ட நினைத்துகொண்டிருக்கும் வஞ்சகனுக்கு காலம் முடிந்தே விட்டது. ஒருவனின் பாவ புண்ணியத்தை நடுநிலையோடு அளக்கும் யமதர்மன் இந்த பாவத்தை கண்டு இறங்கி வராமல் இருக்க மாட்டான் என்பது பாடலின் பொருள்
தம்மேல் நம்பிக்கை கொண்ட நண்பனுக்கு செய்யபடும் துரோகத்துக்கு ஒரு காலமும் மன்னிப்பே இல்லை, எமனிடம் இருந்து அவன் தப்பவே முடியாது என்பது பாடலின் பொருள்.