ஆச்சார கோவை : 36

“சுடர் இடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்
படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்
பலர் இடை ஆடை உதிராரே என்றும்
கடன் அறி காட்சியவர்”

அதாவது ஒரு மனிதனுக்கும் விளக்குக்கும் இடையே உள்ள இடைவெளியில் நடந்து செல்லக்கூடாது. சுவர் மேல் உமிழக்கூடாது. பெரும் வறுமையும் கஷ்டமும் வந்தாலும் அடுத்தவர் பயன்படுத்திய படுக்கை விரிப்பு, போர்வையை பயன்படுத்தக்கூடாது, மிகப் பெரிய ஜனநெரிசலிலும் நம் ஆடை அடுத்தவர் மேல் படும் வண்ணம் நடக்கக்கூடாது. பலர் முன் நம் ஆடையை உதரக்கூடாது. இதுவே நற்கடமைகள் அறிந்த அறிவாளிகளின் செயல் ஆகும்.

விளக்குக்கும் சுவருக்கும் இடையில் செல்வதால் ஏற்படும் நிழல் பாதிப்பினை ஏதாவது ஏற்படுத்தலாம் என்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்றார்கள்

சுவர்மேல் உமிழ்தலும், அடுத்தவர் ஆடையினை உடுத்துதலும், அடுத்தவர் மேல் ஆடை உரச நடப்பதும் நோய்களை பரப்பும் என்பதால் அதை தவிர்க்க சொன்னார்கள் இந்துக்கள்