ஆச்சார கோவை : 37
“பிறர்மனை கள் களவு சூது கொலையோடு
அறன் அறிந்தார் இவ் ஐந்தும் நோக்கார் – திறன் இலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வுழி உய்த்திடுதலான்”
அடுத்தவர் மனைவியினை அபகரித்தல், மது, களவு, சூதாடம், கொலை ஆகிய ஐந்தும் அறிவுடையோர் மனதாலும் விலக்கி வைக்கும் விஷயங்கள், இப்பெரும் பாவங்கள் ஒருவனை இகழ்ச்சிக்கு உள்ளாக்குவதோடு மட்டுமன்றி சாவுக்கும் அழைத்து செல்லும் என்பது பாடலின் பொருள்
நிம்மதியான வாழ்வினை விரும்புபவர்கள் பிறன் மனைவி, மது, கொள்ளை, சூது, கொலை என்ற ஐந்தையும் மனதாலும் நினைத்து பார்க்க மாட்டார்கள், அப்படி வாழ்வதே ஆச்சாரமான வாழ்வு என்பது இப்பாடலின் கருத்து