யானை
உலக விலங்குகளில் மனிதனோடு ஒட்டும் விலங்குகள் குறைவு, எல்லா விலங்குகளையும் மனிதன் அடக்கி நடத்திவிட முடியாது. மிக சில விலங்குகளே மனிதனுடன் நெருங்கி பழகும் அளவு அறிவு கொண்டவவை
அதில் ஒன்றுதான் யானை
மிக பெரும் உடலும் கடும் பலமும் கொண்டதாயினும் அதை பழக்கும் வித்தை ஆசியருக்கு குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு இனங்களுக்கு அத்துபடி, ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் பந்தம் அது.
மனிதன் யானையோடு பழக தொடங்கியது மிக பழங்காலம் எனினும் இந்திய தாய்லாந்து பகுதிகளில்தான் அந்த வழக்கம் அதிகம் மற்ற நாடுகளில் அது இல்லை
பைபிளில் கூட யானைபற்றி குறிப்புகள் இல்லை
ஐரோப்பியருக்கு குதிரை வளர்க்க தெரியும் , அரேபியருக்கு ஒட்டகம் என இருந்த காலத்தில் இந்தியருக்கு குறிப்பாக தென்னிந்தியருக்கு யானையினை பழக்கும் அந்த வித்தை தெரிந்திருக்கின்றது
அதை கடுமையான வேலை செய்ய பணித்தார்கள், மரத்தடி தூக்குவது முதல் அணைகட்ட, கோவில் கட்ட கல் இழுப்பது வரை அவை பயன்பட்டன
அவை அன்று மிக மிக முக்கியமான இடத்தில் இருந்தது, யானை என்பது கடவுளாக கூட வணங்கபட்ட தேசம் இது. இன்றுவரை இந்து ஆலயங்களில் யானை நிற்கும் தத்துவம் அதுவே
தனக்கு உபயோகமான விலங்குகளை கடவுளின் அம்சமாக பார்க்கும் இந்துமதம் யானையினையும் கடவுள் நிலைக்கு வைத்திருந்தது
காடு, மேடு, கோவில் என கடும் உழைப்பினை கொடுத்த யானைகள் போர்களத்திலும் சாகசம் காட்டின, பட்டத்து யானை என மன்னனும் ஸ்பெஷல் யானைகளை எல்லாம் வைத்திருந்தான்
அன்று கோட்டைகளை இடிப்பது முதல் கோட்டை கதவினை இடித்து நொறுக்குவது வரை யானைகளே செய்யும் , இக்கால பீரங்கிக்கு சமமானது அது
அன்று இந்திய மன்னர்களின் யானைபடை உலக பிரசித்தி, ஐரோப்பிய மன்னர்கள் எல்லாம் அதை அதிசயமாக பேசிகொண்டார்கள்
மாவீரன் அலெக்ஸாண்டர் மிக எளிதாக ஐரோப்பா, மேற்காசியா என வெற்றிபெற்று வந்தபொழுது அவனை தோற்கடித்து விரட்டியது போரஸின் யானைபடை என்கின்றது வரலாறு, அவன் அதனிடம் தோற்றிருக்கின்றான்
இந்திய யானைபடை பன்னெடுங்காலம் இங்கு காவல் இருந்தது
ஆப்கானியர்களிடம் செங்கிஸ்கான் விட்டுசென்ற குதிரைவளர்க்கும் கலையில் ஆப்கானியரிடம் பலம் வாய்ந்த குதிரைபடை உருவானது
இந்திய யானை பலமானது என்றாலும் ஆப்கானிய குதிரையின் வேகம் வேறுமாதிரி இருந்தது, ஊடுருவி தாக்கும் கலையில் அவர்கள் தேர்ந்தார்கள், எனினும் யானைபடை அவர்களுக்கு பெரும் மிரட்டலை கொடுத்தது
இன்றும் இந்தியாவின் தனி கவுரவமும் அடையாளமுமானது யானை
காட்டு விலங்குகளில் மிக அறிவானது யானை, கூடித்தான் வாழும் அந்த கூட்டத்துக்கு வயதான பெண் யானையே அதற்கு தலமை தாங்கும்
அவைகளின் கன்று கூட வழிதவறி போக கூடாது என்பதற்காக யானை தடங்களை உருவாக்கும், அவற்றில் மானிடன் குறுக்கிடாதவரை அவை மனிதனை சீண்டுவதில்லை
மனிதன் சாலை, கட்டடம் என அவற்றின் வழியில் ஆக்கிரமிப்பு செய்தால் அன்றி அவை இங்கு திரும்பாது, அந்த வழியினை அவை எப்படி நினைவில் வைக்கின்றன, எப்படி அந்த தடத்தை பின்பற்றி மிக சரியாக நடக்கின்றன என்பதெல்லாம் அவற்றுக்கே தெரிந்த வித்தை
இன்னொரு அதிசயமான பழக்கம் அவைகளிடம் உண்டு, காடென்றாலும் எல்லா நேரமும் அங்கு நீர் கிடைக்காது. வறண்ட காலங்களில் வயதான யானை முன் நடக்க மற்ற யானை பின் தொடரும் குறிப்பிட்ட இடத்தில் அந்த மூத்த யானை காலால் மிதித்தால் நீர்வரும்
ஆபத்து காலத்திலும் நீர்வரும் வழியினை அவை அறிந்து வைத்திருக்கின்றன, இன்னும் அவைகளின் வாழ்வில் ஏகபட்ட ரகசியங்களும் ஆச்சரியங்களும் உண்டு
பார்க்க பிரமாண்டமானதும் பலமானதுமாயினும் பழகிவிட்டால் மனிதனுக்கு குழந்தையாய் அடங்கும் குணம் அதனுடையது
பழக்குவது சாதாரணம் அல்ல, அதை பட்டினி போட்டு அடக்கி அங்குசம் வைத்து மிரட்டி இன்னும் கொஞ்ச கொஞ்சமாக உணவு கொடுத்து பாகன் இல்லையென்றால் தான் வாழமுடியாது என அதை பயமுறுத்தி கொண்டுவருவது ஒருவகை
இன்னொரு வகை போர்களத்த்துக்கு பழக்குவது, அது இப்பொழுது இல்லை, களத்துக்கு யானை ஒரு வெறியோடு செல்ல வேண்டும் என்பது யுத்த கணக்கு அந்த வழக்கம் இப்பொழுது இல்லை
எனினும் ஜோத்பாய் அக்பர் படத்தில் யானையினை பழக்கும் ஒரு காட்சி உண்டு, அப்படித்தான் அந்நாளில் போருக்கு பழக்கினார்கள்
இன்று வெறும் வேடிக்கை பொருளாக ஆகிவிட்டது யானை, அதன் இடத்தினை புல்டோசர்களும் பெரும் எந்திரங்களும் பிடித்து கொண்டன, தந்தம் மட்டும் இல்லையென்றால் இப்பொழுது யானையினை தேடுவார் யாருமில்லை
இந்திய காடுகள் குறிப்பாக நமது மேற்குதொடர்ச்சி மலை காடுகள் யானைக்கு பெயர் பெற்றவை, தாய்லாந்தும் பிரசித்தி. அங்கும் யானைக்கு தனி மரியாதை உண்டு
தேவை இல்லாத எதையும் மனிதன் தூர வீசிவிடுவான் அது அவனின் குணம் அதனால் யானை பயன்பாடு நின்றுவிட்ட காலத்தில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கின்றது மானிட சமூகம்
ஆனால் இந்துக்களின் ஏற்பாடு சிலாகிக்க கூடியது, நன்றி மறக்காதது இந்துமதம்
மனிதனோடு வாழ்ந்த , அவனுக்கு உபயோகமாய் இருந்த எல்லா விலங்குகளையும் தெய்வ நிலைக்கு உயர்த்தியது அந்தமதம்
கோவில் காளை, குதிரை, கோவில் யானை என அவை உயர்த்தி வைத்திருக்கும் தத்துவம் அதுதான்
இன்றும் யானைகள் கம்பீரமாக ஆலய வளாகங்களில் நிற்கும் சாஸ்திரமும் அதுதான்
இந்துமதம் இருக்குமளவும் யானைகள் நினைவுகூறபடும் , ஐந்தறிவு மிருகங்களுக்கும் அவை நன்றியோடு கொடுத்த இடமே தனி
இன்று உலக யானை தினம், ஆப்ரிக்க யானைகளின் அஞ்சதக்க நிலையினை விட இந்திய யானைகளின் நிலை ஓரளவு நன்றாகவே இருக்கின்றது
அந்த அறிவுமிக்க, சிறிய கண்களும் ஆடும் காதும், நீண்ட தும்பிக்கையினை ஆட்டியபடி வரும் குழந்தை போன்ற அதிசய உயிரினை காக்க வேண்டியது நம் கடமையாகும்..
இந்துமதம் ஞானமான மதம், அது எக்காலமும் மாறாத தன்மைகளை கொண்ட மதம் அதனால் பலமான யானையினை மிக பலமான பிள்ளையாரின் வடிவமாக வைத்தது
காரணம் இயற்கை மாறா விஷயங்களை கொண்டது மானுட செயற்கை விஞ்ஞானம் நாளுக்கொரு மாறும் வடிவங்களை கொண்டது, இரண்டாவதை பின்பற்றினால் தெய்வவடிவம் மாறிகொண்டே இருக்கும்
இதனால் அதுவிநாயகருக்கு மாறாத யானை வடிவினை கொடுத்து அவர் பலமானவர் என குறிப்பால் காட்டிற்று
இந்துமத பிரமாண்ட ஆலயங்களை எழுப்பியதில் யானைகளுக்கு பெரும் பங்கு உண்டு, அதனாலோ என்னவோ எக்காலமும் யானை இந்து ஆலயங்களில் நிற்க நன்றிகடனை இந்துமதம் செய்தது
இந்த உலகம் நாளுக்கொரு மாற்றம் பெறலாம், நாளுக்கொரு வடிவம் பெறலாம் ஆனால் பண்டைய உயிர்களை காக்கும் வழியும், பல அடையாளங்கள் தொடர்பற்று போகாதபடியும், பெரும் வரலாறுகளை நினைவூட்டிகொண்டே இருக்கும்படியும் ஞானமாக படைக்கபட்ட மதம் இந்துமதம்
அம்மதம் இருக்கும் வரை பெருவாரியான விலங்குகளும் பறவைகளும் எக்காலமும் பாதுகாப்புடன் வாழ்ந்துகொண்டே இருக்கும், மானிடருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பெரும் பாதுகாவல் கொடுப்பது ஞானமான இந்துமதம் ஒன்றே