ஆச்சார கோவை : 38
“பொய் குறளை வெளவல் அழுக்காறு இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார் சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அரு நிரயத்து உய்த்திடும்
தெய்வமும் செற்றுவிடும்”
கற்றறிந்த தெளிவான அறிவுடைய பெரியோர்கள் ஒருநாளும் பொய், ஏமாற்றி கோள் சொல்லுதல், பிறர் பொருளை அபகரிக்க திட்டம் இடல், பொறாமை ஆகியவற்றை மனத்தால் சிந்திக்க மாட்டார்கள். அம்மாதிரி சிந்தனையே ஒருவனனை வறுமை சூழ்ந்து, இம்மை மறுமைக்கும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆழ்த்திவிடும், நரகத்திற்கும் வழிவகுக்கும், தெய்வமும் அவனை விட்டு அகன்று போகும் என்பது பொருல்
பொய், ஏமாற்றுவதற்கே பேசுதல், பிறர் பொருள் கவறுதல், பொறாமை என நான்கும் கலக்காத வாழ்வே ஆச்சாரமானது என்கின்றார் புலவர்