நீதிநெறி விளக்கம் : 59
“பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து – மெய்யிற்
புலமைந்துங் காத்து மனமா சகற்றும்
நலமன்றே நல்லா றெனல்”
பொய், கோள் சொல்லுதல் எனும் புறம் பேசுதல், கடும்சொல், பயனற்ற பேச்சு பேசுதல் என நான்கும் இல்லாமல் பேச வேண்டும், பேச்சில் இந்த நான்கும் இருக்க கூடாது, இவ்வழியில் செல்லாமல் புலன்களையும் கட்டுபடுத்தி வைத்தல் வேண்டும் , அதுவே மனதின் மாசை அகற்றி நலம் காக்கும் என்பது பாடலின் பொருள்