மானவாது “விக்”காவது

இலங்கைக்கு வந்த சீன கப்பலின் நிலை திரிசங்கு சொர்க்கமாக நிற்கின்றது, அது துறைமுகத்தில் இன்னும் அனுமதிக்கபடவில்லை மாறாக 400 பணியாட்களுடன் சர்வதேச கடல்பரப்பில் நிற்கின்றது

திட்டமிட்டபடி அக்கப்பல் ஆகஸ்டு 11ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 17 வரை இலங்கை ஹம்பாந்தோட்டாவில் நிற்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை

இலங்கைக்கு சீனா கப்பலை அனுப்ப காரணமே இந்தியாவின் சுதந்திர தின விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், இந்திய ராணுவ சாகசம் இதர தொடர்புகளை ஒரு அச்சத்தோடு நடத்த எச்சரிக்கை இட வேண்டும் என பல திட்டங்களோடுதான் வந்தது

பல ரீதியான சிக்கல்களை 75ம் ஆண்டுவிழாவில் இந்தியாவுக்கு கொடுப்பதுதான் அவர்கள் மறைமுக திட்டம்

ஆனால் தைவான் சிக்கலில் போர்பயிற்சியில் சீனா இறங்க கப்பல் தாமதமாக கிளம்பியது , அதையும் தாண்டி இந்தியாவின் அழுத்தம் இன்னும் சிக்கலாயிற்று

இடையில் அக்கப்பல் வங்கதேசத்துக்கு செல்ல முனைந்திருக்கின்றது, ஆனால் வங்கதேச அரசு இந்தியாவிற்கு அஞ்சி அடைக்கலம் கொடுக்கா நிலையில் இலங்கைக்கு மறுபடி வந்திருக்கின்றது

இப்பொழுது இருபக்கமும் அடிவாங்கும் இலங்கை இந்தியாவிடம் அழுதே விட்டது, ஒரு பக்கம் கடன்காரன் இன்னொரு பக்கம் கஞ்சி ஊற்றுபவன் என அந்நாடு தலையில் கைவைத்து அமர்ந்தது

அதே நேரம் ஒரு வாரத்தில் இலங்கையினை அடையாலாம் என வந்த சீன கப்பல் உணவு எரிபொருள் இல்லை எங்களை ஹம்பாந்தோட்டாவில் விடுங்கள் எரிபொருள் நிரப்பி 10 மூட்டை நூடுல்ஸ் வாங்கி கொண்டு ஓடிவிடுகின்றோம் என சொல்லி கொண்டிருக்கின்றது

எதுவானாலும் ஆகஸ்டு 16ம் தேதி அதாவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் முடிந்து பேசிகொள்ளலாம் என இலங்கை அறிவித்துவிட இப்பொழுது கடலில் காத்து கிடக்கின்றது சீன கப்பல்

உண்மையில் சீனா எனும் வல்லரசுக்கு இது அவமானம், அந்த பெரிய நாட்டின் கப்பல் உணவில்லை எரிபொருள் இல்லை என இலங்கை எனும் குட்டிநாட்டுவாசலில் நிற்பது, அதுவும் வராதே என சொன்னபின்பும் வந்து வாசலில் நிற்பது அவமானம்

ஆனால் சீனாவுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் மானவாது “விக்”காவது?