குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 60
“நல்லா றொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற் கொருப்படார் – பல்பொறிய
செங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம்
பைங்கட் புனத்தபைங் கூழ்”
நல்லொழுத்தின் உச்சியில் நிலைத்து நிற்பவர்கள், அதனை தலையாயனதாக கருதுபவர்கள் ஒரு காலமும் தீமை செய்ய இணங்கவே மாட்டார்கள், பலம் வாய்ந்த புலியானது பசித்தாலும் புல்லை தின்னாது என பொருள்
அதாவது புலி கடும் பசி எடுத்தாலும் புல்லை உண்ணாது என்பது போல நல்லொழுக்கத்தில் நிலைத்திருப்போர் எந்நிலையிலும் கீழான காரியங்களை செய்யமாட்டார்கள்.