வாஜ்பாய்
அவர் காலம் கொடுத்த வரம், உறுதியான ஆனால் ஒள்வீசும் வைரம் போன்ற சாயல் அவர். வங்காளிகளுக்கே உரிய அமைதியும் சாந்தமும் அந்த முகத்தில் ஓடினாலும் அவர் மனம் நாட்டுபற்றில் மிக வைராக்கியமானவர்
அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த தேசத்தின் விடிவெள்ளி, நம்பிக்கை கொடுத்த ஒரு நட்சத்திரம்
அந்த வாஜ்பாய் சுதந்திர போராட்ட தியாகி, ஈரோட்டு ராம்சாமியும் அண்ணாதுரையும் கருணாநிதியும் வெள்ளையன் போக கூடாது என கதறிய காலங்களிலே அவர் நாட்டுக்காய் சிறை சென்ற தியாகி.
இயல்பில் அவர் இந்து ஆன்மீகவாதி அவ்வகையில் நாட்டுபற்றும் இயல்பாக வந்தது , ஆரிய சமாஜத்தில் இருந்த அவர் பின் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரானார்
இங்கு சொல்லபடும் பெரும் பொய்களில் ஒன்று ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் நாட்டுக்கு போராடவில்லை என்பது, அது முழுக்க தவறு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்றுமே காங்கிரசோடு சேர்ந்து தன் உறுப்பினர்கள் போராடுவதை தடுத்ததே இல்லை , அவ்வகையில் வாஜ்பாயும் காந்தியோடு இணைந்து போராடினார்
காந்தியின் பெரும் போராட்டமான “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டு தண்டனையும் பெற்றவர் வாஜ்பாய்
தேசபிரிவினை அவர் மனதை பெரிதும் பாதித்த நிகழ்வு, உன்மையான தேசாபிமானிகளுக்கு அது வலி அந்த வலி வாஜ்பாய்க்கும் இருந்தது, அதன் பின் ஜனசங்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார், காங்கிரஸின் போக்கு சரியில்லை அது நாட்டுக்கு ஆபத்து என முதலில் எச்சரித்தவர்களில் வாஜ்பாயும் ஒருவர்
இந்நாட்டு இந்துக்களுக்கும் இந்து மக்களுக்கும் இழைக்கபடும் அநீதி அவருக்கு பெரும் வருத்தம் கொடுக்க நேருவின் காலங்களில் வாஜ்பாய் தன் கடமையினை ஜனசங்கத்தில் இருந்து செய்துகொண்டே இருந்தார், நாட்டுக்கான குரல் அவரிடம் இருந்து வந்துகொண்டே இருந்தது.
கண்ணியமும் நேர்மையும் நாட்டுபற்றும் மிகுந்த வாஜ்பாயினை எல்லோரும் விரும்பினார்கள்
அமைதியான முகம் அதில் எப்பொழுதும் சிந்தும் புன்னகை, இனிய வார்த்தைகளோடு வரும் பேச்சு, அந்த கனிவான பேச்சில் உறுதியாய் வரும் நாட்டுபற்று மூச்சு என வலம் வந்த அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது
நேரு மட்டுமல்ல இந்தியாவே மதித்த ஜனசங்க தலைவர்களில் ஒருவராக இருந்தார் வாஜ்பாய், அவரின் இயல்பான அமைதி குணமும் நாட்டுபற்றும் அவருக்கு நற்பெயரை பெற்றுகொடுத்தன
மிசா காலத்தின் அடக்குமுறையில் வாஜ்பாயும் சிக்கினார், அப்பொழுதுதான் காங்கிரஸ் அல்லாத அரசு அமையவேண்டும் என பலர் விரும்பினார்கள், திமுகவுக்கும் வாஜ்பாய்க்கும் ஒரு நட்புறவு வந்தது அப்பொழுதுதான்
காங்கிரஸை குழிதோண்டி புதைக்க தன் வாழ்நாளையே அர்பணித்து 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருந்த கருணாநிதி வாஜ்பாயுடனும் நட்பு பாராட்டினார். மிசா காலத்திற்கு பின் இந்திய அரசியலில் பல கட்சிகள் உருவாயின, ஜனதா ஆட்சிக்கும் வந்தது அந்த ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக அமர்ந்தார் வாஜ்பாய்.
முதன் முதலில் நாட்டு பாதுகாப்பில் துணிச்சலான முடிவுகள் எடுத்தவர் அவரே, இஸ்ரேலுடன் உறவை தொடங்கிய முதல் இந்திய அரசியல்வாதி அவர்தான்.
அவர்காலத்தில்தான் இஸ்ரேலின் சிங்கம் மோசே தயான் இந்தியா வந்ததும், பாகிஸ்தான் அணுவுலை மேல் இந்தியாவிலிருந்து தாக்குதல் நடத்த அனுமதி கோரிய விஷயங்களும் நடந்தன
வாஜ்பாய் அந்த சவாலை எடுத்தார், நிச்சயம் சிரிய , ஈராக்கிய அணுவுலை போல பாகிஸ்தானை முளையிலே கிள்ளி இருக்கலாம், ஆனால் மொரார்ஜி தேசாய் அனுமதிக்கவிலை
எனினும் வாஜ்பாயின் துணிச்சலான முயற்சி சிலாகிக்கபட்டது
1984ல் பாஜக தொடங்கபட்டபொழுது அதை தொடங்கிய 4 முக்கிய தலைவர்களில் ஒருவராக வாஜ்பாய் இருந்தார்
அன்று பாஜக மதவாத கட்சி என முத்திரை குத்தபட்டாலும் வாஜ்பாயின் மென்மையான மேன்மையான குணமும், இந்துக்களின் உணர்வுகளை அவர் விளக்கி நின்றதும் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஈழவிவகாரங்களில் கருணாநிதியுடன் ஒற்றுமையாக நின்ற வாஜ்பாயினை மறக்க முடியாது, ராஜிவ் கொலைக்கு பின்பே வாஜ்பாய் ஒதுங்கினார்
ஏதோ பெரும் தீவிரவாத இயக்கம் போல் கருதபட்ட பாஜகவின் சிக்கலான காலங்களை வாஜ்பாய் எனும் பெரும் மனிதனின் துணையுடனே அக்கட்சி கடந்து சென்றது. 1996க்கு பின் வந்த குழப்பமான நிலையில் கூட்டணி கட்சியின் பலத்தோடு பிரதமரானார் வாஜ்பாய். அவர்களுக்கு அதிமுக ஆதரவு கொடுத்தது, கருணாநிதி இங்கு முதல்வராக இருந்தார்.
ஜெயலலிதாவிற்கு தமிழக அரசியல் புரிந்த அளவு டெல்லி அரசியில் பிடிபடவில்லை, அங்கு அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 1989ல் ராஜிவினை வற்புறுத்தி கருணாநிதி அரசை கலைத்த ஜெயலலிதா பின் வாஜ்பாயிடமும் அதே கோரிக்கையினை வைத்தார். 1989ல் புலி அராஜகம் போல் நிலமை பின்னாளில் இல்லை என்பதை உணர்ந்த வாஜ்பாய் மறுத்தார். வாஜ்பாய் மாமனிதனாக உயர்ந்து நின்றது அக்கணமே
பாஜக ஒருவகையில் பாராட்ட வேண்டிய கட்சி, ஆம் அரசியலில் ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் அப்பாற்பட்ட விஷயங்களை செய்யவே மாட்டார்கள், காங்கிரஸ் ஆட்சியில் மகாண ஆட்சிகள் அடிக்கடி பந்தாடபட்டு கலைக்கபட்டன
ஆனால் பாஜக இன்றுவரை அப்படி செய்யவில்லை, அசுரபலம் பெற்றிருந்தாலும் இன்றுவரை அது மாகாண ஆட்சிகளை டிஸ்மிஸ் செய்ததில்லை
வாஜ்பாய் சொல்லி கொடுத்த அரசியல் நாகரீகம் அது, அதுதான் வாஜ்பாய்
நியாயத்துக்கு எதிராக எதையும் செய்யமாட்டேன் எனும் அந்த குணத்திலே இருந்தார். ஆட்சியே இல்லை என்றாலும் கருணாநிதி ஆட்சியினை கலைக்கமாட்டேன் என முடிவோடு நின்றார். ஜெயாவின் பிடிவாதத்தில் ஆட்சி கலைந்து தேர்தல் வந்தது.
இந்திய வரலாற்றின் குழப்பமான காலத்தில் இலங்கையில் ரணிலுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல குஜ்ரால், தேவகவுடா என இருவர் வந்தாலும் நிலையான ஆட்சி கொடுக்க முடியவில்லை
காங்கிரஸ் இல்லாத இந்தியா குழப்பமாகும், காங்கிரஸ்தான் நிலையான ஆட்சி கொடுக்கமுடியும் என்ற கோஷங்கள் வலுத்தன
ஆம், மொரார்ஜி தேசாய், விபி சிங், சந்திரசேகர், குஜ்ரால், தேவகவுடா என யாராலும் காங்கிரசுக்கு மாற்று அரசை அமைக்க முடியவில்லை , அமைத்தாலும் நிலைக்க முடியவில்லை
துண்டு கட்சிகளெல்லாம் சேர்ந்து காங்கிரசுக்கு மாற்று அமைக்கமுடியாமல் போராடின, இன்னொரு வகையில் மாகாணத்தில் தங்களை வளர்த்த அக்கட்சிகளுக்கு தேசிய அரசியலும் தேசிய சிந்தனையும் பெரிதாக இல்லை
பாஜக அன்று பெரிதாக வளரவில்லை, சில மாகாணங்களில் வலுவாக இருந்தார்கள்
இந்திய அரசியலில் குழப்பமான மிக மிக மோசமான காலகட்டங்கள் அவை. பின்னர் வந்த தேர்தலில் பாஜகவினை கருணாநிதி அரசியல் தர்ம படி, நன்றி ஆதரித்தார், வாஜ்பாய் பிரதமரும் ஆனார், திமுகவின் முரசொலி மாறனை மறக்காமல் மந்திரி ஆக்கி கொண்டார் கருணாநிதி. அவரின் அரசியல் அப்படித்தான்,
நன்றி காட்டலிலும் கைமேல் பலன் இல்லாமல் காட்டவே மாட்டார்.
இரண்டாம் முறை வாஜ்பாய் வந்தபின்புதான் காங்கிரசுக்கு தான் மாற்று பாஜக மாற்று என சரியாக காட்டினார், ஒரு வலுவான ஆதரவில் தான் அமர்ந்தால் என்ன நடக்கும் என்பதை காட்டினார்
உண்மையில் வாஜ்பாயின் காலங்கள் உன்னதமானவை, காங்கிரசுக்கு மாற்றாக ஒரு வலுவான பிரதமர் வரமுடியும் என முதலில் காட்டியது அவர்தான்
தொடக்கத்திலே சவால் எடுத்தார் வாஜ்பாய், நவீன அணுகுண்டு சோதனையினை நடத்தினார், அதன் எதிர் விளைவாக பாகிஸ்தானும் அணுகுண்டு வெடிக்க தயாராயிற்று
பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருப்பதை இப்படி தந்திரமாக காட்டினார் வாஜ்பாய். ஒருவகை ராஜ தந்திரம் இது.
1974க்கு பின் மிக சக்திவாய்ந்த அணுஆயுதம் இந்தியாவிடமும் உண்டு என காட்டிய நிகழ்வு அது என்றாலும் பல நுணுக்கமும் ராஜதந்திரமும் இருந்தன. அதே நேரம் பாகிஸ்தானுடன் அவர் உறவு பாராட்டினார், லாகூர் பஸ் திட்டமும், இன்னும் சில ஒப்பந்தங்களும் அவரின் அமைதி முகத்தை காட்டின
ஆனால் பாகிஸ்தான் தன் கோரமுகத்தை கார்கில்லில் காட்ட அதையும் துணிச்சலாக சந்தித்து வெற்றிபெற்றார் வாஜ்பாய்.
அவர் காலங்கள் அல்கய்தா எனும் பெரும் பலம்வாய்ந்த இயக்கம் உலகை ஆட்டுவித்த காலம், அமெரிக்காவே அலறிய காலம்.
இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருந்தது, பார்லிமென்ட் வரை தாக்கினார்கள், இத்தேசம் பெரும் சிக்கலான அந்த காலங்களிலும் வாஜ்பாயின் தலமையில் அமைதி காத்தது அசம்பாவிதங்களை தவிர்த்தது.
அப்போது வாஜ்பாய்க்குள்ள சிக்கல் அவருக்கு பெரும்பான்மை இல்லை இதனால் கூட்டணி கட்சிகளை மீறி அவரால் அணிசேரா கொள்கையினை மாற்றமுடியவில்லை, அதனால் பெரும் நட்புள்ள நாடுகளோ அன்று இந்தியாவுக்கு இல்லை. காலம் கனியவில்லை.
அந்த காந்தகார் விமான கடத்தல் சம்பவங்கள் எல்லாம் வாஜ்பாய் காலத்தில் தேசத்திற்கு வந்த சோதனைகள், அதனையும் அமைதியாக சந்தித்தார் வாஜ்பாய்.
வாஜ்பாயின் காலங்களில் 1998ல் உலக பொருளாதார பாதிப்பு வந்தது, ஆனால் இந்தியா அசையா வண்ணம் வாஜ்பாயின் நடவடிக்கை இருந்தது. வாஜ்பாய் ஆட்சியில் தீவிரவாதம், மதவாதம், அன்னிய சக்திகளின் அட்டகாசம், என ஏகபட்ட சவால்கள் இருந்தன எல்லாவற்றிலும் வென்ற வாஜ்பாய்க்கு இந்த குஜராத் சர்ச்சைகள் சறுக்கலை கொடுத்தன.
நிச்சயம் இந்திராவிற்கு அடுத்து பல சவால்களை எதிர்கொண்ட பிரதமர் யாரென பார்த்தால் வாஜ்பாயினை சொல்லலாம். மோடிக்கு முன் அதிக சவால்களை அவர்தான் எதிர்கொண்டார்.
கார்கில் முதல் பார்லிமென்ட் தாக்குதல், திட்டமிட்ட குஜராத் கலவர தொடக்கமான அந்த ரயில் எரிப்பு, பீகாரில் அந்த கிறிஸ்தவ போதகர் எரிப்பு எல்லாம் அவருக்கு எதிரான அஸ்திரங்கள்
அதாவது பாஜக ஆட்சியில் இந்தியா எரிகின்றது என்பது போன்ற நிலையினை கொண்டுவர செய்யபட்ட சதிகள், மத கலவரங்களை ஏற்படுத்த செய்யபட்ட திட்டங்கள், பாஜகவின் ஆட்சி நிலைத்துவிட கூடாது எனும் கொடும் சிந்தனையில் உருவான திட்டமிட்ட எதிர்ப்பு காட்சிகள், அவபெயரை உண்டு செய்யும் நூதனமான திட்டங்கள்
ஆனாலும் சமாளித்து இத்தேசத்தில் பெரும் கொந்தளிப்பு வராவண்ணம் நடத்தி சென்றார் வாஜ்பாய், மறுக்க முடியாது.
பல கருப்பு சக்திகளின் சவாலை, இந்த தேசம் எரியவேண்டும் என்ற அவர்களின் கொடூர ஆசையினை மிக இயல்பாக அதே நேரம் பொறுப்பாக கடந்து தேசத்தை நடத்திய அந்த வாஜ்பாய் இந்திய வரலாற்றின் சிறப்பான பிரதமர்களில் ஒருவர்
சாஸ்திரி, இந்திராவுக்குபின் வாஜ்பாயினை அந்த வரிசையில் தாராளமாக சேர்க்கலாம்.
நாட்டு பாதுகாப்பிற்காக இலங்கையில் ஆனையிறவில் புலிகள் பெற்ற பெரும் வெற்றியினை கூட செல்லாகாசு ஆக்கியவர் வாஜ்பாய், இந்தியாவினை பகைத்துவிட்டு நாடு அடைய முடியும் என நம்பிய இலங்கைதமிழ் போராளிகள் திட்டத்தினை உரிய நேரத்தில் முறியடித்து இந்தியா என்பது ராஜிவோடு முடியாது என பட்டவர்த்தனமாக சொன்னவர் வாஜ்பாய்
ஒரு விஷயத்தில் எல்லா இந்தியரும் அவரை வணங்கியே தீரவேண்டும் … அது இந்த தங்க நாற்கர சாலை திட்டம்…
இந்தியாவின் நரம்புகளான அந்த சாலைகளை பிரமாண்ட சாலையாக மாற்றும் திட்டத்தை அவர்தான் கொடுத்தார்.இன்று இந்தியாவினை மாற்றிபோட்டிருக்கும் அந்த வசதியான சாலைகள் அவர் கொடுத்தது.
இன்று சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் 8 மணி நேரத்தில் வரமுடிகின்றது நெல்லைக்கும் திருச்சிக்கும் 4மணி நேரத்தில் செல்லமுடிகின்றது என்றால், நாடெங்கும் பிரமாண்ட சாலைகள் அமைந்து தேச போக்குவரத்து மிக துரிதமாக நடக்கின்றது என்றால் அதற்கு காரணம் அந்த மாமனிதனே
தன்னை போலவே திருமணம் செய்யாமல் நாட்டுக்காக உழைத்த உத்தமரான கலாமினை ஜனாதிபதியாக்கி கவுரவபடுத்தியதில் வாஜ்பாயின் பங்கு இருந்தது. கலாம் சீரியல் ஏவுகனைகள் என இந்திய ஏவுகனை திட்டத்திற்கு பெயர் சூட்டியதும் வாஜ்பாயே…
மிக சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் காங்கிரசுக்கு காமராஜர் எப்படியோ அப்படி பாஜகவிற்கு வாஜ்பாய். காமராஜருக்கும், வாஜ்பாய்க்கும் வித்தியாசம் ஏதும் நீங்கள் காட்டிவிட முடியாது. இருவரும் கட்சிகள் கொள்கைகள் வேறாயினும் இந்நாட்டிற்காக வாழ்ந்தவர்கள்
அவ்வகையில் பாஜகவின் பீஷ்மர் வாஜ்பாய். இன்று பாஜக தேசிய கட்சி, இத்தேசத்தின் பெரும்பான்மை மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்ட கட்சி அசைக்கமுடியா இடத்துக்கு சென்றுவிட்ட கட்சி, அதற்கு காரணம் வாஜ்பாய். அக்கட்சிக்கு எப்படிப்பட்ட மனிதர் தலைவராக வரவேண்டும் என கேட்டால் எல்லா மக்களும் ஏன் எதிர்கட்சிகள் கூட வாஜ்பாய் போல் மிக பொறுப்பான மனிதரே வரவேண்டும் என ஒருசேர சொல்வார்கள்
அதுதான் வாஜ்பாயின் வெற்றி.
வாஜ்பாயின் பக்குவமான இடத்தை மோடி பெற்றுவிட்டார்.
அவ்வகையில் அக்கட்சியில் அவரின் இடம் வெற்றிடம் ஆகாது, அவரை கட்சியும் இத்தேசமும் நினைவு கூர்ந்துகொண்டே இருக்கும். நீண்ட ஓட்டத்தை இத்தேசத்திற்காக ஓடி விடைபெற்ற அந்த பீஷ்மருக்கு அஞ்சலிகள்…
அவர் வழியில் நல்ல தலைவர்கள் பாஜகவிற்கு வரட்டும், இத்தேசத்தை அவர் வழியில் ஆளட்டும். வாஜ்பாய் இங்கு பல இடங்களில் இன்னும் வழிகாட்டுகின்றார், அவர் விரும்பியபடி தேசம் இன்று ராமர் கோவிலை அமைத்திருக்கின்றது. ஒரு சச்சரவு சண்டை இன்றி அது அமையவேண்டும் என எப்படி விரும்பினாரோ அப்படி அமையப் பெற்றது!
1970களிலே இஸ்ரேல் உறவுக்கு அடித்தளமிட்டவர் வாஜ்பாய், அதில்தான் இன்று பால்கோட் தாக்குதலையும் லடாக் அதிரடிகளையும் செய்ய முடிகின்றது, இஸ்ரேலிய ஆயுதங்கள் இன்று எல்லையினை காக்க அவரே அஸ்திவாரமிட்டார். நவீன அணுகுண்டை வெடித்தவரும் அவரே, பாகிஸ்தானுக்கு உறவு கரம் நீட்டி அந்த கரத்தில் பாகிஸ்தான் சூடு வைத்ததும் கார்கிலில் அடித்து விரட்டியவரும் அவரே
அவரின் பொருளாதார திட்டங்கள் பலம் வாய்ந்தவை, கத்தாரில் முரசொலிமாறன் பேசிய பேச்சுக்களின் அடிநாதம் வாஜ்பாயின் முடிவே, அதன் பின்பே இந்திய அரபு உறவுகள் புத்துயிர் பெற்றன
காங்கிரசின் வீழ்ச்சிக்கு பின்னரான காலத்தின் பிதாமகன் வாஜ்பாய் அவர் வழியிலேதான் மோடி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றார்!
முன்பே சொன்னபடி பாஜக ஆட்சி வந்தால் என்னென்ன ஆகும் என்பதை கோடிட்டு காட்டிச் சென்றவர் வாஜ்பாய். காஷ்மீர் கார்கில் குஜராத், பீகாரில் என எங்கெல்லாமோ யார் யாரையெல்லாமோ எரித்து சுடுகாடு ஆக்குவோம் என கொக்கரித்தார்கள், ஏன் பாராளுமன்றம் வரை கூட வந்து சுட்டார்கள்
அதில்தான் அமைதியாக பாடம் படித்தார் மோடி, வாஜ்பாய் எதிர்கொண்ட சவாலை எல்லாம் நோக்கி கொண்டே இருந்தார்
ஆம், மோடி எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை எல்லாம் அன்றே எதிர்கொண்டு அவற்றை தடுக்க வழியும் சொல்லி புன்னகையுடன் சென்றார் வாஜ்பாய், வாஜ்பாய் சுமந்த வலியும் கண்ணீரும் மோடி சுமக்க வேண்டியது!
ஆலகால விஷத்தை சிவன் உண்டது போல அந்த ஆபத்துக்களை சந்தித்து தேசத்தை காத்தவர் வாஜ்பாய், இல்லை அந்த விஷம் மோடியினைத்தான் தீண்டியிருக்கும், வாஜ்பாய் அப்படி காத்ததனாலே மோடியால் அமைதியாக ஆள முடிகின்றது, தேசம் அமைதியாக பல சாதனைகளை செய்கின்றது~!
பாராளுமன்றத்தில் வாஜ்பாய் ராமர் கோவில் காஷ்மீர் அக்சாய் சின் என எதையெல்லாம் குறித்து வாதிட்டாரோ அதெல்லாம் நடந்து கொண்டிருகும் நேரம் வாஜ்பாயின் ஆன்மா மகிழ்ந்து இத்தேசத்தை ஆசீர்வதித்து கொண்டிருக்கும்,
ஆம் அவரின் கனவும் உழைப்பும் கோரிக்கையும் அவ்வளவு உன்னதமாய் இருந்திருக்கின்றன , இதோ நிறைவேறிற்று
காமராஜர், சாஸ்திரி வரிசையில் மோடிக்கு வழிகாட்டியாக வந்து தேசத்துக்கு ஒளியும் வழியும் காட்டிய பெருமகன் வாஜ்பாய், காங்கிரசுக்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த பிரதமர் அமரமுடியும் என காட்டியவர் வாஜ்பாய்
அவர்மேல் கொண்ட நம்பிக்கையில்தான் தேசம் பாஜகவிடம் சரணடைந்தது, அதை மிக சரியாக காத்து நாட்டையும் மக்களின் நம்பிக்கையினையும் ஒருசேர காத்துவருகின்றார் மோடி
வாஜ்பாய் என்பவர் ஒரு சரித்திரம், மாபெரும் வரலாறு அவருக்கு உண்டு. காந்தி காலத்தில் இருந்து நாட்டுக்காக உழைத்து, நாடு ஒன்றையே நினைந்து வாழ்ந்து, தன் நீண்டகால தவத்தின் பயனாய் தேசத்தை காங்கிரசிடம் இருந்து விடுவித்து மோடியிடம் விட்டு சென்ற பெரும் சேவை அவருடையது
விவேகானந்தரின் வழியில் அவரின் சிந்தனையில் தேசத்தை மாற்றிய சரித்திர சாதனையாளர் வாஜ்பாய்
தேசம் அந்த நன்றியில் அப்பெருமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்திகொண்டிருக்கின்றது…
ஜெய் ஹிந்துஸ்தான்.. வந்தே மாதரம்