ஐ.என்.எஸ் துருவ்…

இந்திய பத்திரிகைகளும் சில வெளிநாட்டு ஊடகங்களும் சீன கப்பலின் இலங்கை வருகையினை தொடர்ந்து சில விஷயங்களை கசியவிடுகின்றன, இது ஊடகங்களின் செய்தி என்றாலும் இந்திய அரசின் ரகசிய அனுமதி இல்லாமல் அது வெளிவர வாய்ப்பே இல்லை

அந்த செய்தி இந்திய கப்பல் ஐ.என்.எஸ் துருவ் பற்றியது

இந்த கப்பலை பார்க்கும் முன்னால் இந்திய தமிழக ஊடகங்கள் செய்யும் அழிச்சாட்டியம் பற்றி பார்க்கலாம், இந்திய ஊடகங்கள் அந்த சீன கப்பல் யுவான் வாங் ராக்கெட் ஏவும் கப்பல், அணுகுண்டை வீசும் கப்பல், இன்னும் வானத்துக்கே செயற்கைகோளை ஏவும் கப்பல் என்றெல்லாம் அள்ளிவிடுகின்றன‌

ராக்கெட்டை வானுக்கு ஏவும் கப்பல் என உலகில் ஒன்றுமே இல்லை என்பது பாவம் தமிழக மீடியாக்களுக்கு தெரியவில்லை ஸ்ரிகரிகோட்டாவினை கப்பலில் ஏற்றமுடியாது என்பதுதான் நிஜம்

இன்னும் சீன கப்பல் ராக்கெட் வீசும் என்பதெல்லாம் அபத்தம், அவ்வகை நாசகாரி கப்பல் என்றால் இம்முறை ஹம்பந்தோட்டாவுக்கு வரவே முடியாது காரணம் தாக்குதல் கப்பலுக்கு இலங்கை ஹம்பாந்தோட்டையில் அனுமதி இல்லை

இது முழுக்க முழுக்க சிக்னல்களை கிரஹிக்கும் கப்பல், அதாவது சமிக்கைகளை மட்டும் அது கிரஹிக்குமே தவிர தாக்குதல் எதையும் செய்யாது

தெளிவாக சொல்லவேண்டும் என்றால் செயற்கைகோள்களில் இருந்து வரும் சிக்னல்களை அவை உறுதிசெய்யும், பலவகை ஏவுகனைகள் செயற்கைகோள் வழிகாட்டலில் பாய்வதால் இந்த் சிக்னல்கள் முக்கியம் இன்னும் ராணுவத்தின் பலமே தொலைதொடர்பு என்பதால் இவை பல விஷயங்களை கிரகித்து கொடுக்கும்

அப்படியே எதிரி நாட்டு சிக்னல்களை இவை குழப்பும் அல்லது முடக்கும்

இந்த சீனாவின் “யுவான்” எனும் சொல்லுக்கு தொலைதூரம் என பொருள், யுவான் வாங்க் என்பது தொலைவில் இருந்து பார்ப்பதை குறிக்கும்

இவ்வகை கப்பல்கள் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் என ஐந்து நாடுகளிடம் மட்டும் உண்டு கடைசியில் 2000ம் ஆண்டுகளில் இணைந்தது சீனா, இப்பொழுது சுமார் 20 இவ்வகை கப்பல்கள் இருந்தாலும் முக்கிய கப்பல் 3தான்

இந்தியா இந்த போட்டியில் மிக தாமத்தித்தது, மோடி இந்திய பிரதமரான 2014ம் ஆண்டின் அடுத்த மாதமே இதை தயாரிக்க உத்தரவிட்டார்

அதுவரை காங்கிரஸ் அரசு ஏன் இதனை செய்யவில்லை என கேட்க கூடாது, ராஜிவுக்கு பின்னரான காங்கிரஸ் இப்படித்தான் இருந்தது

மோடியின் முதல் திட்டமே அந்த கப்பலை கட்டுவது, அதற்கு ஐ.என்.எஸ் துருவ் என பெயரிடபட்டது

இது முழுக்க முழுக்க செய்ற்கைகோள் நகர்வுகளையும் எதிரிநாட்டு கப்பல் விமான நீர்மூழ்கி நகர்வுகளையும் கண்டறியும் கப்பல், இதன் செலவும் தொழில்நுட்பமும் அதிகம்

முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு என்றாலும் பிரான்ஸின் சில ஆலோசனைகளும் இருக்கலாம் என்றார்கள்

இக்கப்பல் 2020ம் சோதனை எல்லாம் முடிந்து கடந்தவருடம் ஓசையில்லாமல் கடற்படையில் சேர்க்கபட்டது

இக்கப்பல் 2020ம் ஆண்டு கட்டிமுடிக்கபட்டதாக சொன்னாலும் 2018களிலே அதன் தொழில்நுட்பம் ஓரளவு பயன்பாட்டுக்கு வந்தது, இந்தியாவின் மிகபெரிய சாதனையான செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகனையின் வெற்றியினை மோடி அறிவித்தபொழுது இக்கப்பல் செயலாற்ற தொடங்கிற்று

இப்பொழுது முழுவதும் பயன்பாட்டுக்கு வந்த அக்கப்பல் இப்பொழுது இந்திய கப்பல் படையில் இருந்தாலும் அக்கப்பல் எங்கே என்னசெய்கின்றது என்பது பற்றி இந்தியா வாயே திறக்கவில்லை

மிக ரசியமான கப்பல் அது

ஒப்பீட்டளவில் சீன கப்பலை அது எளிதாக சமன் செய்யும் என்பது கப்பல்படை வல்லுனர்கள் கருத்து, இந்தியா இது போக சுமார் 40 கப்பல்களை கட்டிகொண்டிருக்கின்றது அதிலும் இம்மாதிரி உளவு கப்பல்கள் இருக்கலாம்

சீன கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் நேரம் இந்தியாவின் சில ஊடகங்களும் சில வெளிநாட்டு ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன, துருவ் கப்பலின் ஆற்றலும் பலமும் மெல்ல வெளிவருகின்றது

உண்மையில் சீனா இந்தியாவினை உளவுபார்க்க வேண்டுமென்றால் சீன கப்பல் பாகிஸ்தானுக்கு செல்லலாம் வங்கதேசம் பர்மா என செல்லலாம் அதைவிடுத்து தெற்கே இலங்கைக்கு வந்திருப்பது சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது

அதாவது நெல்லைமாவட்டம் நாங்குனேரி அருகே அமைந்துள்ள சுமார் 3000 ஏக்கர் பரந்துவிரிந்த கப்பல்படைக்கு சொந்தமான சிக்னல் நிலையத்தை உளவு பார்க்கலாம் என்பது ஒருதியரி இல்லை அங்கிருந்துகொண்டு வேறு எதனையோ இலக்கு வைத்து உளவு பார்க்கலாம் என்பது இன்னொரு தியரி

நிச்சயம் இந்தியாவின் பாதுகாப்பும் அம்சங்கள் அவ்வளவு ஓட்டையாக இராது, அதுவும் சீன கப்பல் வரும் செய்தி வந்தபின் இந்தியா நிச்சயம் தன் தரவுகளை பாதுகாக்காமல் இராது

சீனா எதையோ சொல்ல அப்பக்கம் வரும்பொழுது இந்தியா தன் துருவ் கப்பல் செய்தியினை மெல்ல கசியவிடுகின்றது

இனி பாருங்கள், இந்தியாவின் துருவ் கப்பல் பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான், ஜப்பான் என இந்தியாவின் நட்பு நாடுகளின் துறைமுகங்களுக்கு அதாவது சீனாவினை தொட்டுகொண்டிருக்கும் நாடுகளுக்கு “நல்லெண்ண” பயணம் செல்லும் எனும் செய்தி வந்தாலும் வரலாம்

அதாவது தங்களிடமும் பலமான உளவு கப்பல் உண்டு என்பதை சீனாவுக்கு சொல்கின்றது இந்தியா

மோடிமேல் குறைசொல்வோர் ஆயிரம் சொல்லட்டும் ஆனால் காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டிருந்த இம்மாதிரி நவீன உளவுகப்பலை அவர் அரசுதான் செய்து இன்று சீனாவுக்கு சரிக்கு சரி சவால் விடுகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது

அந்த கப்பல்தான் இன்று சீனாவுக்கு மிரட்டலாக செய்தியாக வருகின்றது, நிச்சயம் வல்லரசுகளுக்கு இணையான சக்தி கொண்ட கப்பல் இந்திய கப்பல்

மோடி எனும் மாமனிதரின் ஆட்சியில் இந்தியா எப்படி முன்னிலையில் இருக்கின்றது என்றால் இப்படித்தான், சும்மா ஒன்றும் எல்லையில் சீனா அடங்கியிருக்கவில்லை மோடியின் இந்தியா அவர்களை அடக்கி வைத்திருக்கின்றது