ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 10
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 10
“சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு”
சத்தியாகிய சந்திரகலையை அறிவு உடலில் (சிதாகாயத்தில்) பாய்ச்ச சாக்கிரத்தில் இருப்பதுபோல் உணர்வு எட்டும்.
மனதின் வெளியில் மறைவாய் இருக்கும் சிவனை (திருசிற்றம்பலம்) சிந்தையில் யோகத்தால் தேடினால் ஆன்மாவினால் சிவனை உணரலாம் என்பது குறளின் பொருள்
சந்திரன் என்பது இங்கு மனதை குறிக்கின்றது, அதாவது ஆத்ம தொடர்பினை குறிக்கின்றது
சிவன் நம் மனதின் சிறுவெளியில் சிற்றம்பலநாதனாக மறைந்திருக்கின்றார், சிந்தையினை ஒருமுகமாக்கி தேடினால் ஆத்மாவானது விழித்து (சாக்கிரமம்) அந்த விழிப்பு நிலையில் மனதால் சிவனை உணரலாம், முழுமையாக உணரலாம் என்பது குறளின் தத்துவம்
சிற்றம்பல நாதனை மனதால் தேடினால் ஆத்மார்தமாக அந்த பரம்பொருளை உணரலாம் ஒளவை சொல்லும் போதனை