ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 0
“எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி”
இக்குறள் “எள்ளகத்து எண்ணெய் இருந்தனை ஒக்குமே உள்ளகது ஈசன் ஒளி” என பிரிந்து பொருள் தரும்
அதாவது எள் உள்ளே எண்ணை இருப்பது போல் நம் உடலுக்குள் ஈசனின் அருள் ஜோதி இருக்கின்றது என்பது பாடலின் பொருள்
ஒளவை சும்மா சொல்லவில்லை ஒரு தெளிந்த உதாரணத்தோடே சொல்கின்றார்
எள்ளில் எண்ணை உண்டு ஆனால் உடனே வராது, அந்த எள்ளை காயவைத்து அரைத்து பிழிந்தால் மட்டுமே எண்ணெய் பிரிந்துவரும், அந்த எண்ணெயால் விளக்கேற்றலாம் இருளை அகற்றும் வண்ணம் அது சுடராக எரியும்
அப்படி உடலிலும் சிவன் மறைந்திருக்கின்றார் ஆனால் அந்த ஒளியினை உடனே காணமுடியாது, எள் பல பாடுகள் பட்டு தன்னை பிழிந்து எண்ணை கொடுப்பது போல உடலை பக்தி, தவம், யோகம், வழிபாடு என மிகவும் பக்குவபடுத்தி மனதை பிழிந்தெடுத்தால் அங்கே அந்த ஞான எண்ணைய் ஊறும் அதில் ஈசன் ஒளியாக தெரிவார் என்பது ஒளவை உதாரணமாக விளக்கும் தத்துவம்