மிஷனரி ஐடா ஸ்கேடர் Vs இந்து துறவி அமிர்தானந்தமாயி
ஹரியானா மாகாணம் பரிதாபாத்தில் மோடி உலகறிய திறந்துவைத்த மாதா அமிர்தானந்தமாயி கட்டிய மருத்துவமனை நிகழ்வு இந்திய சரித்திரத்தில் கொண்டாட வேண்டிய ஒன்று
இந்த உலகம் மாற ஆரம்பித்த 18ம் நூற்றாண்டில் இந்தியா பிரிட்டிசாரிடம் வசமாக சிக்கியிருந்தது, ஆயுதம் ஒன்றே போராட வழி என இருந்த காலத்தில் இங்கு எந்த மன்னனும் வீரனும் எழாதவாறு அடக்கி ஆளதொடங்கியிருந்தான் அந்த கிறிஸ்தவநாட்டுக்காரன்
அவன் காலத்தில் இங்கு மிஷனரிகள் பெருகினார்கள், அவர்கள் வருகை வினோதமானதும் நகைசுவையான காரணங்களையும் கொண்டது
இந்தியர்கள் காட்டுமிராண்டிகள், நாகரீகமற்றவர்கள், அறிவற்றவர்கள், அவர்கள் மதம் கொடுமையானது அவர்களெல்லாம் நாகரீகமும் அறிவும் பெறவேண்டும் என்றுதான் நாங்கள் வந்திருக்கின்றோம் என 18ம் நூற்றாண்டில் வந்தார்கள்
ஆனால் இதே இந்தியாவின் பெரும் செல்வத்துக்கும் வளத்துக்கும்தான் 15ம் நூற்றாண்டிலே அந்த கிறிஸ்தவ வியாபாரிகள் வந்தார்கள் என்பதையும், இப்பொழுதும் அதன் பெரிய வருமானத்துக்குத்தான் இந்நாட்டை பிடித்து வைத்திருக்கின்றார்கள் என்பதையும் மறைத்தார்கள்
இந்துமதம் உருவாக்கிய செல்வத்தை கொள்ளையிட வந்த கூட்டம் இத்திருநாட்டையும் அதன் மதத்தையும் பழித்துகொண்டே வந்தது
ஆட்சி அவர்களிடம் ஆட்சியின் செல்வம் அவர்களிடம் எனும் வகையில் அதிகாரபலமும் செல்வபலமும் அவர்களிடம் சிக்கின
அதனால் எளிதில் பிரச்சார கூட்ங்களை அமைத்தனர்
எனினும் 1857ம் ஆண்டு நடந்த பெரும் கலவரம் அவர்கள் கண்முன் நின்றது, அதுதான் கடைசி நிமிடத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்த விபரீதம்
ஆம், அந்த போருக்கு பல காரணம் சொல்லபட்டாலும் உண்மையில் இந்தியாவின் இந்துமதம் மேல் வலுகட்டயாமாக பிரிட்டிசார் கைவைத்து தேடிகொண்ட அடிதான் காரணம்
இந்துக்களின் உணர்வை புண்படுத்தி நீங்கள் எம் அடிமைகள் உங்கள் மதம் எங்களுக்கு அவசியமில்லை என தொட்டதுதான் காரணம்
அதனாலே கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆட்சி பிரிட்டிசாருக்கு சென்றது
இந்து உணர்வை ஆயுதமுனையால் அடக்கமுடியாது என்பதை உணர்ந்துதான் அம்மததை மெல்ல கொல்லும் நயவஞ்சக திட்டத்தில் இறங்கியது பிரிட்டிஷ் கிறிஸ்தவ அரசு
அதற்கு கல்வி, மருத்துவம் என இரண்டையும் மிஷனரிகள் மூலம் ஏவிற்று
அன்றே இந்தியாவில் சுரண்டபட்ட பல்லாயிரம் கோடிபணமும் தங்கமும் இப்படி மிஷனரி மூலம் இலவசம் என சில ஆயிரங்களாக திரும்பி வந்தன
நாய்களுக்கு எலும்பு வீசுவது போலவீசினான் அந்த கிறிஸ்தவன்
கல்வி மருத்துவம் இரண்டையும் மிஷனரிகள் தருகின்றார்கள் மதமாறினால் நன்கு வாழலாம் எனும் ஆசை அப்பொழுது புகுத்தபட்டது
தனக்கென மன்னன் இல்லாது, தனக்கென அதிகாரம் இல்லாது, ஆதரவோ அப்படி ஒரு குரலோ இல்லா இந்துசமூகம் தன் சொந்தமண்ணிலே இப்படி வீழ்ந்தது
மதமாற்றம் ஆரம்பமானது அதற்கு கல்வி மருத்துவம் என பெயர்கள் கொடுக்கபட்டன
இந்தியர் செல்வத்தை சுரண்டி இந்திய ஆன்மீக இந்துமதத்தையே வெட்டும் செயல் அழகாக நடந்தது, சுவாமி விவேகானந்தர் இதுகண்டுதான் கொதித்தார்
“எங்கள் நாட்டுக்கு தேவை மதம் அல்ல, உலகின் அதிசிறந்த தர்மம் எங்களுடையது, எங்களுக்கு தேவை அறியாமை போக்கும் கல்வி, எங்களை எங்களுக்கு யார் என புரியவைக்கும் கல்வி” என அவர் முழங்கினார்
அவரின் எழுச்சித்தான் இந்துக்கள் கல்வி நிலையமும் மருத்துவமனைகளும் கட்ட வழிகோலின
அதனில்தான் இந்து பள்ளி கல்லூரிகளும், சுவாமி சிவானந்தர் போன்ற இந்து சன்னியாசிகளின் தொழுநோய் மருத்துவமனைகளும் வந்தன
இப்படி நம்மை நாமே சீரமைக்க தொடங்கியதுதான் இந்துமதம் மறுபடி நிலைக்க வழிசெய்தது
எனினும் இடைபட்ட காலங்களில் வெள்ளையனின் அதிகாரமும் சுரண்டலும் கொடிகட்டி பறந்த காலங்களில் மிஷனரிகளின் விளம்பரமும் கட்டுகதையும் பொய்யும் இறக்கை கட்டி பறந்தன
ஐரோப்பிய தேவதைகள் இங்கு பணிசெய்ய வந்ததாகவும் அவர்கள் மனதாலும் செயலாலும் உன்னத கிறிஸ்துவின்பிள்ளைகள் என்றும் கொண்டாடபட்டார்கள்
அவர்களில் ஐடா ஸ்கேடரும், சாரா டக்கரும், கார் மைக்கேலும், தெரசாவும் முக்கியமானவர்கள்
இவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனால் பிரிட்டிஷ் கிறிஸ்தவனிடம் “நாம் இந்தியாவினை அடிமையாய் வைத்திருப்பது தவறு” என சொல்லாத கிறிஸ்தவர்கள்
இந்தியா எனும் நாட்டை கொள்ளை அடிப்பதும், வஞ்சிப்பதும், வதைப்பதும் தவறு , இது பாவம் என சொல்லாத கிறிஸ்தவர்கள்
இந்துக்களின் ரத்தவேர்வையின் வரிபணத்தில்தான் நாம் வல்லரசாய் நிற்கின்றோம் என்பதை சொல்லவே சொலலாத நல்லவர்கள்
அந்த நல்லவர்கள் அந்த கிறிஸ்தவ மேலிட கூட்டம் ஆயுத முனையில் இந்தியரை அடிமையாய் அறிவற்றவராய் ஆக்கிவைக்க, அவர்களை இவர்கள் மதம்மாற்ற வந்தார்கள்
இந்தியரின் பிரச்சினைக்கும் வறுமைக்கும் காரணம் பிரிட்டிஷ் சுரண்டல் ஆட்சி என்பதை மறைத்து “உன் பாவம், உன் பாவ மதம், மதம் மாறினால் சரியாகும்” என்பதில் தொடங்கிற்று அவர்களின் வஞ்சகம்
அந்த வஞ்சகத்தில் இந்தியரிடம் இருந்து பிடுங்கிய செல்வத்தில் இந்தியருக்கே, அதாவது இந்துக்களிடம் இருந்து எடுத்த வரிபணத்தில் இந்துக்களுக்கே சிலுவை அடையாளத்துடனும் இயேசு அடையாளத்துடனும் “இலவச” கல்வி மருத்துவமனைகள் வந்தன
இந்தியரை ஆளும் பொறுப்பெடுத்த பிரிட்டிசார், அதாவது வரிவாங்கும் பிரிட்டிச்சாரே கல்விக்கும் மருத்துவத்துக்கும் பொறுப்பு எனும் வகையில் அதை மிஷனரிகள் கையில் எடுத்து “சேவை” செய்து மதம் மாற்றியதெல்லாம் மிகபெரிய அக்கிரமம்
அந்த அக்கிரமம் எங்கெல்லாமோ தளிர்விட்டது
வறுமையில் மக்கள் வாடும் இடங்களில் நெல்லை, பாளையங்கோட்டை கல்கத்தா வேலூர் என பல இடங்களில் அது முகாமிட்டது
மிக வஞ்சகமாக எங்கெல்லாம் சுதந்திர உணர்வு பொங்குமோ அங்கெல்லாம் மிஷனரிகளின் கல்வியும் மருத்துவமனைகளும் கடைவிரித்தன
அது நெல்லைமாவட்டம் , வேலூர் மாவட்டம், கல்கத்தா என சரியாக முளைத்தது
அப்படி வேலூரில் முளைத்ததுதான் மிஷனரி பெண் டாக்டர் ஐடா ஸ்ட்கேடரின் சிஎம்சி மருத்துவமனை
அது உலகெல்லாம் இந்திய சேவையின் அடையாளமானது , இந்தியருக்கு மிஷனரிகள் செய்யும் சேவையின் பெரும் சின்னமானது
உண்மையில் அது மதமாற்றம் செய்தது, கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை கிறிஸ்தவர்களுக்கு கல்வி கிறிஸ்தவர்களுக்கு முன்னேற்றம் என அது சலுகை வழிகளை மதமாற்றத்துக்கே பயன்படுத்திற்று
சுதந்திர இந்தியாவின் நீட் தேர்வு வரும்வரை அது மதமாற்றம் ஒன்றுக்கே வழிகோலியிருந்தது , பெரும்பான்மை இந்துக்களின் நாட்டில் அது சலுகைகள் பலபெற்று கிறிஸ்தவ அடையாளமாக மதமாற்றத்தில் பெரும் பங்கு வகித்தது
அந்த மருத்துவமனைதான் உலகின் மிகபெரிய சேவை மருத்துவமனையாக விளங்கிற்று, இந்தியாவில் கிறிஸ்தவர்கள் செய்யும் சேவை எனும் விளம்பரத்துடன் வலம் வந்தது
அந்த பெயரைத்தான் உடைத்து பெரும் சாதனை செய்திருக்கின்றார் இந்து பெண் துறவி அமிதான்ந்த மாயி
2400 படுக்கை கொண்ட மிகபெரிய மருத்துவமனையினை பல்லாயிரம் கோடி உருவாக்கத்தில் நாட்டுக்கு கொடுத்திருக்கும் அமிர்தானந்தமயி கிறிஸ்தவ மோசடிகளை உடைத்து போட்டிருக்கின்றார்
வெள்ளை கிறிஸ்துவ ஆட்சியில் வெள்ளையர் மதமாற்றத்திற்காக திறந்த விஷயங்களை இன்று சுதந்திர இந்தியாவில் ஒரு இந்து பெண் துறவி செய்யமுடியும் என காட்டியிருக்கின்றார்
வெள்ளையன் ஆட்சியில் மிஷனரிகள் எப்படியெல்லாம் ஊக்குவிக்கபட்டு இந்துக்கள் அடக்கபட்டு குழப்பட்டார்கள் எனபதையும் சுதந்திர இந்தியாவில் இந்துக்களே தங்களை சரிசெய்கின்றார்கள், இந்து சமூகத்தை இந்துக்களே சரியாக கவனித்து கொள்கின்றார்கள் என்பதை நேற்று உலகுக்கு சொல்லியிருக்கின்றார்
அந்த மருத்துவமனையினை மோடி திறந்து வைத்தது சாதாரண நிகழ்வு அல்ல
உலகின் மிகபெரிய மருத்துவசேவை மையம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவகல்லூரி என்பதை உடைத்து அது அமிர்தானத மயி எனும் இந்துதுறவியின் மையம் என உலகுக்கு சொல்லியிருக்கின்றார்
“இந்துக்களின் அறியாமையே இங்கு ஐரோப்பிய கிறிஸ்தவர் ஆட்சிக்கும் அவர்களை தேவதூதர்களாக கொண்டாடும் அவலத்துக்கும் காரணம்
நாங்கள் முழு இந்துவாக எங்களை உணரும்பொழுது அப்படி வாழும்பொழுது உலகின் உன்னத தர்மமாக எங்கள் நாடு விளங்கும்
அந்நிய ஆட்சி வரும்வரை இங்கு இந்து ஆட்சி நடந்த காலம் வரை இங்கு ஒரு பிச்சைகாரனையோ அனாதையினையோ பராரியினையோ ஆதரவற்றவனையோ இத்தேசம் உருவாக்கியதில்லை
காரணம் நாகரீகம் எனும் பெயரில் பிறரை அழித்து வாழ்வதல்ல எங்கள் தர்மம் , தன்னை அழித்து பிறரை வாழவைக்கும் உன்னத தர்மம் எங்களுடையது” எனும் விவேகானந்தரின் வார்த்தைகள் அமிர்தானந்தமயி மூலம் உண்மையாகி கொண்டிருக்கின்றது
பாரதத்தில் இந்து தர்மம் எழும்பி கொண்டிருக்கின்றது, அதன் ஜோதி உலகெல்லாம் தெரிய தொடங்கியிருக்கின்றது
ஐடா ஸ்கேடர் போல பணக்காரியாக அல்லாமல், அவளை போல பெரும் செல்வவளமும் சர்ச் பின்னணியும் அல்லாமல் ஏழை இந்து மீன்காரியாக பிறந்து, இந்து ஆன்மீகம் ஒன்றாலே வளர்ந்து இன்று இந்திய இந்துக்களுக்காக பெரும் காரியம் செய்துவரும் அந்த இந்து துறவி பொன்மகளை விழுந்து வணங்கி நிற்கின்றது தேசம்
இருநூறு ஆண்டுகால பொய்களையும் வெற்று பிம்பங்களையும் , கல்வி மருத்துவம் என கிறிஸ்தவர் செய்த செய்து கொண்டிருந்த வஞ்சக மதமாற்றத்தை அந்த இந்து துறவிதான் இப்பொழுது உடைத்து கொண்டிருக்கின்றாள்,
இந்துமத பெருமை அவளால் மீள்கின்றது

