ஆச்சார கோவை : 43
ஆச்சார கோவை : 43
“உச்சிஅம் போழ்தோடு இடை யாமம் ஈர்அந்தி
மிக்க இரு தேவர் நாளோடு உவாத்திதி நாள்
அட்டமியும் ஏனைப் பிறந்த நாள் இவ் அனைத்தும்
ஒட்டார் உடன் உறைவின்கண்”
ஆச்சாரகோவை கணவன் மனைவியோடு கூடும் காலத்துக்கும் சில ஆச்சாரங்களை சொன்னது, மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல காரணங்களுக்காக சில பொழுதுகளில் சில நாட்களில் தாம்பத்யம் கூடாது என்றது
அதற்கு குழந்தைபேறும் இன்னும் சில காரணங்களும் வலுவானவை, குறிப்பிட்ட நாட்களில் குழந்தை உருவானால் அது ஆரோக்கியம் குன்றியதாக இருக்கும் அல்லது குறைகள் கொண்டதாக இருக்கும் என்பதால் அந்த நேரங்களையும் நாட்களையும் தவிர்க்க சொன்னது
இப்பாடல் எந்த பொழுதையெல்லாம் உடனுறைதலில் கணவன் மனைவி தவிர்க்க வேண்டும் என்பதை சொல்கின்றது
நண்பகல் நள்ளிரவு காலை மாலை ஆகிய சந்தி பொழுதுகளிலும், திருமாலுக்குரிய திருவோணம் சிவனுக்குரிய திருவாதிரை , முழு பவுர்ணமி, அஷ்டமி மற்றும் தான் பிறந்த நாள் (நட்சத்திர கணக்கு) ஆகிய நாட்களில் மனைவியோடு கூட கூடாது
இந்த பொழுதுகளிலும் இந்த நாட்களிலும் கூடினால் சில சச்சரவுகள் வரும் மேலும் குழந்தையும் ஆரோக்கியமாக உருவாகி பிறக்காது என்பது பாடலின் பொருள்
இதெல்லாம் மூடநம்பிக்கை என சொல்லும் கும்பல் சொல்லிகொண்டேதான் இருக்கும், ஆனால் இதனையெல்லாம் பின்பற்றிய காலங்களில் நோய்நிறைந்த குழந்தைகள் கொண்ட சமூகம் இல்லை, குறைபிரசவமில்லை, குழந்தை குறைபாடு கொண்ட சமூகம் இல்லை, விவாகரத்தும் இன்னும் பல குடும்ப குழப்பங்களும் கொண்ட சமூகம் இல்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்
Namaskaram,
Very keen to read your writings regarding Aachara Kovai. Need your help to understand how to search it among your various writings?
Best regards,
Vaishnavi