ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 07
“குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு”
இப்பாடல் “குறித்து உருவமெல்லாம் குறைவின்றி மாற்றில் மறித்து பிறப்பில்லை வீடு” என பிரிந்து பொருள் தரும்உருவம் என்றால் காட்சி, மாய காட்சிகளும் ஆசைகளும் என இங்கு பொருள் கொள்ளலாம்
மாய காட்சிகளும் அது கொடுக்கும் ஆசைகளின் மூலத்தை கண்டறிந்து அந்த காட்சிகளை மாற்றி அதாவது அங்கு அந்த மாய காட்சிகளுக்கு பதில் சிவசிந்தனை , உண்மை ஞானம் என மாற்றி வைத்தால் பிறப்பில்லா நிலைக்கு தடை ஏதுமில்லை என்பது பொருள்
ஆசைகளும் மாயைகளும் மானிட மனதை ஆட்டி வைக்கும், அந்த மாய ஆசாபாசங்களையெல்லாம் அந்த சிந்தனைகளையெல்லாம் மாற்றி அதை சிந்திப்பதற்கு பதிலாக சிவனை சிந்தித்தால் பரம்பொருளை சிந்த்து உருவில் நிறுத்தினால், மனதார நிறுத்தினால் பிறப்பில்லா நிலையினை அடையலாம் என்கின்றார் ஒளவையார்.