குமரகுருபரர் நீதி நெறி விளக்கம் : 95

“மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப
வலியார்மற் றொன்றானு முய்யார் – நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமா லுய்யா பிற”

மெல்லிய பொருள் ஒன்று மேலிருந்து கீழே விழுந்தால் அது நொறுங்காது, ஆனால் கனமான பொருள் கீழே விழுந்தால் உடைந்துவிடும் , அப்படி ஒன்றுமில்லா சாமானியனோ பெரும் அறிவில்லாதவனோ வீழ்ந்தால் அவனுக்கு ஏதுமில்லை ஆனால் கற்றறிந்த பெரியோர்கள் வீழ்ந்தால் அந்த பாதிப்பு கடுமையானதாக இருக்கும் எழமுடியாதவாறு இருக்கும் என்பது பொருள்

( சழக்கு என்றால் தளர்ச்சி அல்லது சறுக்கல் என பொருளாகும் )

அதாவது மயிலறகு பஞ்சு போன்றது எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும் உடையாது, ஆனால் பூசனிக்காய் போன்றவை விழுந்தால் உடைந்துவிடும், அப்படி கற்றறிந்த பொறுப்புடைய பெரியாரோருக்கு ஏற்படும் சறுக்கல் மிக பெரும் அடியினை கொடுக்கும் அதிலிருந்து அவர்கள் எழுந்து வருவது சிர‌மமானது.

பெரியோரும் கற்றோரும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் , அவர்களுக்கு சிறு அவமானம் என்றாலும் மீண்டு வரமுடியாது என்பதும் பாடலின் பொருளாகும்..