நீதிநெறி விளக்கம் : 96
“இசையாத போலினு மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லாற் – பசுவேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி யூன்றின் பவர்”
மேலோர் செய்யும் பல காரியங்களை இழிபுத்தி கொண்ட மக்களால் புரிந்து கொள்ள முடியாது, அதனை இகழ்ந்து பரிகசிப்பர். பசுவின் நெய்கொண்டு யாகம் வளர்த்து உலக நன்மைக்கு பாடுபடும் மேலோரும், பசுவினை கொன்று தின்னும் கீழோரும் ஒப்பாகமுடியுமோ?
பெரியோர்கள் செய்யும் காரியங்களையும் அவற்றின் பலனையும் புரிந்துகொள்ள முடியா மூடர்கள் பெரியோரை பரிகசிப்பார்கள் இழிவு செய்வார்கள் அவர்களால் மேல் மக்களை புரிந்துகொள்ளவும் முடியாது, இருவருக்கும் தலைகீழான, முரண்பாடானவர்கள் என்பதால் மேலோரை அவர்கள் இகழ்வதில் பொருளோ அறிவுடமையோ இல்லை என்பது பாடலின் பொருள்