காமராஜரின் இன்னொரு பக்கம்
(இது காமராஜரின் இன்னொரு பக்கம், பிடிக்காதவர்கள் கடந்து செல்லவும்)
அந்த காமராஜரர் அற்புதமான நாட்டுபற்றாளர் இந்த நாடும் மக்களும் வளமாக இருக்க அவரின் கடைசி நொடிவரை பாடுபட்டவர், அவருக்கு தெரிந்ததும் அக்கால வழியுமான காந்தியத்தில் கடைசிவரை நின்றவர்
மோடி போல முதல்வராக இருந்து பிரதமராக வாழ்ந்து இரும்பு மனிதராக மாபெரும் வரலாற்றை படைத்திருக்க வேண்டிய அவர் ஏன் சறுக்கினார், எப்படி சறுக்கினார், கடைசி வரை தமிழகத்துக்குள்ளே ஏன் முடக்கபட்டார், தமிழகம் தாண்டி போட்டியிட ஏன் அவருக்கு விருப்பமில்லை என பல கோணங்களில் சிந்தித்தால் காந்தி, நேரு பிம்பங்களால் அவர் அரசியல் வாழ்வே அஸ்தமித்தது புரியும்
ஆம், உண்மையில் அவர் சரிவுக்கு காரணம் காந்திய கொள்கை, நேரு வழி அவர்கள் வழியில் காமராஜர் சென்றதால் விழுந்த வீழ்ச்சி
அவரின் நாட்டுபற்று அபூர்வமானது எனினும் அந்த நாட்டுபற்று இந்திய பாரம்பரியத்தின் மேல் அல்லாமல் அவரின் சுய அறிவில் அல்லாமல் காந்தி நேரு சொல்வதுதான் வேதம் என்ற அளவில் பதியபட்டது, தேசமே காந்தி காந்தியே தேசம் எனும் அளவில் நம் நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் இதனிலெலாம் அவர் ஆழபதியாமல் மதநல்லிணக்கம், சிறுபான்மை ஆதரவு, இன்னும் குழப்பமான சமூகநீதி போன்ற குழப்பங்களை தத்துவமாக படித்தார்
இதனாலே பாகிஸ்தான் பிரிவினை அவரை பெரிதும் பாதிக்கவில்லை இயல்பான நிகழ்வாக கடந்து சென்றார், காந்தியின் தான தர்மும் நேருவின் பெரியமனது அவருக்கு ஆச்சரியமாக பட்டதே அன்றி அதன் ஆபத்தோ இத்தேசத்துக்கு அது கொண்டுவரும் சிக்கலோ பற்றி அவர் யோசிக்கவில்லை
மிக எளிதாக பிரிவினையினை அணுகினார் அவரின் மிகபெரிய சறுக்கல் இது, இந்துக்கள் மனநிலை பற்றி கடைசிவரை அவர் கவலை கொள்ளவில்லை
நேரு போல தன்னையும் நாகரீகமான நாத்திகனாக காட்டிகொண்டார், சமய ஈடுபாடோ ஆன்மீக கலாச்சாரமோ அவருக்கு விருப்பம் அல்ல, இந்த புள்ளிதான் அவரும் திமுகவும் ராம்சாமியும் ஒரே இடத்தில் சந்தித்த புள்ளி
இந்த இடத்தில்தான் அவர் முதல்வரானார், ராஜா குமாரசாமி செய்த தவறை ராஜாஜியும் செய்தார் ஆம் திமுக எனும் தேசவிரோத சக்தியினை தொடக்கத்திலே முடக்கும் எளிதான வாய்ப்பு இருந்தும் அவர்கள் திமுகவினை முடக்கவில்லை அதேதவறை காமராஜரும் செய்தார்
என்ன இருந்தாலும் தன் குருநாதர் சத்யமூர்த்திக்கு எதிரான ராஜாஜ்யினை வீழ்த்தி தனக்கு பதவி கிடைக்க திமுக ஒரு காரணம் எனும் ரகசிய பாசம் அவர் மனதில் இருந்தது அதை மறுக்கமுடியாது,இதனால்தான் 1950களின் குழப்பமான திமுகவினை முடக்கும் வாய்ப்பிருந்தும் தள்ளிவைத்தார்
அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி எதிரணி காங்கிரஸில் இருந்து உருவாகாமல் இருக்க திமுகவின் வளர்ச்சியினை அனுமதித்தார், சிபா ஆதித்தன் போன்றோரின் தேசவிரோத பத்திரிகைகள் வளர காமராஜரின் அனுசரனை இருந்ததை மறுக்கமுடியாது, அதில்தான் தினதந்தி திமுக ஆதவுபத்திரிகையாக வளர்ந்தது
சினிமா உலகை நொடித்துபோடும் வாய்ப்பு இருந்தும் தேசவிரோத கருத்துக்கள் குழப்பமான கருத்துக்கள் கொண்ட படமாயினும் அதை எளிதாக கடந்தார்
அவர் தன் கட்டுபாட்டில் இந்தியாவும் தமிழகவும் இருப்பதாக கனவு கண்டுகொண்டிருந்தபொழுது மிஷனரிகளும் சர்வதேச அமைப்புக்களும் தனக்கு குறிவைத்திருப்பதை அவரால் உணரமுடியவில்லை
மாறாக தேசாபிமானி முத்துராமலிங்க தேவரை முடக்குவது அவருக்கு சிக்கல்களை கொடுப்பது என அரசியல்
ஆட்டம் ஆடினார்
ராம்சாமி, அண்ணா கருணாநிதி என முடக்கவேண்டிய கோஷ்டிகள் இருக்கும்பொழுது பரிசுத்தமான தேசாபிமானியான தேவரை அவர் முழுக்க குறிவைத்து நின்றது நிச்சயம் சரியல்ல
காமராஜர் பல காரணங்களுக்காக குறிவைக்கபட்டார் , அன்றைய உலக அரசியலில் சீனாவும் ரஷ்யாவும் இந்தியாவினை விழுங்க குறிபார்த்து நின்றன அதாவது மக்கள் புரட்சிவரும் என நம்பின அதற்காக பல ஆட்டங்களையும் ஆடின
எதிரணி அமெரிக்காவுக்கு இந்தியா ரஷ்யா பக்கம் சாயலாம் எனும் அச்சம் இருந்தது
இந்த மூன்று நாடுகளுமே இந்தியாவினை வளைப்பது எப்படி அல்லது உடைப்பது எப்படி என தீவிரமாக இருந்தன, காமராஜருக்கு அதுபற்றி கவலையின்றி சிந்தனையின்றி அவர்போக்கில் இருந்தார்
மெல்ல மெல்ல தொழிலாளர், விவசாயி, சாதி ஒழிப்பு, புரட்சி என பல புரட்சி குரல்கள் பல நாட்டு உளவுதுறையின் மூலமாக கேட்க தொடங்கியபொழுதும் அவரின் வழக்கமான காந்தியிசம் அவற்றை வளர்விட்டது
காமராஜர் கொஞ்சமும் அக்கறையின்றி இருந்த இடம் இரண்டு முதலாவது தமிழகம் இரண்டாவது காங்கிரஸில் புகுந்துவிட்ட அல்லது முகம்காட்ட தொடங்கிய அந்நிய கரங்கள்
காமராஜரின் நிர்வாகம் சரியானது, சி.சுப்பிரமணியம் , நெ.து சுந்தரவடிவேலு, கக்கன் என மிகபெரும் தியாகமும் ஆற்றலும் நிறைந்தவர்களால் மாகாணத்தினை அவர் அவ்வளவு அழகாக ஆட்சி செய்தார்
இந்த ஆட்சிதான் பலரை சிந்திக்க வைத்தது அல்லது அஞ்ச வைத்தது
ஆம், ஒரு மாகாணம் நிதியிலும் கல்வியிலும் வளர்ச்சி அடைந்தால் அங்கிருக்கும் மிஷனரிகளுக்கும் மதமாற்ற சக்திகளுக்கும் வேலை இராது, அவை மூட்டை முடிச்சினை கட்டி கிளம்பவேண்டியதுதான், அப்படித்தான் 1947ல் தயாரானார்கள் ஆனால் நேருவால் மறுவாழ்வு பெற்றார்கள்
பெற்ற மறுவாழ்வை முடக்கும் படி காமராஜர் பள்ளிகள் திறந்தார், அணைகள் திறந்தார் இன்னும் பல சாகசங்களை செய்து மாகாண வாழ்வினை உயர்த்தினார்
ஏழ்மையிலும் வறுமையிலும் குழப்பத்திலும் தமிழகம் இருக்க வேண்டும், குறிப்பாக கல்வி என்பது தங்கள் கட்டுபாட்டில் இருக்கவேண்டும் என விரும்பிய கும்பல்கள் அவரை குறிவைத்தன
சுமார் 16ம் நூற்றாண்டில் இருந்து 300 ஆண்டுகாலம் இங்கு கோலோச்சிய அவைகள் காமராஜரை ஒரு சைத்தானாக கண்டன, அலறின, அவருக்கு குறிவைத்தன
தேச அளவில் வலுவான தலைவராக உயர்ந்த காமராஜரை வல்லரசுகளும் குறிவைத்தன, தேச அளவில் அவரை பலவீனமாக்க பல சதிகள் நடந்தது போல தமிழகத்திலும் நடந்தது
அப்பொழுதும் காமராஜர் சுதாரிக்கவில்லை தன் காந்திய கொள்கையான அன்பு , ஜனநாயகம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சிறுபான்மை ஆதரவு என இருந்தார், தான் ஒரு இந்து என்பதிலோ இத்தேசம் இந்துதேசம் என்பதை சொல்லவோ அவருக்கு தோன்றவே இல்லை
அதை சொன்ன தேவரை குற்றவாளி போல கருதிகொண்டிருந்தார்
திமுகவின் அடாவடிகள் மெல்ல மெல்ல பெருகின அவர்கள் பின்னால் மிஷனரிகள் திரண்டனர், பன்னாட்டு உளவுதுறை திரண்டது, அண்ணாவுக்கு பத்திரிகை சினிமா என எல்லா பலமும் பெருகியது
காமராஜர் வழக்கம் போல் அமைதிகாத்தார், ஒரு கட்டத்தில் நிலமை எல்லை மீறி சென்றிருப்பதை அறிந்து வருந்தினாரே தவிர அப்பொழுதும் அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை
இஸ்லாமியர்க்கு தனி தேசம் தந்த கட்சி காங்கிரஸ் என அவரால் முஸ்லீம் லீக்கை கூட தன் அருகே வைக்கமுடியாதபடி பலகீனமானார்
பத்திரிகை, மத நிலையங்கள், சினிமா என எங்கெல்லாமோ அவருக்கான எதிர்ப்பு அரசியல் விதைக்கபட்டது அவர் அதை தடுக்க நினைக்கவுமில்லை காரணம் காந்தியம்
பத்திரிகையும் சினிமாவும் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பில் இருந்தபொழுது தேசபக்தி படங்களை கூட ஆதரிக்க அவர்முன்வரவில்லை
காந்தியிசம் நேருயிசத்தில் அவர் நம்பிக்கை இழந்தது 1962 போருக்கு பின்பே, காந்தியின் கொள்கைகள் அவருக்கு அப்பொழுதுதான் கசக்க தொடங்கின ஆனாலும் வாய்விட்டு சொன்னார் இல்லை
நேருவுக்கு பின் இந்திய அரசியல் அவருக்கெதிராக திரும்பியது அவர் வளர்த்து ஆளாக்கிய இந்திராவே அவர்மேல் பாய்ந்தார் , தமிழகம் இல்லாவிட்ட்டால் என்ன இந்தியாவின் எந்த மூலையிலும் ஜெயிப்பேன் என நம்பிய அவர் தமிழகத்துக்குள் முடக்கபட்டார்
காங்கிரஸ் இப்படி அவர் முதுகில் குத்த, தமிழக திமுக அவர் நெஞ்சிலே குத்தியது
அப்பொழுதும் அவர் சுதாரித்தாரா என்றால் இல்லை, ஒருவித குழப்பத்திலே இருந்தார் தனக்கெதிரான பெரும் சதியினை அவரால் உணரமுடியவில்லை
ஏகபட்ட எதிரிகளை அவர் உருவாக்கிகொண்டார், உருவான எதிரிகளை திமுக அணியில் சேரவும் வாய்ப்பினை அவரே அருளினார், எல்லாம் காந்தியிசம்
தன் கட்சியினை முழுக்க பலபடுத்தினாரா என்றால் தமிழகத்திலும் இல்லை, இந்திய அளவிலும் இல்லை
தமிழகத்தில் வலுவான வாரிசை அல்லது அடுத்தகட்ட தலைவர்களை அவர் உருவாக்கவில்லை எல்லோர் மேலும் அவருக்கு சந்தேகமே வந்தது, அழகான வாய்ப்பாக கிடைத்த திமுகவின் முதல் பிளவினை அவர் பயன்படுத்தவில்லை
திமுகவினைஉடைத்து வந்த சம்பத்தை வளர்த்திருக்கலாம் ஆனால் கடலில் கரைந்த பெருங்காயம் போல காணாமல் போக செய்தார் , இது திமுகவுக்கு வாய்பாயிற்று
ஆம், சம்பத்தை காமராஜர் வளர்க்காமல் விட்டார். ஆனார் அண்ணாவோ கருணாநிதி எம்ஜிஆர் நெடுஞ்செழியன் என யாரையெல்லாமோ வளர்த்துகொண்டிருந்தார்
காமராஜர் இந்த இடத்தில் திமுக வளரவும் அதற்கு வலுவான எதிர்கட்சி இல்லாமல் போகவும் தன்னை அறிந்து அல்லது அறியாமல் உதவினார் இது நிஜம்
திமுகவுக்கு கடும் சவாலாக உருவாகிவிட கூடாது என பசும்பொன் தேவருக்கு காமராஜர் அரசு நெருக்கடிகள் கொடுத்ததும் காமராஜரின் தவறு, நிச்சயம் தேவர் பெருமான் திமுகவுக்கு கடும் சவாலை தன் இந்து அபிமான, தேசாபிமான வாதங்களால் கொடுத்தார், ஆனால் காமரஜரோ தேவரை பழிவாங்கி திமுகவுக்கு உதவினார்
இன்னும் எவ்வளவோ தவறுகளை காமராஜர் தன் காந்தியிசம் எனும் குழப்பமான கொள்கையால் செய்தாய் திமுக வளர வளர காங்கிரஸ் தேய்ந்தது அப்பொழுதும் காமராஜர் காந்தி சீடனாகவே இருந்தார்
அவரின் நாட்டுபற்று சரி ஆனால் அரசியலோ சுதந்திரத்துக்கு பின்னரான மக்களின் மனநிலையோ அவர் புரிந்துகொள்ளவில்லை
காலம் காந்தியும் நேருவும் தவறு என காட்டிகொண்டே இருந்தது, அந்த தவறில்தான் திமுக வளர்கின்றது என்பதை அறிந்தும் காந்தி பிடிவாதத்தை அவர் விடவில்லை
கடைசியில் எல்லா தவறும் ஒன்று சேர்ந்து அவரை வீழ்த்தின
அப்பொழுதும் அவருக்கு வாய்ப்பு வந்தது, காங்கிரசின் சதியால் நாடெங்கும் செல்லமுடியாத அவர் நாகர்கோவிலில் எழுச்சி கண்டார்
1960களில் சம்பத் கிடைத்தது போல 1972ல் எம்ஜி ராமசந்திரன் காமராஜருக்கு பெரும்வாய்ப்பாக கிடைத்தார், இந்திரா காந்தி காமராஜருக்கு அழகாக தட்டி விட்ட பந்து அந்த ராமசந்திரன்
மிக அழகாக அந்த பந்தை கோலாக காமராஜர் அடித்திருக்கலாம் ஆனால் வேண்டுமென்றே தவறவிட்டார்
ஆம், அவரை அணைத்து கட்சியினை தூக்கி நிறுத்தி திமுகவினை கதறவிட்டிருக்க வேண்டிய காமராஜர் திமுகவுக்கு சாதகமான முடிவினை எடுத்தார், எம்ஜிஆர் தனிகட்சி கண்டார்
அப்பொழுதும் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலாவது திமுகவினை வீழ்த்தியிருக்கலாம், வழக்கமான காந்தியிசம் அதற்கும் இடம் கொடுக்கவில்லை
கடைசியில் தோற்றுபோன அரசியல்வாதியாக செத்தும் போனார், அவருக்கு ஒரு கல்லறை கூட தமிழகத்தில் அமையகூடாது என விரும்பிய காங்கிரசும் திமுகவும் அதை சரியாக செய்தன
ஒரு வகையில் அந்த காமராஜர் பரிதாபத்திற்குரியவர், அவரின் உழைப்பும் கனவும் காந்தியிசம் , நேருயிசம் எனும் குழப்பங்களால் நாசமாயின
இன்று தமிழ்நாடு அடைந்திருக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் திமுக முதல் காரணம். கல்வி வியாபாரம், மதுகடை, ஏகபட்ட குழப்பம் என இம்மாநிலம் நாசமாகி கிடக்கவும், இந்து ஆலயங்களெல்லாம் சரிந்து, இந்துமதத்தை சந்தை கூட்டத்தில் மிதிப்பதை போல யாரும் மிதிக்கலாம் என நிலமை உருவாகவும் திமுகவே காரணம்
அந்த திமுகவினை வளரவிட்டது யார் என்றால் காங்கிரஸை கைகாட்டலாம், அந்த காங்கிரஸில் அன்று இருந்த சக்திவாய்ந்த தலைவர் யாரென்றால் காமராஜரை நோக்கித்தான் தலைகுனிந்து கைகளை நீட்ட வேண்டும்
ஆம், இந்து அபிமான தேவரை பகைத்து திமுகவுக்கு உதவியதும், கடைசிவரை திமுகவினை ரகசியமாக ஆதரித்ததும் காமராஜரின் பெரும் தவறு அதை எந்த கொம்பனும் மறுக்கமுடியாது
காங்கிரஸ் என்பது வெள்ளையனால் தோற்றுவிக்கபட்டு பின் நேரு போன்ற வெள்ளை அபிமானிகளால் நடத்தபடும் கட்சி, அது ஒரு காலமும் இந்தியாவினை பலமாக்காது மாறாக வெள்ளையனின் தொழிலை காக்கவும் தொழிற்சாலைகளை காக்கவும் இந்தியாவினை அவர்களின் சந்தையாகவும் கூலியாகவும் மாற்றிவைக்கும் கொள்கை கொண்ட கட்சி அது
இந்தியா அதன் பாரம்பரியங்களை மறக்க வேண்டும், இந்துநாடு என்பதை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கம் ஒன்றையே மனதிற்குள் கொண்ட கட்சி அது
அதனால்தான் நேரு தொடங்கி சோனியா வரை இன்றுவரை யாரும் இந்து அபிமானிகள் அல்ல, இன்று மோடி என்றொரு மாமனிதன் இந்துதலைவன் வராவிட்டால் ராகுல் நெற்றியில் குங்குமம் இராது
அப்படிபட்ட கட்சியினை காமராஜர் உண்மை என நம்பினார், அவரின் பால்போன்ற மனதில் காந்தி நேரு பிம்பங்கள் விஷத்தை கலந்தன
காங்கிரசும் திமுகவும் ஒரே வெளிநாட்டு சக்தியால் இயக்கபடும் கட்சிகள். ஒன்று தேசிய கட்சி இன்னொன்று மாகாண கட்சியே தவிர நோக்கமும் கொள்கையும் பலவீனமான இந்தியா, அதீதமான சிறுபான்மை ஆதரவு,இந்து புறக்கணிப்பு என ஒன்றே
அது தெரியாமல் அந்த சதியில் வீழ்ந்து சரிந்தார் காமராஜர்
காமராஜரின் வாழ்வில் சரியாக பாடம் கற்றவர் மோடி ஒருவரே, அவர்தான் காமராஜரிடம் இருந்து முழு பாடமும் கற்றார்
எதை செய்யவேண்டும் என்பதையும் எதை செய்யகூடாது என்பதையும் முழுக்க காமராஜரிடம் இருந்து பெற்றுகொண்டவர் மோடி
இந்துக்கள் நிர்மபிய நாட்டில் இந்து ஆலயமும் பாரம்பரியமும் நிறைந்த நாட்டில் தனக்கென தனி கலாச்சாரமும் மதமும் அடையாளமும் கொண்ட நாட்டில் அதை தொடாமல் ஒரு தலைவன் வரமுடியாது வந்தாலும் நிலைக்க முடியாது என்பதற்கு தானே சாட்சி என்பதோடு முடிந்தார் காமராஜர், அவரின் வாழ்வின் இன்னொரு பக்கம் அதைத்தான் சொல்கின்றது
அதனால்தான் காமராஜர் தொட தவறிய பிரதமர் பதவியினை அழகாக பிடித்து காமராஜர் மனதால் கண்ட வலுவான இந்தியாவினை அவர் உருவாக்கி கொண்டிருக்கின்றார்
அவ்வகையில் மோடிக்கு வழிகாட்டி காமராஜர் என்பதையும் மறுக்கமுடியாது
செஞ்சோற்று கடனுக்காக செத்த கர்னனை போல, குல பெருமைக்காக அழிந்த பீஷ்மரை போல, தன் சீடனால் கொல்லபட்ட துரோணரை போல எல்லா வகையிலும் பரிதாபமாகவும், சில வகைகளில் கோபமாகவும் நோக்க வேண்டியது காமராஜரின் வாழ்வு
எது எப்படியாயினும் தூய்மையான ஆட்சியினை கொடுத்தவரும் இன்றுவரை தமிழக மக்கள் ஏங்கும் நல்லாட்சியினை கொடுத்தவரும் அவரே, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தியாகமும் தூய்மையும் அவருடையது என்பதில் எள்முனையளவும் யாரும் சந்தேகம் கொள்ளமுடியாது
அவர் மனதுக்குள் நிச்சயம் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன் இருந்தான், காங்கிரசின் குழப்பமும் திமுகவின் எழுச்சியும் அவர் மனதில் ஆர்.எஸ்.எஸ் நோக்கி உயர்வான இடத்தைத்தான் கொடுத்தன
அவர் இருக்க வேண்டிய இடம் ஆர்.எஸ்.எஸ் அல்லது ஜனசங்கம் என்பதை அவரும் உணரத்தான் செய்தார், ஆனால் அவர் இருந்த இடத்தின் பெருமையும் கவுரவமும் போலி அந்தஸ்தும் நன்றிகடனும் அவரை நகரவிடவில்லை
கர்னன் இறந்தபின் நீ எங்களில் ஒருவனடா என குந்தியும் பாண்டவரும் கதறி அழுதது போல, இன்று காமராஜருக்காக ஒவ்வொரு பாஜகவினரும் அழுது கதறி கொண்டிருக்கின்றார்கள்
“தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
.
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ” See lessEdit
340Kubendran P, Vasanthi Shanmugaraj and 338 others26 comments62 shares