ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 02
“அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து”
இக்குறள் “அறம் பாவம் ஆயும் அறிவுதனை கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து” என பிரிந்து பொருள் தரும்
அறம் எனும் புண்ணியம் பாவம் எனும் தண்டனைக்குரிய காரியம் எதுவெல்லாம் என ஆய்ந்து அறியும் ஞானமான அறிவினை பெற்று அதன்படி வாழ்ந்தால் பல பிறப்புக்களாக பிறந்து உழல வேண்டிய அவசியமில்லை என்பது குறளின் பொருள்
வாழும் பொழுதே அறக்காரியங்களை செய்து, தர்ம நெறிபடி வாழ்ந்து பாவங்களை விலக்கி புண்ணிய வாழ்வை வாழ்ந்தால் அடுத்த பிறவி இல்லை என்கின்றார் ஒளவையார்