சுப்பிரமணிய சிவா
1884ம் ஆண்டு இதே நாளில் திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு எனும் ஊரில் பிறந்த அவர் பெயர் சுப்பராமன், பிராமண குடும்ப பிறப்பு
திராவிட கும்பல் சொல்வது போல எல்லா பிராமணரும் பெரும் செல்வமும் அதிகாரமும் கொண்டிருக்கவில்லை வறுமை அங்கும் தாண்டவமாடிற்று, அப்படி வறிய பிராமண குடும்பத்தில் பிறந்தவர் இந்த சுப்பராமன்
கொடிய வறுமையில் கல்விக்காக போராடி எங்கும் அது நிறைவுபெறாமல் திருவனந்தபுரத்திற்கு சென்று ஒரு குருகுலத்தில் சமைக்கும் வேலையினை செய்துகொண்டே கற்றார், அப்பொழுதுதான் சதானந்த சுவாமிகள் தொடர்பு அவருக்கு கிடைத்தது
18 வயதில் சதானந்த சுவாமிகள் அவருக்கு யோகம் உள்ளிட்ட கலைகளை கற்றுகொடுத்தார், பல வீர விளையாட்டுக்களையும் அங்கு கற்றார்
யோககலை என்பது ஒருவரிடம் இருக்கும் திறமையினை அற்புதமாக வெளிவரசெய்யும் விஷயம், அந்த அளவு அது நுணுக்கமானது, அதை கற்ற்பின்புதான் சுப்பராமனின் பேச்சுதிறன் வெளிபட்டது
சுப்பராமன் எனும் பெயரோடு சிவா எனும் பெயரை சேர்த்தார் சதானந்த சுவாமிகள் , அதன் பின் அவர் சுப்பராமன் சிவா என்றாகி சுப்பிரமணிய சிவா என்றும் ஆனார்
ஒருவகையில் அவர் பசும்பொன் தேவரின் முன்னோடி போன்றவர். தமிழ் பேச்சும் சரி வீரவிளையாட்டுகளிலும் சரி , சிறந்து விளங்கினார்.
அவர் பேச்சில் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும், சிவம் பேசினால் சவமும் எழும் அளவு உக்கிரமான உணர்ச்சியான பேச்சுக்கு சொந்தக்காரர்
தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி
( சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. )
1905ல் நடந்த ரஷ்ய ஜப்பான் போரில், மாபெரும் நாடான ரஷ்யாவினை தோற்கடித்தது ஜப்பான்
ஆசிய நாடென்று ஐரோப்பிய நாட்டை தோற்கடிக்க முடியும் எனும் நம்பிக்கையினை அதுதான் கொடுத்தது, அது இந்தியாவிலும் எதிரொலித்தது
சிவா களத்துக்கு வந்தது அப்பொழுதுதான்
ஆம், திருவனந்தபுரத்தில் ‘தர்ம பரிபாலன சமாஜம்” எனும் அமைப்பை உருவாக்கி பெரும் அணலை மூட்டினார், பின் அது வெள்ளையனால் அடக்கபட்டு திருவனந்தபுரத்தில் இருந்துவிரட்டபட்டார்
அப்படியே கால்நடையாக ஒவ்வொரு ஊராக சென்று பேசி பேசி மக்களை திரட்டினர், அப்படி தூத்துகுடிக்கு வரும்பொழுதுதான் வ.உ சிதம்பரம் பிள்ளையினை சந்தித்தார்
அப்பொழுதுதான் அந்த நீங்கா நட்பு தொடங்கிற்று
1908இல் சிதம்பரனாரும், சிவாவும் இணைந்து நெல்லை சீமையில் பெரும் அணலடிக்கும் வகையில் தேசிய உணர்ச்சியினை விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தனர்
சிவா, மார்ச்சு 12, 1908ல் சிவா ரா கைது செய்யப்பட்டார். நான்காண்டு கால சிறைவாசத்துக்கு பின் நவம்பர் 1912இல் விடுதலைச் செய்யப்பட்டார்
சிவா ஏற்றிவைத்த உணர்ச்சி தீ பெரும் பிழம்பக எழும்பிற்று, இந்தியாவிலும் தேசிய உணர்வு மேலோங்கிற்று, அது உணர்ச்சியூட்டுவதை கண்ட ஆங்கிலேயன் பிரித்தாளும் சூழ்ச்சியில் கடுமையாக இறங்கினான், வங்கம் பிரிந்ததும் முஸ்லீம் லீக் உருவானதும் அதன் பிறகுதான்
இக்காலகட்டத்தில்தான் சிவா கடுமையாக போராடினார், பலமுறை சிறைக்க்கு சென்றார்
பாரதியுடனும், வஉசியுடனும் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது, மூவரும் பாரத தாயின் தவப்புதல்வர்காளகவே போராடினர்
வ.உ.சி முடக்கபட்டு சிறையில் இருந்தபொழுது சிவாவும் அவரோடுதான் இருந்தார், அந்த கொடுமைகளுக்கு சாட்சியாக இருந்தார் பின் வெளிவந்த அவர் அடுத்தடுத்து தன் பணியினை செய்தார்
ஞானபாநு என்ற மாத இதழைத் துவக்கினார், போராடினார் ஆனால் அது நஷ்டமடைந்தது அக்காலத்தில் அவர் மனைவியும் இறக்க சிலமாதம் முடங்கினார் சிவா, அப்பொழுது ஒரு பிச்சைக்காரன் கோலத்தை எட்டியிருந்தார் எனினும் உறுதி குறையவில்லை
பின் ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை ஆரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் ‘நாரதர்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார்.
1920களில் மறுபடியும் தீவிரமமான அரசியலுக்கு வந்தார், அப்பொழுது அவரிடம் ஒரு ஆன்மீகம் குடிகொள்ள தொடங்கிற்று
வ.வே.சு அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி போல இனி ஆன்மீகத்திலே இந்து எழுச்சி செய்ய வேண்டும் அதுதான் இந்திய விடுதலையினை சாத்தியமாக்கும் என நம்பினார்
1920 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார். 1921 வாக்கில் துறவி போன்று காவியுடை அணியத்துவங்கினார். ஸ்வதந்த்ரானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்.
அப்பொழுதுதான் பாரதமதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப திட்டமிட்டார், இந்தியாவில் பாரத அன்னைக்கு கோவில் கட்ட திட்டமிட்ட முதல் சிந்தனையாளர் அவர்தான்
ஆனால் ஆங்கில அரசு விடவில்லை 1921இல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காகச் சிவாவின் மீது அரசு வழக்குத் தொடுத்தது, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
அங்குதான் வெள்ளையனின் நரிதந்திரம் மூலம் தொழுநோயாளியின் போர்வை அவருக்கு கொடுக்கபட்டு அந்நோய் அவரை வதைக்க ஆரம்பித்தது
ஆம் திருச்சி சிறையில் தொழு நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டார். படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் இனி அவரால் ஆகபோவது ஒன்றுமில்லை என 1922இல் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் உடல் நலம் தேறி வந்தார் சிவா, அந்த கோலத்திலும் அவர் விடுதலை போரில் நின்றார்
1923 ஆம் ஆண்டு துவக்கத்தில் தருமபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ர் பாப்பாரப்பட்டி வள்ளல் தியாகி சின்னமுத்து முதலியார் கொடுத்த பொருளுதவி மூலம் 6 ஏக்கர் நிலம் வாங்கி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார்.
அப்பொழுது காசியில் வசித்த அவர் அன்னை மரித்தார் எனினும் ஒரு தொழுநோயாளிக்கு ரயில் அனுமதி இல்லை என அவரை பழிவாங்கினான் வெள்ளையன்
1924ல் அவருக்கு நோயின் தாக்கம் அதிகரித்தது, ஒரு தொழுநோயாளியாக சுற்றிவந்தார் சிவா, அவரின் நண்பர் வ உசி செக்கிழுத்துகொண்டிருந்தார், பாரதியார் வறுமையில் வாடிகொண்டிருந்தார்
இம்மூவருமே ஆங்கில புலமை மிக்கவர்கள், பெரும் அறிவாளிகள், கொஞ்சம் தலைவணங்கியிருந்தால் வெள்ளையன் அரசில் பெரும் பதவிகளை வகித்திருப்பார்கள்
ஆனால் அந்த வெள்ளை மனத்தோருக்கு பொதுநல பற்று இருந்தது, தகுதி இழந்து கொடுநோய்க்கும் கடும் வறுமைக்குள் ஆளானார்கள்
மிக பெரும் காரியத்தில் இறங்கிய சிவா, தன் 41ம் வயதிலே தொழுநோய்க்கு பலியானார்.
இன்று அவரின் பிறந்தநாள்
சுதந்திர இந்தியாவில் அவர் எப்படி உதாசீனபடுத்தபட்டார், ஏன் இன்னும் உதாசீனபடுத்தபடுகின்றார் என்பதற்கு அவரின் பெரும் கனவான பாரதமாதா கோவிலே சாட்சி
காந்தியும் நேருவும் அவரை மறந்தார்கள், காமராஜரும் மறந்தார், காங்கிரசும் மறந்தது, அவரின் பாரதமாதா கோவிலோ கனவோ யாரும் கண்டுகொள்ளவில்லை
ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அதை கிஞ்சித்தும் கருதவில்லை
அவர்கள் உத்திரபிரதேசத்தில் 1936ல் அதாவது சிவா பாரதமாதாகோவில் என சொன்ன 1923க்கு பின்னரான 13 ஆண்டு காலத்தில் சிவபிரசாத் குப்தா என்பவரின் முயற்சியால் 1936ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாரத மாதா கோயிலை கொண்டாடினார்களே தவிர தென்னகத்தையும் சிவாவினையும் மறந்தார்கள்
அவரின் கனவு கிட்டதட்ட 90 ஆண்டுகள் கழித்து ஜெயா அரசில் நிறைவேறிற்று
அதுவும் வெறும் 1.50 கோடி செலவில் பெயருக்கு கட்டினார்கள்
அதை திறந்து வைக்க பிரதமரோ முதல்வரோ வரவில்லை மாறாக ஒரு அமைச்சர் கடமைக்கு சென்று திறந்தார்
உண்மையில் வெள்ளையன் ஆட்சியினை விட மோசமான கொடுமையினை சுதந்திர இந்தியாதான் அவருக்கு கொடுத்தது
பிராமணன் என்பதால் திமுக கோஷ்டிகள் அவரை மறைக்க காங்கிரஸ் போன்றவை காந்திக்கு பிடிக்காதவர் என்பதால் புதைக்க அவரும் அவர் புகழும் மங்கிற்று
வராதுவந்த மாமணி மோடியிடம் இவரை பற்றி சொல்ல கூட தமிழகத்தில் யாருமில்லை, பின் எப்படி தமிழக பாஜக உருப்படும்?
என்று பாரத பிரதமரும் உச்ச மேலிடமும் அந்த மாமனிதனுக்கு, நாட்டுக்காக கொடிய வறுமையிலும் போராடி 41 வயதிலே, நாட்டுக்காக தொழுநோயால் செத்த அந்த தியாக செம்மலுக்கு செய்யும் அங்கீகாரம்
பாரத் மாதாக்கி ஜே.. என கத்துவதெல்லாம் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட முதலில் சொல்லி உழைத்த அந்த மனிதனுக்கு பெரும் அங்கீகாரம் கொடுக்காமல் முழு அர்த்தமும் பெறாது..