ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 03

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 03

“சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து”

இக்குறள் “சிவன் உருவந்தானாய் செறிந்தடங்கி நிற்கில் பவநாசம் ஆகும் பரிந்து” என பிரிந்து பொருள் தரும்

தவத்தில் நிலைத்து ஐம்புலன்களையும் அடக்கி, சித்தம் புத்தி மனம் என எங்கும் மாயைகளையும் லவுகீக மயக்கங்களையும் அகற்றி முழுக்க சிவமயமான நினைவில் நின்றால் உள்ளும் புறமும் சிவநினைவுடன் இருந்தால் அங்கு செய்த பாவமும் கர்மாவும் முழுமையாக தீரும், அந்நிலையில் மறுபடி பிறக்கும் நிலை வராது என்கின்றார் ஒளவையார்