ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 05
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 05
“நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது”
இக்குறள் “நினைப்பு மறப்பு நெடும்பசியும் அற்றால் அனைத்துலகும் வீடாம் அது” என பிரிந்து பொருள் தரும்
நினைப்பு என மனதில் எழும் எல்லா ஆசைகளையும் மறந்து, பசி எனும் உடலாலும் நினைவாலும் ஆசையாலும் எழும் தீயினையும் அகற்றினால் எல்லா உடலுக்கும் உடல் உறைவிடமாகும் என்பது பொருள்
எல்லா வகை லவகீக உணர்வுகளையும் விட்டுவிட்டால், அதாவது இங்கு எல்லாமே உணர்வுதான் அது மட்டும்தான், இந்த ஆசைகள் , கனவுகள், ஏக்கங்கள், மயக்கங்கள் என எல்லாமே வெறும் உணர்வுதான் அந்த உணர்வை அகற்றிவிட்டால்..
அப்படியே பசி என்பது திருப்தி கொள்ளா நிலை ஒரு தற்காலிக நிறைவு, அதன் பின் உடல் முதல் உள்ளம் வரை ஏதோ ஒன்றின்மேல் பசியோடு இருந்து கொண்டேதான் இருக்கும் அந்த லவுகீக தேடலை நிறுத்திவிட்டால்…
இப்படி ஆசை உணர்வுகளும் எதிர்பார்ப்பும் தேடலும் இல்லா ஞான பெருநிலையில் மனதை பக்குவபடுத்திவிட்டால் அம்மனதில் சிவனும், பெருமாளும், பிரம்மனும் வருவார்கள்
சிவலோகம், வைகுண்டம் , பிரம்மலோகம் எனும் எல்லாமுமாக அந்த மனதில் குடியேறி, அவ்வுஉடல் தெய்வீகதன்மை அடைந்து ஜொலிக்கும் என்பது பாடலின் பொருளாகும்