இந்துஸ்தானம் என்றும் இந்தியா என்றும் இத்தேசம் அறியபட்டது, அதன் மதம் இந்து என்றும் அறியபட்டது

இந்தியா என்றொரு தேசமில்லை, இந்துமதம் என்றொரு மதமில்லை என சொல்லும் கும்பல் எக்காலமும் உண்டு

உலகின் பழங்கால நாகரீகமும் கலாச்சாரமும் கொண்ட இனங்கள் வெகுசில, அப்படி இருந்த நாடுகளில் எகிப்து, மெசபடோமியா என பல இருந்தன, இவையெல்லாம் மிக பழமையான காலங்கள் அப்பொழுது யூதமதம் கூட இல்லை

அக்காலத்தில் எகிப்தியருக்கு எகிப்திய மதம் பண்டைய மத‌ சாயலில் இருந்திருக்கின்றது, மெசபடோமியா பக்கம் அந்த ஆதிமதம் இருந்திருக்கின்றது, கிழக்காசியா எங்கும் அந்தமத சாயல் சாயல் இருந்திருக்கின்றது

மெசபடோமியாவின் மதம் அப்பக்கம் பல இடங்களில் பரவி துருக்கி எல்லையினை தொட்டு கிரேக்கம் வரை நின்றது

பின் அந்தந்த நாடுகளின் பெயரில் அல்லது அந்த பகுதியின் பெயரால் அறியபட்டது அப்படி எகிப்திய மதம் மெசபடோமியா மதம் என்றெல்லாம் அடுத்தவர்களால் அழைக்கபட்டது

இக்காலத்தில் இந்துஸ்தானத்தில் இருந்த அந்த மதம் இந்துமதம் என்றே அழைக்கபட்டது.

பின்னாளில் மெசபடோமியா, சிரியா, எகிப்து,கிரேக்கத்தில் ஒரு சிந்தனை எழுச்சி ஏற்பட்டது அவர்களுக்குள் அடிக்கடி மோதல்களும் எழுந்தன

எகிப்தும், மெசபடோமியாவும் கிரேக்கமும் அந்த பகுதிக்குள் தங்களுக்குள் மோதின, மெசபடோமியா பக்கம் பாரசீக அரசுகள் எழுந்து நின்றன‌

( இக்காலத்தில்தான் யூதேயா எனும் நாட்டில் வாழ்ந்தோர் யூதர் என்றானார்கள், அந்த இஸ்ராயேல் எனும் கானான் நாட்டின் 12 பிரதேசங்களில் ஒன்றுதான் யூதேயா

கானான் என்பது பின்னாளில் பாலஸ்தீனம் ஆயிற்று )

இக்காலத்தில் இந்துஸ்தானம் என்றும் இந்தியா என்றும் இத்தேசம் அறியபட்டது, அதன் மதம் இந்து என்றும் அறியபட்டது

எகிப்துமதம் எகிப்திய மதம் என்பது போல, கிரேக்கமதம் கிரேக்கம் என்பதுபோல, இந்துஸ்தான மதம் இந்துவானவது

கிரேக்க அலெக்ஸாண்டர் பாரசீகர்களை வென்றதும் இந்தியா நோக்கித்தான் ஓடிவந்தான் இது அவன் வரலாற்றிலே இருக்கின்றது, அவனுக்கு பின் ஆப்கானை ஆண்ட செலுகஸ் நிகேடார் தன் தூதன் மெகஸ்தனிஸை அன்றைய இந்திய அரசன் சந்திரகுப்தனிடம் அனுப்பினான்

அந்த மெகஸ்தனிஸ் எழுந்திய நூல் “இந்தியா” கிரேக்க மொழியில் “இண்டிகா”

பைபிளில் கூட அலெக்ஸ்டாண்டரை சொல்லும் போது அந்நூல் இந்துநாடு தொடக்கம் மாசிடோனியாவரை என்றுதான் அவன் பேரரசை குறிக்கின்றது

கிரேக்கருக்கு பின் ரோமர்கள் எழும்பினார்கள், ஆனால் நிலம் வழியாக இந்தியாவுக்குள் வரமுடியாபடி கிரேக்க அரசுகள் ஆங்காங்கே இருந்ததால் கடல்வழி தென்னிந்திய பக்கம் வந்தார்கள்

அப்பொழுதும் இந்நாடு இந்துஸ்தானம் என்றும் இந்த மதம் இந்துமதம் என்றுதான் அழைக்கபட்டது, இதுபற்றிய தரவுகள் இப்பொழுதும் ரோமில் உண்டு, ஆனால் ரகசியமான குறிப்பில் உண்டு

இக்காலத்தில்தான் இயேசுபிரான் அவதரித்து அந்த மதம் மேற்கே வேகமாக வளர்ந்தது, கிழக்கே இந்தியாவின் கேரள கடற்கரையில் லேசாக தொட்டது ஆனால் அதை தாண்டி பரவவில்லை, தமிழக பக்கமெல்லாம் வரவில்லை

அடுத்த 600 ஆண்டுகளில் கிறிஸ்தவம் ஐரோப்பாவினை விழுங்கி நிற்க அரேபியாவில் நபிபெருமான் அவதரித்து அந்த அமைதி மார்க்கத்தை உருவாக்கினார்

இக்காலத்தில் இந்துஸ்தானம் அந்நியர் தொல்லையின்றி அமைதியாக இருந்தது அதன் வளமும் செல்வமும் உன்னதமாய் இருந்தது

யுவான் சுவாங், பாகியானெல்லாம் ஓடிவரும் தேசமாய் இருந்தது, இயற்கையிலே கடலும் மலையும் பெரும் ஆறும் கொண்ட பாதுகாப்பான தேசமாய் இருந்தது

அந்த 12ம் நூற்றாண்டில் ஐரோப்பியருக்கு இந்தியா சீனாவுடனான வியாபாரத்தை இணைக்கும் பட்டுசாலை சுல்தான்களால் மூடபட அந்த வியாபார பகை மத ரீதியான மோதலாயிற்று

ஐரோப்பாவில் இருந்த போப் அப்பொழுது அரசர் போல இருந்தார் இதனால் பெரும் போரை தொடங்கினார்

அதே நேரம் இக்காலத்தில் ஆப்கானியர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ தொடங்கி இந்துஸ்தானத்தை ஆள்வது யார் என போட்டி போட்டு கொண்டிருந்தனர் இந்துக்களும் அதை எதிர்த்து போராடினார்கள்

பவுத்தம், சமணம் என பெரும் போராட்டத்தை முடித்து இந்துமதம் மீண்டிருந்த இந்துஸ்தானம் அவர்களோடு போராடி கொண்டிருந்தது

அப்பொழுது இந்துஸ்தானத்தில் இந்து அரச்களும் சுல்தானியங்களும் மாறி மாறி எழுந்தன, 12ம் நூற்றாண்டில் உலகை தாக்கிய செங்கிஸ்கான் எனும் பெரும் அலையில் எல்லோரும் ஒதுங்கி நின்றுகொண்டார்கள்

பின் 15ம் நூற்றாண்டின் மத்திய‌ கட்டத்தில் மொகலாய மன்னர்கள் “இந்துஸ்தான் அரசர்கள்” என முடிசூட்டி கொண்டார்கள்

அராபிய சுல்தான்களும் பின் செங்கிஸ்கானும் அதன் பின் மறுபடி சுல்தான்களும் அராபியாவில் வலுத்து நிற்க கடல் வழி இந்தியா தேடி ஆளாளுக்கு ஐரோப்பியர் கிளம்பினார்கள்

அப்படி தேடும்பொழுது கொலம்பஸ் “இந்தியா” எனும் தேசத்தை தேடித்தான் மேற்கே சென்று அங்கு மேற்கு இந்தியாவினை அறிவித்தான்

வாஸ்கோடகாமா இந்தியாவின் கள்ளிகோட்டையினை அடைந்து முயற்சியில் வென்றான்

அதன் பின்பும் “கிழக்கு இந்திய” கம்பெனி என்றுதான் கம்பெனிகள் பெருகி கிழக்கு நோக்கி வந்தன , பின் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசராக பிரிட்டன் அரசகுடும்பம் முடிசூடிற்றிற்று

காமா இந்தியாவினை தேடிவரும்பொழுதே “கிழக்கு இந்திய கம்பெனி எனும் பெயரோடுதான் வந்தான், இந்த மதம் இந்துதம் என என்றோ சொல்லபட்டதத்தான் அவனும் சொன்னான்

அக்காலத்தில் இருந்து பிரிட்டிசார் வரும் காலம் வரை இது இந்தியாதான், இதன் மதம் இந்துமதமேதான்

வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்றோரெல்லாம் இந்தியாவுக்கு செல்கின்றோம் என்றுதான் போப்பிடம் அனுமதி கேட்டார்கள், கிழக்கிந்திய கம்பெனி கூட இந்தியாவுடன் வியாபாரம் செய்வோம் என்றுதான் பிரிட்டிஷ் அரசிடம் அனுமதி கோரிற்று

இங்கு இந்துஸ்தான் எனும் சொல்லும் இந்து எனும் சொல்லும் வரலாற்றின் தொடக்க காலத்திலே இருந்தது

அதை பிரிட்டிசார் வந்துதான் சொன்னார்கள் அதன் பின்புதான் இது இந்தியா, இந்துமதம் என்றாயிற்று என்பததெல்லாம் அபத்தம், மடமை