ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 06″
மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம்.”
மருள் என்றால் மயக்கம் , ஆசை சூழ்ந்த மாய நிலை என பொருள்
மனமெல்லாம் இருக்கும் அந்த ஆசை மேகம், மயக்க மேகங்களும் புகையும் அறிவையும் ஞானத்தையும் சரியாக உணரமுடியாதபடி மறைத்து நிற்கின்றன, அந்த மயக்கத்தை அகற்றினால் சுத்தமாக அகற்றினால் பெரும் வெளியாய் இருள் அகன்ற ஒளிமிக்க இடம் தெரியும் என்கின்றது குறள்
மாதூ என்பது மாதவம் அல்லது ஞானபெருநிலையினை குறிப்பதுபெரும் ஞான நிலையில் மனதில் இருக்கும்
அந்த மயக்கம் அச்சம் ஆசை எனும் பெரும் மயக்க இருள்கள் அகலும் அங்கு அந்த பரம்பொருளின் ஜோதி தெரியும் என்கின்றார் ஒளவையார்அதாவது மனதின் ஆசை மேகங்களை தவத்தால் அகற்றினால் பரம்பொருள் எனும் சூரிய ஜோதியினை தெளிவாக தரிசிக்கலாம் என்பது பொருள்