பழமொழி நானூறு : 04

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந் நாடு
வேற்று நாடு ஆகா தமவே ஆம்; ஆயினால்,
ஆற்று உணா வேண்டுவது இல். 4

கற்கவேண்டிய நூல்களை கற்றவரே அறிவுடையவர்கள் அவர்கள் புகழ் நான்கு பக்கமும் பரவாத நாடே இல்லை, அவர்கள் எங்கு சென்றாலும் அந்நாடு அவர்கள் நாடாகவே தெரியுமே தவிர வேற்று நாடாக தெரியாது, இதனால் எந்நாட்டுக்கு சென்றாலும் உணவு பற்றிய கவலை இதர கவலைகள் எதுவுமில்லை

அதாவது இப்பாடல் “கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” எனும் பாடலின் தழுவல்

“மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு”

என மூதுரையில் சித்தர் ஒளவையார் சொன்னதன் இன்னொரு வடிவம்