400 ஆண்டுகளாக அனாதை இந்துக்களாக
தமிழகத்தில் ஏன் இவ்வளவு இந்து துவேஷம் ஆளாளுக்கு இந்து துவேஷமும் இந்து பாரம்பரியம் மேல் இவ்வளவு தாக்குதலும் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை
பிரிட்டிஷார் இந்த பாரத நாட்டை ஆளதொடங்கியபொழுது , மிக சிறிய எண்ணிக்கை கொண்ட அவர்களால் இந்த மாபெரும் நாட்டை ஆள்வதற்கு இங்கு சிக்கலும் மோதலும் அவசியம் என கண்டார்கள், வட இந்தியாவில் ஆப்கானிய வம்சாவழிக்கும் இந்துக்களுக்கும் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக இருந்தது அதனால் அங்கு அவர்கள் ஆட்சி நிலைக்க வழியாயிற்று
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அப்படி அல்ல இங்கு நிலமை அப்படி இருந்திருக்கவில்லை, இங்கு இந்து பெரும்பான்மையும் எந்த சிக்கலும் இல்லா பகுதியாய் இருந்தது, அதாவது பெரும் மோதல் இல்லை
ஆற்காடு நவாபுக்கு கப்பம் கட்டமுடியாது என இந்துக்கள் எதிர்த்தவேளைதான் பிரிட்டிசார் 17ம் நூற்றாண்டில் அரசியலுக்கு வந்தாலும் இங்கு 15ம் நூற்றாண்டில் இருந்தே கடற்கரையில் ஐரோப்பியர் பிடி இருந்தது
எனினும் வலிமையான நாயக்கர்களும் இன்னும் இந்து அரசுகளும் இருந்ததால் அவர்களால் பெரும் மதமாற்றம் செய்ய முடியவில்லை
வடக்கே பிரிட்டிசாருக்கு கோட்டை கிடையாது, கோவாவில் போர்ச்சுகீசியரும் மராட்டியரால் அடக்கிவைக்கபட்டனர், வங்கத்திலும் ஐரோப்பியரால் ஏதும் அப்பொழுது செய்திருக்கமுடியவில்லை
இப்படிபட்ட நிலையில் 18ம் நூற்றாண்டில் ஆட்சி பிரிட்டிசாரிடம் செல்ல தமிழகம் போன்ற பகுதிகளில் ஏதாவது ஒரு அவசிய குழப்பம் பிரிட்டிசாருக்கு தேவைபட்டது
அமைதியான தமிழகம் அதுவும் இந்துக்கள் நிரம்பிய தமிழகத்தில் பிளவு செய்ய வேறு வழி இல்லை என்பதால் இந்த இந்து எதிர்ப்பு கருவிகளை ஏவிவிட்டனர்
இவர்களோடு இங்குவலுவாக இருந்த மதமாற்றிகளும் சேர்ந்து கொண்டார்கள்
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது தீவிரமானாலும் சுந்தந்திர போராட்டத்தால் அதிகம் தெரியவில்லை எனினும் குரல்கள் எழுந்தன
இந்துமதம் பிராமணரை ஒழித்தால் சரியும் என்பதால் அந்த இனம் குறிவைத்து அடிக்கபட்டது, எத்தனையோ கொடும்பழிகள் அவர்கள் மேல் சுமத்தபட்டன
தமிழக இந்துக்களை இந்திய இந்துக்களுடன் இணைக்கும் சமஸ்கிருதம் திட்டமிட்டுவெட்டபட்டது
19ம் நூற்றாண்டில் ராம்சாமி இதனை தன் பொறுப்பில் எடுத்து குழப்பத்தை தொடங்கினார், ஆச்சரியமாக தேசபக்தரெல்லாம் தரித்திரராகும் பொழுது ராமசாமி கோடீஸ்வரரானதும் தேசவிரோதம் இந்துவிரோதம் பேசுவோரெல்லாம் பணக்காராக வலம் வந்ததும் இப்பொழுதுதான் தொடங்கிற்று
ஆனால் சுதந்திரம் நெருங்கவும் ராமசாமியும் அமைதியானார், காரணம் சுதந்திர இந்தியாவில் இதெல்லாம் எடுபடாது என நம்பினார் அதில் உண்மை இருந்தது
ஆனால் நேருவின் அபரிமிதமான ஐரோப்பிய மோகத்தில் பிரிட்டிசாரின் பாணி அரசியலே நடந்தது அந்த ஆதரவில்தான் திமுக வளர்ந்தது, காமராஜரும் அதை தடுக்க நினைக்கவில்லை
இந்த இடத்தில்தான் சினிமா, ஊடகம் என எல்லாம் வளைத்த மதமாற்றிகளும் பிரிட்டிஷார் விதைத்த விதைகளும் வளர்ந்து எல்லா குழப்பமும் தொடங்கின
இதெல்லாம் புரட்சி, சமூகநீதி, தமிழ் உணர்வு என மடைமாற்றபட்டன ஆனால் மதமாற்றமும் இந்து ஒழிப்பும் சரியாக நடந்தது, இந்து ஆலயங்கள் பாழ்பட்டன
ஒரு கட்டத்தில் நிலமை எல்லை மீறி செல்ல யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை, பலவகை முகமூடிகளுடன் இவை ஆட்டமிட்டன
கல்வி நிலையம், ஊடகம், கட்சிகள் என எல்லாவற்றையும் வளைத்து அவை எல்லை மீறி ஆடின
ராஜாஜி, காமராஜர் இருந்தால் அரசபாடதிட்டத்தில் இந்துவெறுப்பை சொல்லமுடியாது, விஷத்தை விதைக்கமுடியாது என்பதால் அவை காமராஜரை வீழ்த்தி திராவிடம் எனும் தங்கள் முகமூடியினை அணிந்துகொண்டு ஆட்சி செய்தது
இது கிட்டதட்ட 400 ஆண்டுகால திட்டம் அதுவும் கடைசி 100 ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடந்தது
இந்துக்களை புழுவாக பார்ப்பதும் அனுதின மதமாற்றமும் போலி பாதிரிகளின் பணக்கார ஊர்வலமும்வந்தது, ஆளாளுக்கு போதகர்கள் உருவாகி மதமாற்றத்தை செவ்வ்வனே செய்தார்கள்
ஒரு சமூகத்தை மதம்மாற்ற குழப்பம் அவசியம், அதுவும் தீவிர இந்துக்களான தமிழர்களை மதம்மாற்ற பெரும் குழப்பமும் சீரழிவும் அவசியம்
அதை மதுகடை, சினிமா, பத்திரிகை என செய்து பின் டிவி சினிமாக்களில் செய்து அதையே அரசியலாக்கி தமிழக இந்துக்களை குழப்பி பெரிதாக ஆட்டமிட்டு ஆர்பரித்து மதம்மாற்றினார்கள்
இவர்களை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து சொத்துக்களையும் குவித்தன
இப்பொழுது பாஜகவின் எழுச்சியும் இந்து எழுச்சியும் இவர்களை அச்சுறுத்துகின்றன, அந்த பயத்தில் என்னென்னவோ பேசுகின்றார்கள்
காரணம் இந்தியாவின் பணக்கார ஆலயம் பெருமாளும் அல்ல, பெரும் பணக்காரர் அம்பானியும் அல்ல
உண்மையான பெரும்பணம் கிறிஸ்தவ சபைகளிடமும் அவர்கள் ஆலயங்களிலும் இருக்கின்றது, வெள்ள்ளையன் விட்டுசென்ற பெரும் சொத்து அது
அதை கொண்டுதான் தமிழகத்தில் அனைத்து குழப்பமும் நடக்கும், தேர்தல் முதல் போராட்டம் வரை விளையாடுவதெல்லாம் இந்த பணமே
சிறுபான்மை எனும் போர்வையில் பெரும் பணத்தோடு பதுங்கி அனைத்து குழப்பங்களையும் செய்வது இவர்களே
அந்த பெரும் பணமும் சொத்தும் இனி என்னாகும் கைவிட்டு போகுமோ எனும் கவலையில்தான் என்னவெல்லாமோ பேசி தூண்டிவிடபடுகின்றன
இந்து உணர்வும் இந்திய உணர்வும் பெருகிவிட்டால் தங்கள் சொத்தும் மதமாற்றமும் பறிபோகும் என அஞ்சுகின்றன இவைகள்
ஒருவகையில் இந்துக்களின் போர் தொடங்கிவிட்டது , 400 ஆண்டுகளாக அனாதை இந்துக்களாக இருந்த தமிழக இந்துக்களுக்கு இப்பொழுதுதான் அகில இந்திய இந்துக்களின் ஆதரவும் காவலும் கிடைத்திருக்கின்றது
இது ஒருவகையில் 400 ஆண்டுகால மிஷனரி சதியும் அடக்குமுறையும் உடையும் காலம் என்பதால் மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும், இது வெகு விரைவில் முடியாது ஆனால் சில ஆண்டுகளில் எல்லாம் மாறும், முழுமையாக மாறும்
மிஷனரிகள் திராவிட, தமிழ் முகமூடியில் என்னென்ன அட்டகாசமெல்லாம் செய்தார்கள் என்பது இனி ஒவ்வொன்றாக வெளிவரும்
அந்த செங்கல் உருவபட உருவபட எல்லாம் சரியும், அதன்பின் மிஷனரிகளின் கோரமுகமே எஞ்சியிருக்கும் அதுவும் தானாய் மறையும், சனாதான தர்மமும் பாரத கலாச்சாரமும் மேலோங்கும்